Saturday 29 March, 2008

ஆன்மாவின் விபச்சாரம்



உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்
அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே

அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?

தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்

தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்

மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP