Monday 31 August, 2009

வாழ்நாள் சாதனையாளர் விருது

கடந்த 19.08.2009 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு, நாகூர் தர்கா உட்புற வளாகத்தில், சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர் விருதினை" நாகூர் தமிழ்ச் சங்கம் அளித்து கெளரவித்தது.

பாடகர் கலைமாமணி நாகூர் E. குல்முகம்மது இறைவணக்கப் பாடலை பாட கூட்டம் துவங்கியது.

தமிழ்ச் சங்கத்தின் நெறியாளர் புலவர் சீனி சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் விழா துவக்கவுரை ஆற்ற, சங்க நிர்வாகி டாக்டர் C,சோமசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

காரைக்கால் வானொலி நிலைய இயக்குனர் K.துரைசாமி, வழக்கறிஞரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான M.G.K.நிஜாமுத்தீன், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான கவிஞர் இஸட் ஜபருல்லாஹ், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலரும். சங்கத்து புரவலருமான கவிஞர் அப்துல் கையூம், கவிஞர் திட்டை அன்வர்தீன், சங்கத்து நெறியாளர் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், உமா நிறுவனங்களின் அதிபர் P.N.குப்புசாமி ஆகியோர் மகா வித்வானுக்கு பாமாலை/ புகழ்மாலை சூட்டினர்.

மகா வித்வானுக்கு கவிமாலை சமர்ப்பித்தவர் கவிஞர் மு. காதர் ஒலி. தன் குருநாதருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை அவரது முதன்மை சீடர் இசைமணி M.M.யூசுப் பகிர்ந்துக் கொண்டார். கவிஞர் இதய தாசன் எழுதி, இசைமணி மெட்டமைத்து குருநாதரைப் புகழ்ந்துப் பாடிய பாடல் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

நாகூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் M.G.K.முஹம்மது ஹூசைன் மாலிம் செயலாற்றிய இந்த நல்ல முயற்சியினை அனைவரும் வியந்து போற்றினர். சங்கீத வித்வானுக்கு அவர் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க, அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேலான அவரது அபிமானிகள், சீடர்கள், ரசிகர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பெரிய திரையில் மலரும் நினைவுகளாக வித்வான் 18 ஆண்டுகட்கு முன் நாகூரார் தர்பாரில் நிகழ்த்திய நிகழ்ச்சியினை அழகுற வடிவமைத்துத் தந்தவர் நாகூர் தர்கா வித்வானின் புதல்வர் S.M.A.K. நூர் சாதிக்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிவரை இருந்து சிறப்பான சொற்பொழிவாற்றி விருது வழங்கி கெளரவித்தவர் நாகை மாவட்ட ஆட்சியர் திருமிகு ச.முனியநாதன் இ.ஆ.ப. அவர்கள்.

நன்றியுரையை கவிப்புயல் நாகூர் இதயதாசன் வழங்க கூட்டம் இனிதே முடிவுற்றது.

இவரது பாடல்களைக் கேட்க

மறைந்த பிரபல தென்னிந்திய பாடகர் காயல் ஷேக் முகம்மது நாகூர் தர்கா விதவான் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்களின் மானசீக சீடர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP