Saturday 29 March, 2008

ஆட்டம்



விரலை ..
நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?
நீட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டிக்கிட்டு தொழுவனுமா ?
ஆட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டம் … ..
முடிஞ்சுபோகும் முன்னாலே
முதலில் சொல்லுங்க
அப்புறம் ..
ஆட்டவே முடியாதபோது
பெரிய தொல்லைங்க.
கேட்டாலும் கேட்டீக ..
கேள்விகளை போட்டீக ..
வீட்டையுமே ரெண்டாக்கி
நாட்டையுமே ரெண்டாக்கி
போட்டியாக எங்களையும்
புறப்படத்தான் வச்சீக ..
இறப்பு ..

எப்ப வரும் ?
எங்கே வரும் ?
ஒண்ணும் தெரியலே !
எப்ப உங்க
விவாதம் தீரும் ?
எதுவும் புரியலே !
நமக்கு தொழுகை
நடக்கும் முன்னே
நாம தொழுவனும்
நாயனுக்கு நன்றியினை
நாளும் கூறணும்
தொழுபவனே
தொழ விடுங்க
அதுவே போதும்
அப்புறமா வச்சிக்குங்க
உங்க
விதண்டாவாதம்.
- அப்துல் கையூம்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP