<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074</id><updated>2011-08-30T19:24:03.951-07:00</updated><category term='அப்துல் கையூம் கவிதைகள்'/><category term='கவிஞர் நாகூர் சலீம்'/><category term='நாகூர் ஹனீபா'/><category term='மலேயா நாட்டு சரித்திரம்'/><category term='ஜபருல்லா கவிதைகள்'/><category term='இஸ்லாமும் தமிழிலக்கியமும்'/><category term='நீதிபதி மு.மு.இஸ்மாயீல்'/><category term='வாழ்நாள் சாதனையாளர் விருது'/><category term='பவுனு பவுனுதான்'/><category term='நாகூர் புலவர் ஆபிதீன்'/><category term='கவிக்கோ கவிதைகள்'/><category term='நாகூர் வரலாறு'/><category term='திண்ணையில் அப்துல் கையூம்'/><category term='நாகூர் வட்டார மொழி'/><category term='கவிஞர் ஜபருல்லா'/><category term='நாகூர் ரூமி கவிதைகள்'/><category term='குலாம் காதிர் நாவலர்'/><category term='புலவர் ஆபிதீன் கவிதைகள்'/><category term='துணுக்குச் செய்திகள்'/><title type='text'>நாகூரியின் பக்கங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>42</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-6939856060675743951</id><published>2009-10-09T15:13:00.000-07:00</published><updated>2009-10-09T15:24:55.516-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகூர் ரூமி கவிதைகள்'/><title type='text'>மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/Ss-17W6SP2I/AAAAAAAAAnM/7ZMIQ6CqXyg/s1600-h/Rumi.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 81px; height: 122px;" src="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/Ss-17W6SP2I/AAAAAAAAAnM/7ZMIQ6CqXyg/s200/Rumi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390727310352727906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகம்&lt;br /&gt;&lt;br /&gt;பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம்  அறிந்துகொள்ள வேண்டிய அரபு கவிஞர் மஆரி. எந்த காரணத்திற்காக உமர் கய்யாம் தனது நாட்டு பாரசீக மக்களிடம் ஆரம்பத்தில் பிரபலமாகவில்லையோ அதே காரணத்திற்காகத்தான் மஆரியும் தனக்கு முந்தைய &lt;br /&gt;கவிஞரான முதனப்பி-யைவிட பிரபலமடையவில்லை. ஏனென்றால் மஆரி கட்டுப்பாடுகள் எதையுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு சுதந்திரமான முஸ்லிமாக இருந்தார். பல தரப்பட்ட விஷயங்களையும் பரந்து விரிந்த ஒரு தத்துவார்த்த அடிப்படையில் உள்வாங்கக் கூடியதாக அவருடைய பகுத்தறிவு மனம் இருந்தது. அது ஒரு ஒழுங்கற்ற முறையில் இருந்தாலும். உமர் கய்யாமுடையதைப் போலவே மஆரியின் கலாச்சாரமும் பரந்துபட்டதாக இருந்தது. &lt;br /&gt;அவருடைய கவிதைகளை வாழ்வு, இறப்பு, மனித சமுதாயம், தத்துவம், சமயம் என பல பிரிவுகளில் ஆர்.ஏ. நிகல்சன் வகைப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கியமான விஷயத்தில் மஆரி உமர் கய்யாமிடமிருந்து வேறுபடுகிறார். அதாவது மஆரி ஒரு ஆன்மீக கவிஞராகவும் இருக்கிறார். உமர் கய்யாம் இந்த வாழ்வின் அவலங்களிலிருந்து தப்பிக்க புலன் இன்பங்களுக்குள் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொள்வார். ஆனால் மஆரியோ ஒரு துறவு நிலை ஞானியின் வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்வை வைத்து அவருடைய ஆளுமையின் இந்த அம்சத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே அவருக்கு கண் பார்வை போய்விட்டது. ஆனாலும் அவர் இதையும் மீறி வியக்கத்தகு முறையில் கல்வியைப் பெற்றுக்கொண்டார். எனினும் இந்த விஷயம் வாழ்க்கையின் மீது ஒரு கசப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கான வாழ்வையும் வளத்தையும் தேடி அவர் தன் இளம் வயதில் காவியப் பெரு நகரமான பாக்தாதுக்குச் சென்றார். ஆனால் அங்கு அவர் பெற்ற அனுபவங்கள் அவருடைய கனவுகளையெல்லாம் தகர்ப்பதாக இருந்தது. அவர் வாழ்வின் மீது கொண்டிருந்த கசப்புணர்வை அது பரிபூரணப்படுத்தவே உதவியது. இந்த விரக்தி நிலையின் காரணமாக மனிதனை வேதனையில் இருந்து காக்கின்ற வழி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் என்று கருதினார். அவருடைய வாழ்வின் பிற்பகுதி, படிப்பதும் எழுதுவதும் கற்றுக் கொடுப்பதுமாக கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரு உரை நடை தொகுதியையும் என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 99 குறிப்பிடுகிறது. அவை முறையே : 1. ஸக்த் அல் ஜந்த், 2. லாஸும் மாலம் யல்ஸம் அல்லது லுஸுமியத், 3. ரியாலத்தல் குஃப்ரான், 4. அல் ஃபுசுல் வல் கய்த். முதல் தொகுதி அவருக்கு புகழைத்தேடித் தந்தது. நான்காவது உரை நடைப் படைப்பு திருக்குர்ஆ 'னைக் கிண்டல் செய்யும் தொனியில் &lt;br /&gt;அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தியானங்கள் என்று நிகல்சனால் பெயரிடப்பட்ட படைப்புகள் மூலமாகவே மரியை மேற்கத்திய உலகம் அறிந்து கொண்டது. அதிகாரம், பாரம்பரியம் கியவற்றைவிட அறிவையும் மனசாட்சியையும் மேலாக நினைத்த ஒரு ஞானத்தெளிவு பெற்ற முஸ்லிமுடைய வாழ்க்கையின் மீதான மறைமுகமான விமர்சனமாக அவை இருந்தாலும் மிகவும் &lt;br /&gt;கூர்மையானதாகவும் சக்தியுடையதாகவும் செறிவு கொண்டதாகவும் இருந்தன அவருடைய கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்வரும் மொழி பெயர்ப்புகளில் சந்தம், எதுகை, மோனை, அளவு போன்ற விஷயங்களில் சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. சாறுகள் பழங்களாக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது கவிஞரின் சிந்தனை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு துரோகம் செய்யாத முறையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;&lt;br /&gt;மறுமையின் பெட்டிக்குள்&lt;br /&gt;ஆழப்புதைந்து காத்திருக்கின்றன நிகழ்வுகள்&lt;br /&gt;பாதுகாப்பு வானவர்கள்&lt;br /&gt;மூடியைத் தூக்குவதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை கவிதையாகக் கொண்டிருக்கும்&lt;br /&gt;நித்தியப் படைப்பாளன்&lt;br /&gt;நெய்ய வேண்டியதில்லை அதற்குள்&lt;br /&gt;புதுமையற்ற செயற்கையான சந்தத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே கழிகின்றன இரவுகள்&lt;br /&gt;குரல்கள் ஊமைகளாக.&lt;br /&gt;வேகமாகவோ மெதுவாகவோ&lt;br /&gt;வருவதென்னவென்று தெரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் விருப்பம் கொண்டு&lt;br /&gt;பாதுகாப்பாய்&lt;br /&gt;பாதைவிலகாமல் காலத்தின் முனைகள்&lt;br /&gt;இறங்குகின்றன நம்மீது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கொடுத்ததெல்லாம் கடனே&lt;br /&gt;திரும்ப எடுத்துக்கொள்ள;&lt;br /&gt;அவன் பரிசில் மகிழ்ந்து வாழ்கின்றன&lt;br /&gt;மனிதர்களின் முட்டாள்தனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை&lt;br /&gt;பிறப்பையோ முதுமையையோ வாழ்வையோ;&lt;br /&gt;நேற்று தரவிரும்பாத எதை இன்று தரப்போகிறது ?&lt;br /&gt;இங்குதான் நான் தங்கவேண்டும், விதியின் இரு கைகளாலும் கட்டப்பட்டு&lt;br /&gt;போகவும் முடியாது, போகச்சொல்லும் வரை.&lt;br /&gt;இருட்டு மாயையிலிருந்து எனக்கு வழிகாட்டும் நீங்கள்&lt;br /&gt;பொய் சொல்கிறீர்கள் - உங்கள் கதை குழப்பவே செய்கிறது&lt;br /&gt;மாற்ற முடியுமா நீங்கள் வெட்கமுடன் முத்திரை குத்துவதையெல்லாம் ?&lt;br /&gt;மாற்ற முடியாததால்தானே அவை அப்படி உள்ளன ?&lt;br /&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;&lt;br /&gt;சில இதயங்கள் லேசாக எடுத்துக்கொள்கின்றன கட்டளைகளை&lt;br /&gt;எனினும் யாருக்கு அழிவு என்று எவருக்குமே தெரியாது&lt;br /&gt;முஹம்மதின் குர்ஆனும், ஆமாம், மூஸாவின் தவ்ராத்தும்&lt;br /&gt;மர்யத்தின் மகனின் இன்ஜீலும் தாவூதின் ஸபூரும்&lt;br /&gt;அவை தடுத்தவை பற்றி தேசங்களுக்கு அக்கறையில்லை, &lt;br /&gt;அழிந்தது அவைகளின் அறிவு வீணாக, &lt;br /&gt;மக்களோடு சேர்ந்து.&lt;br /&gt;மனிதன் தங்க இரண்டு வீடுள்ளது, வாழ்க்கையோ&lt;br /&gt;நிற்காமல் கடந்து செல்லும் பாலத்தைப் போல் உள்ளது.&lt;br /&gt;வீட்டை விட்டுவிட்டு கல்லறையில் கூடுகிறது கும்பல் !&lt;br /&gt;இருப்பில் இருப்பதில்லை இல்லமோ இடுகுழியோ.&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாக காரிருளே கவிழ்ந்திருந்தது&lt;br /&gt;எந்த விடியலும் எழுப்பவில்லை ஒரு சூரியனை.&lt;br /&gt;எல்லாம் மாறுகிறது, இம்மை மட்டும் நிற்கிறது அசையாமல்&lt;br /&gt;தன் அனைத்து மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நிலங்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுகோல் இயங்க, கட்டளை நிறைவேறிவிட்டது&lt;br /&gt;உலர்ந்து விட்டது மை எழுதுதோலின்மீது, விதியின் விருப்பப்படி&lt;br /&gt;பாதுகாவலர்களால் காப்பாற்ற முடியவில்லை கிஸ்ராக்களை&lt;br /&gt;பிரபுக்களால் கல்லறையிலிருந்து சீசரை.&lt;br /&gt;&lt;br /&gt;5&lt;br /&gt;&lt;br /&gt;இஷ்டத்துக்கு சுற்றி வந்தவனை&lt;br /&gt;இடுகுழிக்குள் போ என்று ஒரு நாள் சொல்லுவது&lt;br /&gt;மனிதனுக்கு மிகவும் துன்பமானதே.&lt;br /&gt;எத்தனை முறை நமது பாதங்கள் மிதித்துள்ளன மண்ணுக்குக் கீழே&lt;br /&gt;பெருமை கொண்ட புருவத்தையோ மிருதுவானவரின் எலும்புகளையோ !&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;&lt;br /&gt;நான் வரவேற்கிறேன் இறப்பின் வருகையையும் புறப்பாட்டையும்&lt;br /&gt;தன் ஆடைகளினால் என்னை மூடிவைப்பான் என்பதால்&lt;br /&gt;இவ்வுலகம் எப்படிப்பட்ட இடமெனில்&lt;br /&gt;இங்கிருப்பவர் இருக்கும் அறிவனைத்தும் பெற்றால்&lt;br /&gt;அழமாட்டார் இங்கு இல்லாதவருக்காக.&lt;br /&gt;எண்ணிலடங்காத் துன்பங்கள் எத்தனை பேரை கொண்டுவந்தன&lt;br /&gt;தன் கைகளின் கீழும் நெஞ்சோடணைத்தும் !&lt;br /&gt;வகிர்ந்தெடுக்கிறது, வெட்டிச் சாய்க்கிறது தன் வாட்களைக் கொண்டு நம்மை&lt;br /&gt;வீட்டிலேயே நம்மை ஈட்டி கொண்டு குத்துகிறது,&lt;br /&gt;நிச்சயச் சிறகுகள் கொண்ட அம்புகளால்.&lt;br /&gt;செல்வமும் செல்வாக்குமாய் அதன் பரிசுகளை வென்றவர்கள்&lt;br /&gt;கொஞ்ச தூரம்தான் தள்ளி நிற்கின்றார்கள்&lt;br /&gt;பரிசுகளை இழந்தவர்களை விட்டும்.&lt;br /&gt;* * *&lt;br /&gt;என்ன வினோதம், எவ்வளவு விரும்புகிறான் மனிதன்&lt;br /&gt;துர் நாற்றத்தின் தாயை, திட்டிக்கொண்டே !&lt;br /&gt;&lt;br /&gt;7&lt;br /&gt;&lt;br /&gt;காலம் உன் வெற்றிக்கு உதவுமானால் விரைவில்&lt;br /&gt;உன் எதிரியையும் பழி தீர்க்க வைக்கும்.&lt;br /&gt;பகலின் உஷ்ணங்கள் எடுத்துக்கொள்கின்றன யுத்தத்தில் எஞ்சியதென&lt;br /&gt;ஈரவிடியல்கள் விட்டுச் சென்றதை.&lt;br /&gt;&lt;br /&gt;8&lt;br /&gt;&lt;br /&gt;ஓ தாமின் மகனே, போகும்போதே தங்கிக்கொள்கிறாய் நீ&lt;br /&gt;உறங்கியும் கொள்கிறாய் உனக்கான உறைவிடத்தில்,&lt;br /&gt;இரவு முழுவதுமான பயணத்தில்.&lt;br /&gt;இவ்வுலகில் தங்குவோர் அனைவருக்கும் உள்ளது லாபம் பற்றிய நம்பிக்கை&lt;br /&gt;எனினும் வாழும் மனிதர் அனைவரும் எப்போதும் நஷ்டவாளிகளே&lt;br /&gt;கிழக்கிலும் மேற்கிலும் எங்கு நோக்கினும் குருடர்கள்&lt;br /&gt;தாங்கள் சாய்ந்து கொள்ளும் கழிகளை சொத்தாக எண்ணிக்கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;9&lt;br /&gt;&lt;br /&gt;என் சைகளின் முத்துக்களை நான் கோர்க்கும்போது&lt;br /&gt;ஐயகோ, வாழ்வின் குறுகிய நூல் போதவில்லை.&lt;br /&gt;பெரிய பெரிய பக்கங்களும் போதவில்லை&lt;br /&gt;மனிதனின் முழு நம்பிக்கையையும் கொள்ள,&lt;br /&gt;மனித வாழ்வோ ஒரு மகாதொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;10&lt;br /&gt;&lt;br /&gt;பல இனங்களின்மீது பரவியது பகலவனின் வெளிச்ச வலை&lt;br /&gt;அவிழ்த்தது தன் முத்துக்களை, ஒரு நூல் கூட விட்டுவிடாமல்.&lt;br /&gt;இந்த பயங்கர உலகம் பரவசப்படுத்துகிறது,&lt;br /&gt;அவள் பெற்றெடுக்கும் அனைவரும்&lt;br /&gt;அநித்யக் கோப்பையிலிருந்தே குடித்தாலும்.&lt;br /&gt;கெடுதிகளின் தேர்வு : எது வேண்டும் உனக்கு ?&lt;br /&gt;மடிந்து வீழ்தலா வேதனையான வாழ்வா ?&lt;br /&gt;&lt;br /&gt;11&lt;br /&gt;&lt;br /&gt;தனது கேவலமான நோக்கங்களுக்காக&lt;br /&gt;ஏறுகிறான் மேடை&lt;br /&gt;மறு உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாவிடினும்&lt;br /&gt;கேட்போரை அச்சுறுத்துகிறான்&lt;br /&gt;நினைவுகொள்ளலை ஸ்தம்பிக்க வைக்கும் தன்&lt;br /&gt;கடைசி நாளைப் பற்றிய கதையை அவிழ்த்துவிடும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;12&lt;br /&gt;&lt;br /&gt;உன் சிந்தனை தூண்டிய நெருப்பு&lt;br /&gt;உன்னருகில் ஒரு பாதையைக் காட்டியது&lt;br /&gt;உன்னை வழி நடத்த&lt;br /&gt;ஒளியை நீ தேடிக்கொண்டிருக்கும்போது.&lt;br /&gt;வானசாஸ்திர வல்லுனர்களும், மந்திரவாதிகளும்,&lt;br /&gt;குறிசொல்பவர்களும் ஏமாற்றுக்காரர்கள்,&lt;br /&gt;இவரெல்லாம் மறைக்கின்றனர் நேர்மையற்ற சுயநலப் பேராசையை.&lt;br /&gt;வயசான பிச்சைக்காரனின் கைகள் நடுங்கினாலும்&lt;br /&gt;வாங்கிக்கொள்ள மறுப்பதில்லை எப்போதுமே.&lt;br /&gt;&lt;br /&gt;13&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியத்தை மறைக்கிறது செல்வம்,&lt;br /&gt;கிளம்பிவிடுகிறது வெளியில் குறைபாடுகளின் குரல்&lt;br /&gt;அனைத்துப் பிரிவுகளும் அகமகிழ்கின்றன&lt;br /&gt;அதற்கு மரியாதை செய்ய.&lt;br /&gt;முஸ்லிமுக்கு கிடைக்கவில்லை ஜகாத்&lt;br /&gt;பள்ளிவாசலை விட்டு செல்கிறான் பக்கத்து தேவாலயத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;14&lt;br /&gt;&lt;br /&gt;யார் காப்பாற்றுவார் என்னை&lt;br /&gt;பொருத்தமற்று புகழும் நகரத்தில் வசிப்பதினின்றும் ?&lt;br /&gt;பணக்காரன், பக்திமான், பண்டிதன் : இப்படிப்பட்டது எனது புகழ்&lt;br /&gt;எனினும் எனக்கும் அவற்றுக்கும் இடையில் எத்தனையோ தடைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைக்குக் கடன்பட்டிருந்தேன், அறிஞனாக அறியப்பட்டபோது&lt;br /&gt;சிலரால் - அதிவினோதமில்லையா என் நிலை ?&lt;br /&gt;உண்மையில் நாமனைவரும் உருப்படாதவர்கள்&lt;br /&gt;உன்னதமானவனல்ல நானோ அவர்களோ.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் இறுக்கமான பிடியை பொறுக்கமுடியவில்லை எனது உடம்பால்&lt;br /&gt;அழிவையும் எப்படி அணைக்க வைப்பது ?&lt;br /&gt;ஓ மரணத்தின் மாபெரும் பரிசுகளே ! அவன் கொண்டுவருகிறான்&lt;br /&gt;வலியின் பின் வசதியையும்&lt;br /&gt;சப்தத்தின் பின் நிசப்தத்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;15&lt;br /&gt;&lt;br /&gt;நின்று வணங்கு நாயனை நன் பகலில்&lt;br /&gt;பொறுத்துக்கொள் கவனிப்பை, முடியும்போது.&lt;br /&gt;உனக்குப் பிடித்த உணவை உன்&lt;br /&gt;தாராளக் குதிரைக்கும் தந்து சமபங்களிப்பதே சரியானது.&lt;br /&gt;மின்னும் எண்ணெயும் உலர்ந்த திராட்சையும்&lt;br /&gt;உனக்கு முன்னால் வைத்துக்கொள் உணவாக ..&lt;br /&gt;குறைவு என்றாலும் அதுவே நிறைவு.&lt;br /&gt;குடிப்பதற்கொரு களிமண் ஜாடி போதும்&lt;br /&gt;விரும்பாய் நீ வெள்ளியிலோ தங்கத்திலோ.&lt;br /&gt;கோடையில் &lt;br /&gt;உன் நிர்வாணம் மறைக்கும் துணிகளே போதும்; &lt;br /&gt;பருத்த நாட்டுத்துணி பனிக்காலத்துக்கு.&lt;br /&gt;நான் தடைசெய்கிறேன் நீ நீதிபதியாயிருப்பதை&lt;br /&gt;பள்ளிவாசல்களில் பிரசங்கமும் வேண்டாம்&lt;br /&gt;தொழுகையையும் நடத்த வேண்டாம்;&lt;br /&gt;தளபதியாகவும் வேண்டாம் சாட்டையுடன்&lt;br /&gt;வீரன் வெளிப்படுத்தும் வாளைப்போல.&lt;br /&gt;நெருங்கிய உறவினரிடமும் நல்ல நண்பரிடமும்&lt;br /&gt;நேசிக்கவில்லை நான் இவற்றை.&lt;br /&gt;இஷ்டப்படி செலவு செய் உனது ஆன்மாவை&lt;br /&gt;அல்லது காப்பாற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவமானமாயுள்ளது சிலரது ஆதரவு :&lt;br /&gt;ஒப்படைத்துவிடு உன்னை&lt;br /&gt;அவனது நித்திய அக்கறைகளிடம்&lt;br /&gt;அவனைப் பற்றிய பயங்களினால் அலங்கரிக்கட்டும்&lt;br /&gt;உன் மனைவி தன்னை&lt;br /&gt;முத்துக்களையும் மரகதங்களையும் மிஞ்சி மின்ன.&lt;br /&gt;அனைத்தும் புகழ்கின்றன அவனை :&lt;br /&gt;காகங்களின் கரைசலும் வெட்டுக்கிளியின் வாய்மொழியும்&lt;br /&gt;பறைசாற்றுகின்றன அவன் புனிதத்தை.&lt;br /&gt;அவை உனது கண்ணியத்தை&lt;br /&gt;எல்லாப்புகழும் உள்ள இடத்தில் :&lt;br /&gt;மலை நாட்டுக் காற்றைத் தேடும்&lt;br /&gt;பள்ளத்தாக்கில் வசிப்பவனல்ல அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;16&lt;br /&gt;&lt;br /&gt;இம்மையின் சிறப்புகள் வெளிப்படும் மனிதகுலமே -&lt;br /&gt;தலைவர்கள் தங்களுக்குள் நிறுவும் ஆட்சியெல்லாம்&lt;br /&gt;வளரும் அல்லது தேயும் நிலவின் காட்சிகள்தான்.&lt;br /&gt;பிள்ளைகளின்மீது கொண்ட பாசத்தை&lt;br /&gt;செய்கையினால் நிறுவமுடியுமெனில்&lt;br /&gt;ஞானத்தின் ஒவ்வொரு சொல்லும்&lt;br /&gt;பிள்ளை பெறாமலிருக்கச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;17&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விதிகள் நம்மை இறுக்கிப்பிடிக்கின்றன இன்னும்&lt;br /&gt;நாளையும் நேற்றும்&lt;br /&gt;இரு பெரும் பாத்திரங்கள் இறுகத்தழுவுகின்றன&lt;br /&gt;நம்மைச் சுற்றி - காலமும் இடமும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கியவனின் இலக்கு என்னவென&lt;br /&gt;இயம்பும்போதெல்லாம் நாம்&lt;br /&gt;கேட்கிறது ஒரு பதில் குரல்&lt;br /&gt;மனிதர்கள் சொல்லாத சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;18&lt;br /&gt;&lt;br /&gt;குற்றத்தை தண்டிப்பது தவறு&lt;br /&gt;குற்றவாளிகளாக விதிக்கப்பட்டிருப்பின்.&lt;br /&gt;தாதுப்பொருளை கடவுள் படைத்தபோது&lt;br /&gt;அவருக்குத் தெரியும் ஒரு காலத்தில்&lt;br /&gt;அவைகள் காரணமாகும்&lt;br /&gt;இரும்புச் சேணம் பூட்டப்பட்ட, &lt;br /&gt;இரும்பு லாடமடிக்கப்பட்ட&lt;br /&gt;குதிரைகளின் பிடரிகளிலிருந்து&lt;br /&gt;ரத்தத் துளிகள் சொட்டும் வாட்களாய் மின்னும் என.&lt;br /&gt;&lt;br /&gt;19&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகில் வடிவம் தரும் உடல்&lt;br /&gt;ஒரு ஜாடி; ஏமாந்து விடாதே ஆன்மாவே !&lt;br /&gt;நீ தேன் ஊற்றும் கோப்பை மலிவானது&lt;br /&gt;உள்ளே உள்ளதோ விலை மதிப்பற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;20&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கிறோம் நாம், நமது நகைப்போ நகைப்புக்குரியது.&lt;br /&gt;நாம் அழலாம், கடுமையாகவே&lt;br /&gt;கண்ணாடியைப் போல சிதறடிக்கப்படுகிற நாம்&lt;br /&gt;திரும்ப வடிவமைக்கப் படாமலே.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்புகள்&lt;br /&gt;-------------&lt;br /&gt;1. தவ்ராத், சபூர், இன் ஜீல், ஃபுர்கான்(குர் ஆன்) ஆகிய நான்கு வேதங்களும் முறையே தாவூது(டேவிட்), &lt;br /&gt;மூஸா(மோசஸ்), ஈஸா(மரியத்தின் மகன் என்று குர் ஆனில் குறிப்பிடப்படும் இயேசு கிறிஸ்து), முஹம்மது &lt;br /&gt;ஆகியவர்களுக்கு அருளப்பட்டதாக இஸ்லாம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. கிஸ்ரா - பாரசீக (ஈரான்) மன்னர்&lt;br /&gt;&lt;br /&gt;3. துர் நாற்றத்தின் தாய் - இந்த உலகம்.&lt;br /&gt;ஒருவரைத் திட்டும்போதோ புகழும்போதோ ஒன்றின் தந்தை என்றோ தாய் என்றோ சொல்வது அரபியரின் &lt;br /&gt;பழக்கம். முட்டாள் என்று திட்டுவதற்கு பதிலாக, அறியாமையின் தந்தையே (யா அபூ ஜஹில்!) என்பார்கள். &lt;br /&gt;ஒருவர் ரொம்ப தூசி படிந்த மேனியராக இருந்தால், தூசியின் தந்தையே (யா அபா துராப்!) என்பார்கள். &lt;br /&gt;அந்த முறையில்தான் இந்த உலகம் துர் நாற்றத்தின் தாய் என்று கவிஞரால் வர்ணிக்கப்படுகிறது. தந்தை என்பதும் &lt;br /&gt;தாய் என்பதும் காரணகர்த்தா, பிறப்பிடம் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஜகாத் - (முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான) ஏழை வரி.&lt;br /&gt;&lt;br /&gt;-- புது எழுத்து 7, 2003&lt;br /&gt;நன்றி திண்ணை / Thursday November 13, 2003&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-6939856060675743951?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/6939856060675743951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=6939856060675743951' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/6939856060675743951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/6939856060675743951'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/10/973-1057.html' title='மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் &apos;தியானங்கள் &apos; கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/Ss-17W6SP2I/AAAAAAAAAnM/7ZMIQ6CqXyg/s72-c/Rumi.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-9132342455527988572</id><published>2009-10-06T13:54:00.000-07:00</published><updated>2009-10-06T14:02:07.581-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிக்கோ கவிதைகள்'/><title type='text'>தாயிப் நகரில் தாஹா நபிகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SsuwPcbI97I/AAAAAAAAAnE/xa1ZefmlcXM/s1600-h/Kavikko.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 87px; height: 132px;" src="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SsuwPcbI97I/AAAAAAAAAnE/xa1ZefmlcXM/s200/Kavikko.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389595158453483442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் பெருமான் -&lt;br /&gt;இல்லாமல் வாடிய &lt;br /&gt;ஏழை உலகம்,&lt;br /&gt;கேட்காமலேயே&lt;br /&gt;கிடைத்த அருட்கொடை !&lt;br /&gt;தட்டாமலேயே&lt;br /&gt;திறந்த கதவு !&lt;br /&gt;தேடாமலேயே&lt;br /&gt;தெரிந்த மூலிகை !&lt;br /&gt;&lt;br /&gt;இளமையில் பெற்றோரை&lt;br /&gt;இழந்த இவ்வனாதைதான்&lt;br /&gt;உலகுக்கே தாயாகி&lt;br /&gt;ஊட்டி வளர்த்தவர் !&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கத் தெரியாத – இந்தப்&lt;br /&gt;பாமர நபியிடம்தான்&lt;br /&gt;பள்ளிக் கூடங்களும் &lt;br /&gt;பாடம் பயின்றன&lt;br /&gt;இல்லை ..&lt;br /&gt;பல்கலைக் கழகங்களே&lt;br /&gt;பாடம் பயின்றன !&lt;br /&gt;&lt;br /&gt;கந்தல் அணிந்த - இந்தக் &lt;br /&gt;கருணைநபி கையால்தான்&lt;br /&gt;அம்மண உலகம்&lt;br /&gt;ஆடையைப் பெற்றது !&lt;br /&gt;&lt;br /&gt;பாலையில் முளைத்த - இந்த&lt;br /&gt;பசுமர நிழலில்தான்&lt;br /&gt;வெயிலும்கூட&lt;br /&gt;இளைப்பாற வந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏழையை&lt;br /&gt;ஈன்ற பின்னரே&lt;br /&gt;கிடக்காத புதையல்&lt;br /&gt;கிடைத்தது போன்று&lt;br /&gt;இந்த உலகம்&lt;br /&gt;இறுமாப் படைந்தது !&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் – இந்த&lt;br /&gt;மணிவிளக்கைக்&lt;br /&gt;கண்டபின்தான்&lt;br /&gt;விண்ணும்தன் சுடர்களுக்காய்&lt;br /&gt;வெட்கம் கொண்டது !&lt;br /&gt;&lt;br /&gt;வல்லூறுகளும் – இவர்&lt;br /&gt;வலைக்குள் குடிபுகுந்து&lt;br /&gt;வெள்ளைப் புறாக்களாய்&lt;br /&gt;விண்ணெங்கும் பறந்தன !&lt;br /&gt;&lt;br /&gt;உயர்மறை மகுடி – இவர்&lt;br /&gt;ஊதியதகைக் கேட்டவுடன்&lt;br /&gt;நாகத்தின் பற்களிலும்&lt;br /&gt;நல்லமுதம் ஊறியது !&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனி சாதி&lt;br /&gt;அறைகளில் கிடந்த&lt;br /&gt;மனித எழுத்துக்களை&lt;br /&gt;ஒரே வாக்கியமாக&lt;br /&gt;அச்சுக் கோர்த்து&lt;br /&gt;சகோதரத்துவ&lt;br /&gt;சமுதாயம் கண்டவர் !&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டால் புகழைப்&lt;br /&gt;பலர் பெறுவர் – ஆனால்&lt;br /&gt;பரமனின் நபியைப்&lt;br /&gt;பாடுவதால் நமது &lt;br /&gt;பாட்டுக்கல்லவா&lt;br /&gt;பெரும்புகழ் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று – அந்தத்&lt;br /&gt;தாயிப் நகரில்&lt;br /&gt;தாஹா நபிகள் !&lt;br /&gt;&lt;br /&gt;தாயிப் வாசிகளே !&lt;br /&gt;விந்தை மனிதர் நீர்!&lt;br /&gt;கல்லின் மீதுதான்&lt;br /&gt;பூவைத் தூவுவீர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்று&lt;br /&gt;(பூமான் நபியெனும்)&lt;br /&gt;பூவின் மீதல்லவா&lt;br /&gt;கல்லைச் சொரிந்தீர் !&lt;br /&gt;&lt;br /&gt;வெல்வதாக நினைத்தீர் !&lt;br /&gt;ஆனால் – தோற்றவர் நீங்களே !&lt;br /&gt;நீங்கள் வணங்கும்&lt;br /&gt;கற்களை அல்லவா&lt;br /&gt;கருணைநபி காலடியில்&lt;br /&gt;மண்டியிட வைத்தீர் !&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கற்கள்&lt;br /&gt;ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !&lt;br /&gt;பொறுமைக்குக் கிடைத்த&lt;br /&gt;இரத்தினப் பதக்கங்கள் !&lt;br /&gt;இறை சோதனையின்&lt;br /&gt;குங்கும முத்தங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;பொய்மையை எதிர்த்த&lt;br /&gt;வாய்மைத் தூதருக்கு&lt;br /&gt;ரணங்கள் தானே&lt;br /&gt;ஆபரணங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;அதோ பாருங்கள் !&lt;br /&gt;நீங்கள் எறிந்த கற்கள்&lt;br /&gt;பச்சை ரத்தம் &lt;br /&gt;படிந்து கிடப்பதை !&lt;br /&gt;காயங்கள் செய்த&lt;br /&gt;பிரச்சாரத்திற்குரிய&lt;br /&gt;பெரிய வெற்றி !&lt;br /&gt;அவை கூட&lt;br /&gt;மதம் மாறி விட்டன !&lt;br /&gt;&lt;br /&gt;தாயிப் வாசிகளே !&lt;br /&gt;கனிமரம் என்பதால்&lt;br /&gt;கல்லெறிந்தீரோ?&lt;br /&gt;கல்லடி பட்டால்&lt;br /&gt;கனி மட்டுமா உதிரும்?&lt;br /&gt;காய்கூட உதிருமே !&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;கல்லடிக்குக்&lt;br /&gt;கனிமட்டும் உதிர்ந்த&lt;br /&gt;கருணை மரத்தை&lt;br /&gt;வேறு எங்கேனும்&lt;br /&gt;கண்டவருண்டோ?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பெருமான்&lt;br /&gt;காயம்பட்டதோ&lt;br /&gt;அன்றொருநாள் !&lt;br /&gt;ஆனால் இரத்தமோ&lt;br /&gt;இன்றுமல்லவா வழிகிறது&lt;br /&gt;எங்களின் &lt;br /&gt;எழுதுகோல் வழியே !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிக்கோவைப் பற்றி கலைஞர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பாரதிக்கு தாசன்&lt;br /&gt;பாரதி தாசனென்றால் – அந்தத்&lt;br /&gt;தாசர்க்குத் தாசர் இவர்&lt;br /&gt;தமிழ்க் கவிதை பாடுவதில்&lt;br /&gt;குடமிட்ட தீபமிவர் – இனிமேல்&lt;br /&gt;குன்றிலிட்ட விளக்காவார் !&lt;br /&gt;புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்&lt;br /&gt;புகழ் மீட்டும் வீணையிவர் !”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மு. கருணாநிதி&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-9132342455527988572?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/9132342455527988572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=9132342455527988572' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/9132342455527988572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/9132342455527988572'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/10/blog-post.html' title='தாயிப் நகரில் தாஹா நபிகள்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SsuwPcbI97I/AAAAAAAAAnE/xa1ZefmlcXM/s72-c/Kavikko.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1969774512086880267</id><published>2009-09-16T17:06:00.000-07:00</published><updated>2009-09-16T17:09:39.968-07:00</updated><title type='text'>Day &amp; Night</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SrF-OzWus4I/AAAAAAAAAmE/473nHv852e4/s1600-h/Iravu.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 396px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SrF-OzWus4I/AAAAAAAAAmE/473nHv852e4/s400/Iravu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382221822453265282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SrF9-pwkRRI/AAAAAAAAAl8/dm12kzvem6A/s1600-h/Pagal.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 396px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SrF9-pwkRRI/AAAAAAAAAl8/dm12kzvem6A/s400/Pagal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382221544999372050" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-1969774512086880267?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/1969774512086880267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=1969774512086880267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1969774512086880267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1969774512086880267'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/09/day-night.html' title='Day &amp; Night'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SrF-OzWus4I/AAAAAAAAAmE/473nHv852e4/s72-c/Iravu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-5170340102649350366</id><published>2009-09-11T03:55:00.000-07:00</published><updated>2009-09-11T03:59:03.671-07:00</updated><title type='text'>மு.மேத்தாவின் கவிதை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/SqotReKqS7I/AAAAAAAAAl0/cM23OB3fkj0/s1600-h/Mehtha.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 138px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/SqotReKqS7I/AAAAAAAAAl0/cM23OB3fkj0/s200/Mehtha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5380162483026283442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய கொடியை&lt;br /&gt;உயர்த்திப் பிடித்துக் கொள்!&lt;br /&gt;எதற்காக&lt;br /&gt;அடுத்தவர் கொடிக்கம்பத்தை&lt;br /&gt;அறுக்கத் துடிக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய மார்க்கத்தில்&lt;br /&gt;பூக்களைத் தூவிக் கொள்!&lt;br /&gt;எதற்காக&lt;br /&gt;அடுத்தவர் மார்க்கத்தில்&lt;br /&gt;முட்களைப் பரப்புகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய படத்தை&lt;br /&gt;ஆணியில் மாட்டிக் கொள்!&lt;br /&gt;எதற்காக&lt;br /&gt;அடுத்தவர் படத்தின் மேல்&lt;br /&gt;ஆணி அறைகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய நிறைகளை&lt;br /&gt;ஊரெங்கும் சொல்லிக் கொள்!&lt;br /&gt;எதற்காக&lt;br /&gt;அடுத்தவர் குறைகளை&lt;br /&gt;ஆராய்ச்சி செய்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய தோட்டத்தில்&lt;br /&gt;வேலி போட்டுக் கொள்!&lt;br /&gt;எதற்காக&lt;br /&gt;அடுத்தவர் தோட்டத்தில்&lt;br /&gt;அத்து மீறுகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை எழுதுகிறாய்!&lt;br /&gt;பேரை எழுதுகிறாய்!&lt;br /&gt;எப்போது&lt;br /&gt;உண்மையில் நீ யாரென்று&lt;br /&gt;எழுதப் போகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தைச் சொல்கிறாய்!&lt;br /&gt;சாதியைச் சொல்கிறாய்!&lt;br /&gt;எப்போது&lt;br /&gt;மனிதன் என்று நீ&lt;br /&gt;சொல்லப் போகிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;“மனிதனைத் தேடி..” - மு. மேத்தா&lt;br /&gt;கவிதா பதிப்பகம், சென்னை-17&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-5170340102649350366?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/5170340102649350366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=5170340102649350366' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5170340102649350366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5170340102649350366'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/09/blog-post.html' title='மு.மேத்தாவின் கவிதை'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/SqotReKqS7I/AAAAAAAAAl0/cM23OB3fkj0/s72-c/Mehtha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-402898341831188568</id><published>2009-08-31T15:11:00.000-07:00</published><updated>2009-08-31T15:12:00.366-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பவுனு பவுனுதான்'/><title type='text'>பவுனு பவுனுதான்</title><content type='html'>கடந்த 19.08.2009 ஆம் ஆண்டு புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாகூர் தர்கா உட்புறம் திறந்த வெளி அரங்கில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;25.08.1952 - ஆம் ஆண்டு நாகூர் தர்கா வித்வான் என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று உணர்த்தியிருக்கிறது நாகூர் தமிழ்ச் சங்கம். பிறந்து இரண்டரை வயதான தத்தித் தவழுகின்ற இந்த குழந்தை 86 வயதான இந்த சங்கீத சாம்ராட்டினை வாழ்த்தியிருப்பது நமக்ககெல்லாம் பெருமை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் "Better Late than Never" என்பார்கள். இந்த பாராட்டு தாமதமாக வந்தடைந்தாலும் தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பது நமக்கு மட்டிலா மகிழ்ச்சி.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;யான் வாசித்தளித்த கவிதை இது :&lt;br /&gt;&lt;br /&gt;"சுவைப்போர்" நிறைந்த ஊர்&lt;br /&gt;இந்த ஊர் - என் சொந்த ஊர்&lt;br /&gt;ருசியைச் சுவைப்போரும்&lt;br /&gt;இசையைச் சுவைப்போரும்&lt;br /&gt;வசிப்போர் இந்த ஊர்&lt;br /&gt;&lt;br /&gt;"வாரரோ வாராரோ&lt;br /&gt;ஞானக்கிளியே"&lt;br /&gt;என்று பாடிய&lt;br /&gt;கானக்குயிலுக்கு&lt;br /&gt;வாழ்த்துப்பா பாட&lt;br /&gt;[பாப் (Pop) ஆட அல்ல]&lt;br /&gt;வாய்த்தமைக்கு&lt;br /&gt;வல்லோனை வணங்குகிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;சரீரம் தளர்ந்தாலும்&lt;br /&gt;சாரீரம் தளராத&lt;br /&gt;வீரியமிக்க&lt;br /&gt;ஆரிய வாசம் வீசும்&lt;br /&gt;ஸ்வரம் இவர் வசம்  - இது&lt;br /&gt;இறைவன் கொடுத்த வரம் !&lt;br /&gt;&lt;br /&gt;மரபிசைக்கு ஒரு ICON&lt;br /&gt;இந்த மேதகு மரைக்கான்&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு சங்கீதமும் தெரியும்&lt;br /&gt;இங்கிதமும் தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;பாடிப் பாடியே&lt;br /&gt;பாடி இப்படியே&lt;br /&gt;(இப்போது தான் Body இப்படி!)&lt;br /&gt;பணக்காரன் ஆனவர் இவர் !!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் .. .. ஒருகாலத்தில்&lt;br /&gt;பெரும் பணக்காரனாய் இருந்து .. ..&lt;br /&gt;பாடிப்பாடியே&lt;br /&gt;பணக்காரன் ஆனவர் !!!&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கிருந்த செல்வத்தில்&lt;br /&gt;மாளிகைகள் கட்டி இருக்கலாம்&lt;br /&gt;ஆனால் ..&lt;br /&gt;மாளிகைகள் ஒருநாளில்&lt;br /&gt;மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரிழைத்த&lt;br /&gt;- ராகமாலிகை&lt;br /&gt;- தாளமாலிகை&lt;br /&gt;என்றென்றும்&lt;br /&gt;எங்கள் காதுகளில்&lt;br /&gt;தேனாய் இனிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்கட்டுகளை காட்டிலும்&lt;br /&gt;தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் - வீட்டின்&lt;br /&gt;நடுக்கட்டில் இவர் பாடல்&lt;br /&gt;களைகட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு இன்னும்&lt;br /&gt;எத்தனையோ கோடிகள்&lt;br /&gt;இறுக்கமாய் உண்டு&lt;br /&gt;உண்மைதான் .. ..&lt;br /&gt;சிஷ்ய-கோடிகள் பலவுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டென்றாலே&lt;br /&gt;பலபேர் கத்துவான் - இந்த&lt;br /&gt;பாட்டுடைத் தலைவன்&lt;br /&gt;எல்லோருக்கும் வித்துவான்&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு மணியான சீடர்கள்&lt;br /&gt;many many - அதில்&lt;br /&gt;தலையாய சீடர்தான்&lt;br /&gt;இந்த "இசைமணி"&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மட்டும்&lt;br /&gt;ஐயர்வாளாய் இருந்திருந்தால்&lt;br /&gt;இந்நேரம்&lt;br /&gt;ஐநா வரை இவர் குரல்&lt;br /&gt;எட்டியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;நாகூரில் பிறந்ததினால்&lt;br /&gt;நாற்சுவரில் இவர் புகழ்&lt;br /&gt;அடங்கிப் போனதோ?&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டுத் தொழில்&lt;br /&gt;இவர் தொழில்.&lt;br /&gt;எத்தனை உள்ளங்களை&lt;br /&gt;இவர் குரல் இதுவரை&lt;br /&gt;கொள்ளை கொண்டிருக்கும்???&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கலப்படக்காரர் ..&lt;br /&gt;செய்ததோ முறையான கலப்படம்&lt;br /&gt;கலப்படத்தில் அதுவென்ன&lt;br /&gt;முறையான கலப்படம்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்துஸ்தானியையும்&lt;br /&gt;கர்னாடகத்தையும்&lt;br /&gt;கலப்படம் செய்தது&lt;br /&gt;நிருபணம்&lt;br /&gt;&lt;br /&gt;- பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்(&lt;br /&gt;- மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)&lt;br /&gt;- மோகனம்&lt;br /&gt;- சஹானா&lt;br /&gt;- சுபபந்துவராளி&lt;br /&gt;இவையனைத்தையும்&lt;br /&gt;ஒன்றாக இணைத்து&lt;br /&gt;பாடவல்ல வல்லமை&lt;br /&gt;இவருக்குள்ள பெருமை&lt;br /&gt;&lt;br /&gt;தர்பாரில்&lt;br /&gt;கானடா ராகம்&lt;br /&gt;இசைப்பவர் இவர்.&lt;br /&gt;ஆம் ..&lt;br /&gt;நாகூரார் தர்பாரில் !&lt;br /&gt;&lt;br /&gt;தலைக்கனமில்லா இவருக்கு&lt;br /&gt;ஆரோகணம் முதல்&lt;br /&gt;அவரோகணம் வரை&lt;br /&gt;அத்தனையும் அத்துப்படி&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தொடாத ராகமில்லை .. ..&lt;br /&gt;இவர் பாடாத புலவர்களில்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;- உமறுப் புலவர்&lt;br /&gt;- காசீம் புலவர்&lt;br /&gt;- காலகவிப் புலவர்&lt;br /&gt;- வண்ணக் களஞ்சியப் புலவர்&lt;br /&gt;- ஆரிபு நாவலர்&lt;br /&gt;- ஆபிதீன் புலவர்&lt;br /&gt;- பண்டிட் உசைன்&lt;br /&gt;- குணங்குடி மஸ்தான்&lt;br /&gt;- கலைமாமணி சலீம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் ..&lt;br /&gt;இவர் தொடாத ராகமில்லை .. ..&lt;br /&gt;இவர் பாடாத புலவர்களில்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;- கும்மிப்பாட்டு&lt;br /&gt;- குறவைப் பாட்டு&lt;br /&gt;- ஞானப் பாட்டு- சாஸ்திரிய&lt;br /&gt;கானங்கள் பாடியது பலநூறு&lt;br /&gt;இவரை இவ்வூர் பெற்றது&lt;br /&gt;நாம் செய்த பெரும்பேறு&lt;br /&gt;&lt;br /&gt;தாளம் அறிந்த இவரை&lt;br /&gt;ஞாலம் கண்டு கொள்ளாதது&lt;br /&gt;காலத்தின் கோலம்&lt;br /&gt;&lt;br /&gt;"சேதுசாரா" என்ற&lt;br /&gt;ஆதிதாள உருப்படி - இவரை&lt;br /&gt;உயரே கொண்டு சென்றது ஒருபடி&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டப்பா பயின்ற&lt;br /&gt;தாவுது மியான்&lt;br /&gt;இந்த காதருக்கு&lt;br /&gt;குருநாதர்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சபாக்களில்&lt;br /&gt;டிசம்பர் மாதமென்றாலே&lt;br /&gt;சங்கீதம் களைகட்டும்&lt;br /&gt;ஏன் தெரியுமா?&lt;br /&gt;எங்கள் பாகவதர்&lt;br /&gt;பிறந்த மாதம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;சமய நல்லிணக்கத்திற்கு&lt;br /&gt;இமயம்&lt;br /&gt;இச்சங்கீதச் சிகரம்.&lt;br /&gt;சமாதானத் தூதர்&lt;br /&gt;இந்த காதர்&lt;br /&gt;&lt;br /&gt;இவரை அழைப்பது&lt;br /&gt;பவுனு வீட்டுத் தம்பி.&lt;br /&gt;பவுனு பவுனுதான் !!&lt;br /&gt;&lt;br /&gt;ஏழிசை கற்ற இவரை&lt;br /&gt;வாழிய வாழியவென&lt;br /&gt;வாயார வாழ்த்துகிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;- அன்புடன் அப்துல் கையூம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஆரம்பகால கட்டங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் நாகூர் வருகை தந்தபோது எடுதத படம்&lt;br /&gt;ஆஸ்கார் நாயகனும் ஆஸ்தான பாடகனும்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம்  தேடி வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவர் புதல்வன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாப்பா!~ பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை போட வித்வானுக்கு வந்ததே கோவம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் ஜபருல்லாஹ்வின் பாஷையில் சொல்லப்போனால்&lt;br /&gt;“அட.. இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாகூரின் பொக்கிஷம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- நாகூர் ரூமி&lt;br /&gt;&lt;br /&gt;நாகூரின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். மதிக்க வேண்டியவர்களையும், மதிக்க வேண்டியவைகளையும் மதிக்காமல் போவதும், மதிக்கக் கூடாதவற்றையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும்தான் நாம் படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். அதை மாற்றி, நாகூர்த் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. அதற்காக முதலில் என் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் வந்து என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத என் சூழ்நிலைக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூருக்கென்று பல சிறப்புக்களுண்டு. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஆன்மிகம், இலக்கியம், இசை என்ற இம்மூன்றும். மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவைதான். அந்தக்  காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் ஆன்மிக இலக்கியங்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. குலாம் காதிர் நாவலர் அவர்களின்  ‘கன்ஜுல் கராமாத்' தொடங்கி, என்னுடைய ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்' என்ற நூல்வரையிலும் அந்த ஆன்மிக இலக்கிய பாரம்பரியம் நீள்கிறது. இன்னும் நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையைப் பொறுத்தமட்டில் நிறைய ஆளுமைகளை நாம் பார்க்க முடியவில்லை. இசையில் மிகப்பெரிய ஆளுமையாக முதலில் இருந்தது பெரிய எஜமான்தான். இதுகூட எனக்கு எனது இசை குருநாதர், என் நண்பர் நூர் சாதிக்கின் வாப்பா அவர்கள் சொல்லித் தெரிய வந்ததுதான். எஸ்.எம்.ஏ.காதர் என்று சட்டென்று பெயரைக் குறிப்பிட என் மனம் தயங்குகிறது. எனவே தேவைப்படும் இடங்களில் ‘எஸ்.எம்.ஏ.கே.' என்று குறிப்பிட அனுமதி கோருகிறேன். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட இரண்டு ஆண்டுகால நெருக்கமான அனுபவம் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒரு அருள் என்றுதான் நான் சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் கற்பூர வாசனை அறியாதவர்கள். இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில சிறந்த வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இசை என்பது என்னுடைய அனுபவம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒரு இசை மேதை என்பதை நான் புரிந்து கொண்ட, ஒவ்வொரு நாளும் அனுபவித்த காலகட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எம்.ஏ. படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த காலகட்டம் அது. ஒருநாள் நானும் நண்பர் பிலாலும் கடற்கரையில் அமர்ந்து இசை பற்றியும் பாடல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் சங்கீகதம் கற்றுக்கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை எனக்குள் ஏற்படுத்தினார். உடனே தாமதம் செய்யாமல் நேரே புதுமனைத் தெருவில் இருக்கும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் வீட்டுக்கு நாங்கள் சென்றோம்.&lt;br /&gt;அடடே, நீங்க ஷரீஃப் பே மாமாட பேரனாச்சே என்று சிரித்துக் கொண்டே சொன்னாலும், சங்கீதம் ரொம்ப கஷ்டமாச்சே என்றும் சொன்னார்கள். என்றாலும் ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும், ‘ஒரு நாள் போதுமா' பாடலைப் பாடிக் காட்டினேன். சொல்லிக் கொடுத்தால் எனக்கு சங்கீதம் வரும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். உடனே நல்ல நாள், நேரம் பார்த்து என்னை வரச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தொடங்கியது என் இசை வாழ்வு. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மூன்று மணி  நேரம் பயிற்சி. ஒவ்வொரு நாளும் ஒரு அல்லது இரண்டு கச்சேரிகள் செய்வது போன்ற களைப்பு அவர்களுக்கு ஏற்படும். தம்பூரா மீட்டப்பட்டுக்  கொண்டே இருக்க வேண்டும். ஸ்வரங்கள் சொல்ல வேண்டும். தப்பாமல் தாளம் போட வேண்டும். இப்படி நிறைய நுணுக்கமான விஷயங்கள் அதில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு ஆண்டுகள் பயின்றால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு பாடத்தை எனக்கு ஆறே மாதங்களில் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதில் சந்தோஷம் இருந்தது. எனக்கு ஆர்வம் இருந்தது. அவ்வப்போது சோட்டு மியான், நன்னு மியான், தாவுத் மியான் கான் ஆகியோரின் வரலாறுகளையும் எனக்கு சொல்லிக் காட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதற்கு பல காரணங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்று சொன்னால்  வடக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கமும், தெற்கில் பிராமண வித்வான்களின் ஆதிக்கமும்தான். ஷெனாய் என்றால் பிஸ்மில்லாஹ் கான், சரோத் என்று சொன்னால்  அலி அக்பர் கான், தப்லா என்று சொன்னால்  அல்லாஹ் ரக்கா அல்லது ஜாகிர் ஹுசைன் - இப்படித்தான் வடக்கில் பெயர்கள் இருக்கும். ஹிந்துஸ்தானி இசையில் வடக்கில் முஸ்லிம்களின் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. இன்னும் இருக்கிறது. தெற்கே கர்நாட இசை என்று சொன்னால் அது பெரும்பாலும் பிராமண வித்வான்களின் கையிலும் வாயிலும்தான் இருந்தது. மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் ரொம்பக் குறைவு. இதை நான் விமர்சனமாகச் சொல்லவில்லை. நடப்பு நிஜமாகச் சொல்கிறேன். மணி அய்யரிலிருந்து உன்னி கிருஷ்ணன் வரை இதுதான் உண்மை. சினிமா இசையில்கூட இளையாராஜாவுக்கு முன் அதுதான் உண்மையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு முஸ்லிம், அவர்களுக்கு இணையாக, சமயங்களில் அவர்களைவிட சிறப்பாக இசைத்துறையில் மின்ன முடியும் என்பது ஒரு அற்புதம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அற்புதத்துக்கு சொந்தக்காரர் என்னுடைய குரு ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் என்று சொன்னால் அது மிகையே அல்ல. இதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். எனக்குத் தெரியும். அவர்களுடைய குருநாதர் தாவூத் மியான் அவர்கள் கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானியிலும் வல்லுணர். எனவே ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும் இரண்டிலுமே பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். மிக விரிவாக என்னால் பேச முடியும் என்றாலும் கேட்பவர்களுக்கு இசை ஞானம் இல்லாதிருப்பின் புரியாமல் போகக்கூடும் என்ற அச்சத்தால் ஒரு சில உதாரணங்களை மட்டும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் கச்சேரி எங்கே நடந்தாலும் நானும், நண்பர்கள் பிலாலும் ஆபிதீனும் போய் முடியும்வரைக் கேட்போம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களுடைய ஸ்வர ஞானமும் தாளம் பிசகாத பாடலும் எங்களுக்கு மட்டுமல்ல, இசை அறிந்தவர்களுக்கும் பிரமிப்பு ஊட்டக்கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, ஸ்வரம் பாடுவதில் முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என்று ஒரு கணக்கு உண்டு. ஒரு பாடலுக்கு ஸ, க, ரி, க என்று நான்கு ஸ்வரங்களை ஒரு தாளத்தில் முதல் காலத்தில் பாடினால், அடுத்த காலத்தில், அதே தாளத்தில், அதாவது அதே நேரத்துக்குள், எட்டு ஸ்வரங்களைப் பாடவேண்டும். மூன்றாம் காலத்தில் அது பன்னிரண்டாக இருக்க வேண்டும். இது ஒரு பாரம்பரிய சங்கீத கணக்கு. இந்த கணக்கின்படி இன்றைக்கு மூன்று காலத்திலும் பாடும் ஒரு வித்வான்கூடக் கிடையாது.  ஒரே ஒருவர்தான் உண்டு. அது எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் மட்டும்தான் என்று நான் அடித்துக் கூறுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பால முரளி கிருஷ்ணா, பீம்ஷன் ஜோஷி, ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், எம். எஸ்., சுதா ரகுநாதன் என்று பலருடைய பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுள்ளேன். மிகத்துரிதமாகப் பாடும் மூன்றாம் காலத்தில் யாருமே பாடுவதில்லை. காரணம் அது அவ்வளவு கடினமான சாதகம் என்பதுதான். இந்தக் காலத்து வித்வான்கள் எல்லாருமே ஃபாஸ்ட் ஃபுட் மாதிரியான வித்வான்கள்தான். நான் மேலே சொன்ன யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒவ்வொரு கச்சேரியிலும் கொடுக்கும் அந்த துரித கால இசையனுபவத்தை அவர்கள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதுவரை சொன்னதற்கு நேர் மாறான ஒரு திறமையும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் நான் கண்டேன். அதுதான் தாளக்கட்டு பின்னோக்கிப் போய்க் கொண்டே இருப்பது. வரையறை செய்யப்பட்ட தாள கதியில் ஒவ்வொரு காலத்துக்கும் தாளம் பின்னால் போய்க்கொண்டே இருப்பதைப் போன்றது இது. இதை வார்த்தைகளில் என்னால் விளக்க முடியவில்லை. ஆனால்  பல முறை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் இப்படிப் பாடும்போது வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் தங்களால் வாசிக்க முடியவில்லை என்று கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கேட்டுவிட்டு வாத்தியங்களைக் கீழே வைத்ததை நான் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் நாகூருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். ஆனால் அவர்கள் முஸ்லிமாக இருந்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடக்காமல் போய்விட்டது துரதிருஷ்டமே. இஸ்லாத்தில் இசை கூடாது, கோயில்களில் பாடக்கூடாது என்றெல்லாம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சாதனையின் உச்சத்துக்குப் போகமுடியாமல் அவர்களைத் தடுத்துவிட்டன என்பதுதான் உண்மை. இல்லையெனில், ஒரு ஏ.ஆர்.ரஹ்மானை  இந்த உலகம் அறிந்திருப்பது மாதிரி சங்கீத உலகம் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களையும் கொண்டாடி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வேலை கிடைத்துவிட்ட காரணத்தினால் சங்கீதப் பாடங்களைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஒரு நாள் நானும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும், அவர்களுடைய பேரர் ராஜாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது நான் வர்ணம் என்ற பாடம் வரை வந்திருந்தேன். அடுத்தது ராகம்தான். அவர்கள் இல்லாமலே நான் எப்படி மேலும் கற்றுக்கொண்டு அப்பாடங்களைத் தொடர்ந்து வித்வானாவது என்று அன்று ராகங்களுடைய அடிப்படைகளையெல்லாம் ஆரோகரணம், அவரோகணத்தோடு அவர்கள் பாடிக்காட்டினார்கள். என் நண்பர் பிலால் சிறப்பான முறையில் அதைப் பதிவு செய்தார். அந்த ஒலிநாடா என்னிடம் இன்னும் உள்ளது. அதைப் போன்ற ஒரு காரியத்தை வேறு யாரும் செய்ய முடியாது. நான் இதை ஒரு சவாலாகவே இங்கே சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற மரியாதையை செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மால்கோஸ் ராகம் பாடச் சொல்லி தாவூத் மியானின் கால் வியாதியைக் குணப்படுத்திய பெரிய எஜமான் வாழும் இந்த ஊரில் எஸ்.எம்.ஏ.கே. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களைக் கௌரவப்படுத்தும் இந்த முயற்சியானது சரியானதும், பாராட்டத்தக்கதும், நமது கடமையும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;SMA காதர் என்று அவர்கள் அறியப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். SMA என்பதை ‘சங்கீத மேதை ஆன' என்பதன் சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம். SMA காதர் என்றால் ‘சங்கீத மேதையான' காதர் என்று பொருள். ஆங்கிலத்திலேயே சொல்ல  வேண்டுமெனில், Sacred-music Master Artist காதர் என்று சொல்லலாம். ஏனெனில் இஸ்லாமிய வரலாற்றையும், இஸ்லாத்தின் புகழையும் பரப்ப கர்நாடக சங்கீதத்தைப் பயன்படுத்திய மேதை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒருவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய எல்லா எல்.பி. ரெகார்டுகளும், கேஸட்டுகளும் சேகரிக்கப்பட்டு வலைத்தளத்தில் ஏற்றப்பட்டு இந்த உலகமே கேட்டுமாறு வழிவகை  செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை கையூம், ஆபிதீன் போன்ற இணையம் அறிந்த நண்பர்கள் செய்யலாம். நானும் அதில் நிச்சயம் உதவுவேன். தமிழ்ச்சங்கம் அதற்காக பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நேரில் வரமுடியாவிட்டாலும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் காலைத் தொட்டு மரியாதை செய்து அவர்களின் ஆசி பெற்றவனாக இதை முடித்துக் கொள்கிறேன். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் ரூமி&lt;br /&gt;டாக்டர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி&lt;br /&gt;ஆங்கிலத் துறைத்தலைவர்&lt;br /&gt;மஜ்ஹருல் உலூம் கல்லூரி&lt;br /&gt;ஆம்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டி : இசையும் இறைவனும்&lt;br /&gt;&lt;br /&gt;                                                     அவரோகணம்&lt;br /&gt;&lt;br /&gt;                                                    இஸ்லாத்தில் கவிதை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அட.. இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;- கவிஞர் இஜட். ஜபருல்லாஹ்&lt;br /&gt;வாழ்க்கையை எல்லோருக்கும்&lt;br /&gt;பகிர்ந்து கொடுத்துவிட்டு&lt;br /&gt;இசையை மட்டுமே –&lt;br /&gt;சொத்தாய் வைத்துக் கொண்ட&lt;br /&gt;இவர் – மனிதனுக்கும் மேலே..!&lt;br /&gt;இதனால்தான் என்னவோ?&lt;br /&gt;இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு&lt;br /&gt;கிராமபோஃன் பெட்டியை&lt;br /&gt;பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வீட்டில்&lt;br /&gt;வெள்ளித் தட்டுகள்&lt;br /&gt;உணவு மேசையில்&lt;br /&gt;சாதாரணமாய் கிடக்கும்..!&lt;br /&gt;இசைத்தட்டுகள் மட்டும்&lt;br /&gt;பூட்டிய அல்மாரிக்குள்&lt;br /&gt;பத்திரமாக இருக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;அட இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;“மனைவிக்கு மரியாதை”&lt;br /&gt;இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..&lt;br /&gt;“வாங்க.. போங்க.. என்னங்க..&lt;br /&gt;சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”&lt;br /&gt;இவைகள் எல்லாம் – இவரின்&lt;br /&gt;இல்லற அகராதியில் –&lt;br /&gt;மனைவியுடன் பேசும்&lt;br /&gt;அன்பில் தோய்ந்த சொற்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் –&lt;br /&gt;நல்ல குடும்பத் தலைவர்&lt;br /&gt;நல்ல கணவர் ..&lt;br /&gt;நல்ல தந்தை .. மட்டும் அல்ல..&lt;br /&gt;நல்ல நடத்தைகளை&lt;br /&gt;சொல்லிக் கொடுத்த ஆசான்..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தங்கம்..&lt;br /&gt;அதனால்தான் இவர் பிள்ளைகள்&lt;br /&gt;வைரமாக ஜொலிக்கிறார்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;அட.. இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;இவர் - சட்டக் கல்லூரிக்குப் போகாத&lt;br /&gt;நீதிபதி..!&lt;br /&gt;இவரின் “நடுக்கட்டு சபை”&lt;br /&gt;நாகூரில் பிரபலம்.&lt;br /&gt;இது – கோர்ட்டு அல்ல ..&lt;br /&gt;சான்றோர் சபை..!&lt;br /&gt;இதில் – சட்டம் பேசாது..!&lt;br /&gt;நீதி – சொல்லும்..!&lt;br /&gt;தர்மம் – தீர்ப்பு வழங்கும்..!&lt;br /&gt;“மேல் முறையீடு”&lt;br /&gt;இன்றுவரை இல்லை..!&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்திகள் சச்சரவு&lt;br /&gt;சொத்துப் பிரச்சனைகள்&lt;br /&gt;முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்&lt;br /&gt;என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு&lt;br /&gt;அணைத்துக் கொண்டு –&lt;br /&gt;சிரிப்போடும் - சிறப்போடும் போகும் காட்சி&lt;br /&gt;மந்திரம் அல்ல..&lt;br /&gt;இந்த மனிதரின் சாதனை..!&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களாலேத்தான்&lt;br /&gt;எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!&lt;br /&gt;ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் –&lt;br /&gt;நம்மகிட்ட என்னா இருக்குது..&lt;br /&gt;பேசவைத்தவனும் அவன்தான்..!&lt;br /&gt;எல்லாம் அவன் கையிலே..!&lt;br /&gt;செய்ய வைத்தவனும் அவன்தான்..!&lt;br /&gt;நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!&lt;br /&gt;- என்றுச்சொல்லி கலகலவென சிரிப்பார்..!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சபையில் ஜூரிகளும் உண்டு…&lt;br /&gt;B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா&lt;br /&gt;இமாம் கஜ்ஜாலி காக்கா&lt;br /&gt;M.G.K. மாலிமார் காக்கா&lt;br /&gt;நாகை தமீம் மாமா ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சரித்திர சபையில்&lt;br /&gt;ஒருமுறை நான்&lt;br /&gt;சாட்சியாய்ப் போனேன்&lt;br /&gt;என் மதிப்பு கூடியது..!&lt;br /&gt;&lt;br /&gt;நிதிபதிகள் –&lt;br /&gt;அபராதம் போடுவார்கள்…&lt;br /&gt;இவரோ – சிற்றுண்டி தருவார்&lt;br /&gt;வடையும்/ தேநீரும்..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சபையில் –&lt;br /&gt;மனிதர்கள் வருவார்கள்…&lt;br /&gt;மதங்கள் வந்ததில்லை..!&lt;br /&gt;&lt;br /&gt;அட… இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;கற்பனையால் கயிறு திரித்து&lt;br /&gt;மற்றவர்கள் எழுதிவைத்த&lt;br /&gt;சரித்திரத்தால் –&lt;br /&gt;வரலாற்று நாயகர்களாய்&lt;br /&gt;வலம் வருவோர் நிறைய உண்டு..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வாழ்க்கை வரலாற்றை&lt;br /&gt;நேரில் சென்று கேட்டோம்..&lt;br /&gt;இரண்டு மணி நேரம் சொன்னவர்&lt;br /&gt;அவர் வரலாற்றை அல்ல..&lt;br /&gt;அவர் குருவின் சரித்திரத்தை..!&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உஸ்தாத் தாவூது மியான்&lt;br /&gt;பிறந்த தேதி/ இறந்த நாள்&lt;br /&gt;இவர் நினைவில் நிற்கிறது..!&lt;br /&gt;இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக&lt;br /&gt;நியமனம் பெற்ற நாள் அல்ல..!&lt;br /&gt;வருடமே நினைவில்லை..!&lt;br /&gt;அட.. இப்படியும் ஒரு மனிதரா..?&lt;br /&gt;&lt;br /&gt;“உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”&lt;br /&gt;இவரின் – உன்னதமான பாடல்..!&lt;br /&gt;இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!&lt;br /&gt;இன்றுவரை –&lt;br /&gt;கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!&lt;br /&gt;பாட்டு காதில் விழுகிறது..!&lt;br /&gt;காட்சி கண்ணில் விரிகிறது..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சுருதி –&lt;br /&gt;இன்றுவரை மாறியதில்லை&lt;br /&gt;இசையில் மட்டுமல்ல..!&lt;br /&gt;வாழ்க்கையிலும்..!&lt;br /&gt;ஏற்றம்/ இறக்கம் என்பதை&lt;br /&gt;இசையில் ஆரோகணம்/ அவரோகணம்&lt;br /&gt;என்பார்கள் – இசையில்&lt;br /&gt;இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!&lt;br /&gt;வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தாளம் –&lt;br /&gt;எப்போதும் தப்பாது…&lt;br /&gt;பாட்டில் மட்டுமல்ல..&lt;br /&gt;வீட்டிலும்..!&lt;br /&gt;&lt;br /&gt;86 வயது ஆயினும்&lt;br /&gt;இதுவரை – அவரின் கைத்தடி&lt;br /&gt;தம்பூராதான்..!&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டால் நமக்கு அவர்&lt;br /&gt;சொக்குப்பொடி போடுவார்..!&lt;br /&gt;அவரோ – பட்டணம் பொடி போடுவார்..!&lt;br /&gt;&lt;br /&gt;பாடிக்கொண்டு இருக்கும்போதே&lt;br /&gt;அவர் வெள்ளை கைக்குட்டை&lt;br /&gt;சமாதான கொடியைப் போல&lt;br /&gt;மூக்கு வரை ஏறும்&lt;br /&gt;உடன் இறங்கும்..!&lt;br /&gt;பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!&lt;br /&gt;தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம்&lt;br /&gt;இவருக்கு மட்டுமே/ தெரியும்..!&lt;br /&gt;&lt;br /&gt;புனித மாதங்களின் முதல் பிறையில்&lt;br /&gt;எல்லோரும் ஒதுவார்..!&lt;br /&gt;இவர் பாடுவார்..!&lt;br /&gt;இறைவனைத் துதித்து..!&lt;br /&gt;அவன் –&lt;br /&gt;தூதரை நினைத்து..!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் போல –&lt;br /&gt;வாழ்ந்துக் கொண்டிருக்கும்&lt;br /&gt;இந்த நாட்களில்&lt;br /&gt;நாகூர் தமிழ்ச் சங்கம்&lt;br /&gt;ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து&lt;br /&gt;“வாழ்நாள் சாதனையாளர் விருது”&lt;br /&gt;கொடுக்கிறது..&lt;br /&gt;விருது அவர்களுக்கு என்றாலும்&lt;br /&gt;எங்களுக்கு அல்லவா&lt;br /&gt;புகழ் வருகிறது..!&lt;br /&gt;&lt;br /&gt;மாறி மாறி வேஷங்கள்&lt;br /&gt;போடுகின்ற மனிதரிடை&lt;br /&gt;தேறிவந்த மனிதர் இவர்&lt;br /&gt;தெளிவான மனதுடையார்..!&lt;br /&gt;கூறுகின்ற இவர் சொற்கள்&lt;br /&gt;ஆறுதலை பிறக்க வைக்கும்..!&lt;br /&gt;சேருகின்ற இடமெல்லாம்&lt;br /&gt;வரவேற்பு சிறந்திருக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;இசையாத பேர்களையும்&lt;br /&gt;இசையவைக்கும் அன்பாளர்..!&lt;br /&gt;இசையாலே மனம் தொட்டு&lt;br /&gt;இன்பம் தரும் இசை ஆளர்..!&lt;br /&gt;இறைநெறியில் நபிவழியில்&lt;br /&gt;இணைந்திருக்கும் பண்பாளர்..!&lt;br /&gt;இம்மைக்கும் மறுமைக்கும்&lt;br /&gt;நலம் சேர்க்கும் நல்லடியார்..!&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் சிரித்திருக்கும்&lt;br /&gt;குழந்தை உள்ளம்..!&lt;br /&gt;இவர் இசையை கேட்போரின்&lt;br /&gt;இதயம் துள்ளும்..!&lt;br /&gt;ஒப்பில்லா இவர்வாழ்க்கை&lt;br /&gt;அன்பின் வெள்ளம்..!&lt;br /&gt;உள்ளபடி இவர் நிறைவை&lt;br /&gt;நாளை சொல்லும்..!&lt;br /&gt;&lt;br /&gt;வல்லவனே..! யா அல்லாஹ்&lt;br /&gt;யாசிக்கின்றேன்..! இவர்&lt;br /&gt;வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!&lt;br /&gt;&lt;br /&gt;- இஜட் ஜபருல்லாஹ்&lt;br /&gt;&lt;br /&gt;Nagore Sessions - Sufi Songs&lt;br /&gt;&lt;br /&gt;Ya Allah - Sufi Songs&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-402898341831188568?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/402898341831188568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=402898341831188568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/402898341831188568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/402898341831188568'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/08/blog-post_1118.html' title='பவுனு பவுனுதான்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-5993015631134198573</id><published>2009-08-31T15:08:00.000-07:00</published><updated>2009-08-31T15:10:30.591-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்நாள் சாதனையாளர் விருது'/><title type='text'>வாழ்நாள் சாதனையாளர் விருது</title><content type='html'>கடந்த 19.08.2009 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு, நாகூர் தர்கா உட்புற வளாகத்தில், சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர் விருதினை" நாகூர் தமிழ்ச் சங்கம் அளித்து கெளரவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடகர் கலைமாமணி நாகூர் E. குல்முகம்மது இறைவணக்கப் பாடலை பாட கூட்டம் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சங்கத்தின் நெறியாளர் புலவர் சீனி சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் விழா துவக்கவுரை ஆற்ற, சங்க நிர்வாகி டாக்டர் C,சோமசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்கால் வானொலி நிலைய இயக்குனர் K.துரைசாமி, வழக்கறிஞரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான M.G.K.நிஜாமுத்தீன், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான கவிஞர் இஸட் ஜபருல்லாஹ், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலரும். சங்கத்து புரவலருமான கவிஞர் அப்துல் கையூம், கவிஞர் திட்டை அன்வர்தீன், சங்கத்து நெறியாளர் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், உமா நிறுவனங்களின் அதிபர் P.N.குப்புசாமி ஆகியோர் மகா வித்வானுக்கு பாமாலை/ புகழ்மாலை சூட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகா வித்வானுக்கு கவிமாலை சமர்ப்பித்தவர் கவிஞர் மு. காதர் ஒலி. தன் குருநாதருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை அவரது முதன்மை சீடர் இசைமணி M.M.யூசுப் பகிர்ந்துக் கொண்டார். கவிஞர் இதய தாசன் எழுதி, இசைமணி மெட்டமைத்து குருநாதரைப் புகழ்ந்துப் பாடிய பாடல் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் M.G.K.முஹம்மது ஹூசைன் மாலிம் செயலாற்றிய இந்த நல்ல முயற்சியினை அனைவரும் வியந்து போற்றினர். சங்கீத வித்வானுக்கு அவர் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க, அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேலான அவரது அபிமானிகள், சீடர்கள், ரசிகர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய திரையில் மலரும் நினைவுகளாக வித்வான் 18 ஆண்டுகட்கு முன் நாகூரார் தர்பாரில் நிகழ்த்திய நிகழ்ச்சியினை அழகுற வடிவமைத்துத் தந்தவர் நாகூர் தர்கா வித்வானின் புதல்வர் S.M.A.K. நூர் சாதிக்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிவரை இருந்து சிறப்பான சொற்பொழிவாற்றி விருது வழங்கி கெளரவித்தவர் நாகை மாவட்ட ஆட்சியர் திருமிகு ச.முனியநாதன் இ.ஆ.ப. அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுரையை கவிப்புயல் நாகூர் இதயதாசன் வழங்க கூட்டம் இனிதே முடிவுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது பாடல்களைக் கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த பிரபல தென்னிந்திய பாடகர் காயல் ஷேக் முகம்மது நாகூர் தர்கா விதவான் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்களின் மானசீக சீடர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-5993015631134198573?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/5993015631134198573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=5993015631134198573' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5993015631134198573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5993015631134198573'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/08/blog-post_31.html' title='வாழ்நாள் சாதனையாளர் விருது'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-5505981218641554879</id><published>2009-08-31T15:03:00.000-07:00</published><updated>2009-08-31T15:04:25.270-07:00</updated><title type='text'>காரை தாரகை</title><content type='html'>கவிஞர்கள் உருவாக்கப் படுவதில்லை. கருவிலேயே உருவாகிறார்கள் என்பதற்கு காரை கஃபூர் தாசன் ஒரு நற்சான்று. பற்பல ஆண்டுகட்குப் பின் அவரை சந்தித்து உரையாடுவதற்கான ஒரு நல்வாய்ப்பு சென்ற வாரம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே இவருக்குள் கவித்துவம் குடிகொண்டிருப்பதை அடையாளம் காண முடிந்தது. அவரை இளமையில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுகோல் மன்னருக்கு, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டதைக் கண்டபோது, என் இதயத்துக்குள் யாரோ கன்னக்கோல் இட்டது போன்ற ஓர் உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசன் போல, அந்த பாரதிதாசனுக்கு ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் போல (சுரதா), என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூருக்கு மானசீக சீடராய் வாய்த்தவர் இந்த சீலர். அவர்களின் எழுத்தாற்றலின்பால் காதற்கொண்டு  தன்பெயரையே கஃபூர்தாசன் என்று மாற்றிக் கொண்ட காதலர்.&lt;br /&gt;&lt;br /&gt;நானெழுதிய “போன்சாய்” கவிதை நூலை படித்துவிட்டு பாராட்டிய அவர் தானெழுதிய சில குறுங்கவிதைகளை – நினைவிலிருந்த சில வரிகளை -  மனமுவந்து மொழிந்தபோது மெய்மறந்து போய்விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“வெடிப்பன எரிமலைகள்&lt;br /&gt;அணைக்க நீலிக் கண்ணீர்&lt;br /&gt;வடிப்பன முதலைகள் !”&lt;br /&gt;&lt;br /&gt;“பசுங்கொடிகள் படர்கின்றன&lt;br /&gt;தோட்டம் காத்த வேலிக்குப்&lt;br /&gt;பொன்னாடை !”&lt;br /&gt;&lt;br /&gt;“பனிச்சறுக்கு விளையாட்டு’ என்றது ஊர்&lt;br /&gt;வழிக்கி விழுந்தவள்&lt;br /&gt;பணக்காரப் பெண் !”&lt;br /&gt;&lt;br /&gt;“சுடர்முடி சுமப்பதென்றால் சும்மாவா?&lt;br /&gt;திரிகளே .. .. !&lt;br /&gt;தலை கருகுமே தயாரா ?”&lt;br /&gt;&lt;br /&gt;இவையாவுமே கவிஞர் கைவண்ணம். என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவை.&lt;br /&gt;&lt;br /&gt;“வெட்டு வெட்டு வெட்டு, நகத்தை வெட்டு வெட்டு, அழுக்கு சேருகிறது !” என்று எழுதுபவர்களையெல்லாம் ‘கவிஞர்’ என்று ஏற்றுக் கொள்ளும் இவ்வுலகம் இவரைப்போன்ற அறிவாற்றல் மிக்கவரை கண்டு கொள்ளாமல் இருப்பதை நினைத்தபோது கண்கள் கசிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக’ இவரின் கவித்திறமை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டதே என்று மனது காயப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரின் கவித்துவ ஆற்றலை அறிந்துக் கொண்ட கவிஞர் சுரதா ஒருமுறை கஃபூர் தாசனை கவியரசு கண்ணதாசனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பெயர் காரணத்தை அறிந்துக் கொண்ட கவியரசர் “அட ! நம்ம அப்துல் கபூருடைய சிஷ்யனா?” என்று உரிமையோடு அரவணைத்து உபசரித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுப் போக்கில் கவியரசரைப் பற்றி தான் ஒரு கவிதை எழுதி வைத்திருப்பதாக நம் கவிஞர் கூற, கவிதை வரிகளைக் கேட்டு கவியரசர் வியந்துப் போயிருக்கிறார். ஒரு நோட்டு புத்தகத்தில் அவ்வரிகளை அவர்கைப்பட எழுதுமாறு உத்தரவிட்டு, கவிஞரின் கையொப்பத்தையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எத்தனையோ பிரபலமான கவிஞர்கள், எத்தனையோ தருணத்தில், எத்தனையோ மேடைகளில் வானாளவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அவைகளிள் ஏறாத போதை இவர் வரிகளைக் கேட்டதும் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரபலமாகாத சாதாரணக் (?) கவிஞனிடத்திலிருந்து பிறந்த முத்தான வரிகளை ஏன் கவியரசர் ஏன் விரும்பிக் கேட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்? இந்த சிலேடை வரிகளை படித்தாலே அந்த காரணம் நமக்கு புரிந்துப் போகும். &lt;br /&gt;&lt;br /&gt;“கண்ணாதாசனுக்கு” என்று தலைப்பிட்டு கஃபூர்தாசன்  எழுதி வைத்த வரிகள் இவை :&lt;br /&gt;&lt;br /&gt;“தாளில் எழுதுகிறோம்&lt;br /&gt; தங்குவதே இல்லை&lt;br /&gt; தண்ணீரில் எழுதுகிறாய்&lt;br /&gt; நிலைத்து விடுகிறதே !&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால்,&lt;br /&gt; காடியில் கரையும்&lt;br /&gt; முத்தையா நீ !”&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா ! என்ன அற்புதமான காவிய வரிகள்..?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமே போற்றிப் புகழும் ஒரு மகாகவிஞனிடம் போய் “நீ தண்ணி அடித்து விட்டு எழுதுகிறாய்” என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;தன் குறைபாடுகளை அறிமுகமேயில்லாத ஒருவன் சுட்டிக் காட்ட அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் கவியரசர் கண்ணதாசன் ஒருவருக்குத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி வரிகளில் காணப்படும் “காடி” என்ற வார்த்தைக்கு Vinegar என்று பொருள். ‘காடியில் கரையும் முத்து’ என்பது இங்கு ஒரு அருமையான குறியீடு. “முத்தையா !” என்று சிலேடையாக வருணிக்கப்பட்டிருக்கும் இவ்வார்த்தை கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அரிய ஆணிமுத்தாக ஜொலிக்க வேண்டிய நீ வினிகரில் போட்ட போட்ட முத்தாக உன்னை நீயே பாழாக்கிக் கொள்கிறாயே?” என்ற கஃபூர்தாசனின் ஆதங்கம் நம்மையும் ஆட்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்&lt;br /&gt;சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்&lt;br /&gt;நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்&lt;br /&gt;ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடிய கவியரசனை  இந்த காரை தாரகையின்  வரிகள் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டி :&lt;br /&gt;&lt;br /&gt;என் ஆசான்&lt;br /&gt;&lt;br /&gt;கடலாய் விழுந்த மழைத்துளி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-5505981218641554879?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/5505981218641554879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=5505981218641554879' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5505981218641554879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/5505981218641554879'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/08/blog-post.html' title='காரை தாரகை'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1475700601146967077</id><published>2009-04-24T04:36:00.000-07:00</published><updated>2009-04-24T04:42:01.492-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகூர் ஹனீபா'/><title type='text'>நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்</title><content type='html'>நன்றி : திண்ணை&lt;br /&gt;ஏப்ரல் 23, 2009&lt;br /&gt;- அப்துல் கையூம்&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் - ஒரு சரித்திரம், ஆகையால் 'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப் பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்" என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில் என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர்.  அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக் கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு இந்தியாவாகத் தெரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா அறியாமோ?” “நிங்ஙள் அவரை கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே அறிந்து வைத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள். அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில் வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?” என்ற கேள்வி எழலாம். “அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல், நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?  &lt;br /&gt;&lt;br /&gt;ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப் போன்ற உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக  ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன் இவருக்கு இறைவன் கொடுத்த வரம். &lt;br /&gt;&lt;br /&gt;“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான் வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில் ‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை  எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம். &lt;br /&gt;&lt;br /&gt;இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள் மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது. “முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹனிபாவின் சில பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர் பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள் உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர் உண்டு.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்&lt;br /&gt;வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”&lt;/strong&gt;&lt;br /&gt;என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே&lt;/strong&gt;ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”&lt;br /&gt;&lt;br /&gt;என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்&lt;br /&gt;இருக்கையில் நமக்கென்ன தயக்கம்&lt;br /&gt;கண்களில் ஏனிந்த கலக்கம்” &lt;/strong&gt;&lt;br /&gt;என்பது போன்ற  கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?&lt;br /&gt;மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?” &lt;/strong&gt;&lt;br /&gt;என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்”&lt;/strong&gt; என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை&lt;br /&gt;ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”&lt;/strong&gt;&lt;br /&gt;என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு&lt;br /&gt;மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்” &lt;/strong&gt;&lt;br /&gt;என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா? &lt;br /&gt;கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”&lt;/strong&gt;என்று அவர் ஆரம்பம் செய்கையில்  “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும் கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே உணர முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத் துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல ‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர். ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க வைத்த கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள் வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ ‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி எத்தனை கட்டை என்ற விவரத்தை காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை” என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார். (‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர் தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த ‘சிச்சுவேஷன் காமெடி’.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“இவரின் இசைக் கச்சேரி&lt;br /&gt;ஒரு யாகம் .. .. ..&lt;br /&gt;மூன்று மணி நேரம் –&lt;br /&gt;மேடையில் சுற்றியுள்ள &lt;br /&gt;வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..&lt;br /&gt;இவர் சுருதியும்&lt;br /&gt;கீழே இறங்காது”&lt;/strong&gt;&lt;br /&gt;என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. &lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர் ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால் அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியபோது,  நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம் A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத் நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத் இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய நண்பர் அன்வாருல்லா.&lt;br /&gt;&lt;br /&gt;கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று எற்பட்ட ஒன்றா?&lt;br /&gt;&lt;br /&gt;“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்&lt;br /&gt;மங்காத தமிழென்று சங்கே முழங்கு”&lt;/strong&gt;&lt;br /&gt;என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும் பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து&lt;br /&gt;தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா&lt;br /&gt;தாத்தாவாம் ஈ.வே.ரா” &lt;/strong&gt;என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ&lt;br /&gt;தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி&lt;br /&gt;&lt;br /&gt;“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு  இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர் பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி எழுதிய &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு&lt;br /&gt;சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்&lt;br /&gt;திராவிட நாட்டின் சேமம் வேண்டி&lt;br /&gt;சிங்கார ஆடைகள் வாங்குவீர்”&lt;/strong&gt;&lt;br /&gt;என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’ கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் &lt;strong&gt;பெருமானே!&lt;br /&gt;மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே&lt;/strong&gt;!” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்” என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே&lt;br /&gt;பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே&lt;br /&gt;கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே&lt;br /&gt;கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !&lt;br /&gt;&lt;br /&gt;நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு&lt;br /&gt;தங்க நிலவைத் துரத்துகிறார்&lt;br /&gt;அருமை நபியை ஆருயிரை&lt;br /&gt;அணையா விளக்கை வருத்துகிறார்"&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"கல்லின் மீது&lt;br /&gt;பூவை எறிபவர்கள்&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;பூவின் மீது&lt;br /&gt;கல்லை எறிகிறார்கள்"&lt;/blockquote&gt; என்பார்&lt;br /&gt;&lt;br /&gt;இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"சொன்மாரி பொழிந்ததற்காய்க்&lt;br /&gt;கன்மாரி பெய்துவிட்ட&lt;br /&gt;வன்மனத்தார் திருந்துதற்கு&lt;br /&gt;வழிவகுத்த நாயகமே" &lt;/blockquote&gt;என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“கல்லடி ஏற்று&lt;br /&gt;கடுமொழி கேட்டு&lt;br /&gt;உள்ளம் துடித்து&lt;br /&gt;உதிரத்தை வடித்து”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாட்டிலும் &lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;“தாயிப் நகரில் கல்லடிகள்&lt;br /&gt;தந்த தழும்பிலே – இமைகள்&lt;br /&gt;தழுவதற்கும் அழுவதற்கும் &lt;br /&gt;கண்ணீர் பொங்குதே..”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள் &lt;br /&gt;தாஹா இரசூல் நபி நடக்கையிலே &lt;br /&gt;பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப் &lt;br /&gt;பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”&lt;/strong&gt;&lt;br /&gt;என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம் “நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அருஞ்சொற்பொருள்:&lt;br /&gt;&lt;br /&gt;மெளத்து : மரணம்&lt;br /&gt;யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!&lt;br /&gt;தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்&lt;br /&gt;ஈமான் : இறையச்சம்&lt;/blockquote&gt;திண்ணையில் அப்துல் கையூம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-1475700601146967077?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/1475700601146967077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=1475700601146967077' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1475700601146967077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1475700601146967077'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post_24.html' title='நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-3753823166774633246</id><published>2009-04-21T13:49:00.000-07:00</published><updated>2009-04-21T13:52:36.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குலாம் காதிர் நாவலர்'/><title type='text'>மறைமலை அடிகளாரின் இரங்கற்பா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4x4ZWMozI/AAAAAAAAAhI/PqVU9kwkzWs/s1600-h/maraimalai_stamp.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 161px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4x4ZWMozI/AAAAAAAAAhI/PqVU9kwkzWs/s200/maraimalai_stamp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327250254172300082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் குலாம் காதிர் நாவலர் தன் 74- வது வயதில் 28-01-1908 அன்ற் உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் கவிதை பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து&lt;br /&gt;பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்&lt;br /&gt;நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட&lt;br /&gt;ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Maraimalai Adikal was born on 15 July 1876 at Nagapattinam in Tamil Nadu. He studied Tamil under Ve. Narayanasamy Pillai. He had his schooling in the Wesleyan Christian High School. He enjoyed the friendship of Sundaram Pillai, author of Manonmaniyam. He settled in Madras thanks to the efforts of Sandamarutam Somasundara Nayakar. He joined the Madras Christian College as a Tamil teacher. He founded the Saiva Siddhanta Maha Samajam. &lt;br /&gt;&lt;br /&gt;He edited 'Gnanasagaram'  in which appeared Kokilambal's letters, and Kumudavalli. He edited the English journal, 'Oriental Mystic Myna.' He was a research scholar proficient in Tamil, Sanskrit and English. He translated Kalidasa's Sakuntalai into Tamil. He advocated purism in Tamil and changed his very name 'Vedachalam' into 'Maraimalai Adikal'.  He later renounced family life. Contrary to practice, he began writing a commentary on the Thiruvasagam. His famous research work is Manikkavacakarin varalarum kalamum. He passed away on 15 September 1950. &lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-3753823166774633246?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/3753823166774633246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=3753823166774633246' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3753823166774633246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3753823166774633246'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post_2101.html' title='மறைமலை அடிகளாரின் இரங்கற்பா'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4x4ZWMozI/AAAAAAAAAhI/PqVU9kwkzWs/s72-c/maraimalai_stamp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-3516697623709376157</id><published>2009-04-21T12:50:00.000-07:00</published><updated>2009-04-21T13:35:32.081-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணையில் அப்துல் கையூம்'/><title type='text'>நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்</title><content type='html'>நன்றி : திண்ணை&lt;br /&gt;April 16 2009&lt;br /&gt;&lt;br /&gt;“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம் மைனஸ் ஒன்றிரண்டாகவும் இருக்கக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;வீதியிலே கூட்டத்தைக் கூட்டி, மகுடி ஊதி, “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் பார்” என்று வித்தை காட்டும் காட்சி மட்டுமே வேடிக்கை என்று நாம் நினைத்தால் அது தப்புக் கணக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;‘வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கைச் செய்திகள், வேடிக்கை நிகழ்வுகள், வேடிக்கைப் பழக்கங்கள், வேடிக்கை மனிதர்கள் நிறைந்த வேடிக்கை உலகம் அது. நகைச்சுவை உணர்வு நாகூர் மக்களின் நரம்பினில் ஓடுவது. புன்முறுவலை உதடுகளில் அழியாத லிப்ஸ்டிக்காய் பூசிக் கொண்டவர்கள் இவர்கள். புன்னகையை பொன்நகையாய் கவசகுண்டலமாக்கிக் கொண்டவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;வேடிக்கை மனிதரைப் போலே - நான் &lt;br /&gt;வீழ்வே னென்று நினைத்தாயோ? &lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்று மகாகவி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வேறு, இந்த வேடிக்கை மனிதர்கள் வேறு. பாரதி சாடிய வேடிக்கை மனிதர்கள் வீணர்கள். இவர்களோ கவிவாணர்கள், இசைவாணர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாகூரில் தடுக்கி விழுந்தால் பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்று சமுதாயக் கவிஞர் தா.காசீம் கூறுவார். “புலவர்கோட்டை” என்ற பழம் பெயர் பொருத்தமே என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;வடமொழி "தேவபாஷை" தமிழ் மொழி "நீசபாஷை" என்று கருத்து பரவி மணிபிரளாத்தமிழ் ஓங்கியிருந்த காலத்திலும் தன்னிலை இழக்காது சோறு/ ஆணம்/ தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்)/ மிளகுத்தண்ணி/ திறப்பு/ சூலி/ விளக்குமாறு/ சோத்துக்களறி/ உண்ணுங்க/ பசியாறுங்க என்று தூயதமிழ் பேசிய இவர்களை ‘வேடிக்கை மனிதர்கள்’ என்றுதானே உலகம் அன்று விமர்சித்திருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற உண்மை அறிந்திருந்தும் “ஈவது விலக்கேல்” என்ற சொல்லை மறவாது கையேந்தி நிற்கும் யாசகனிடத்தில், ஈவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலையில்; “மாப்பு செய்யுங்க பாவா” என்று பிச்சைக்காரர்களிடத்திலேயே மன்னிப்புக் கேட்கும் பண்பு வேடிக்கையான ஒன்றுதானே? &lt;br /&gt;&lt;br /&gt;மண்பாண்டம் மணம் வீசும் சுவைமிகுந்த ‘குண்டாச்சோறினை’ மிஸ்கீனிடத்திலேயே காசு கொடுத்து வாங்கும் கனவான்களின் வாடிக்கையை ‘வேடிக்கை’ என்றுதானே வர்ணிக்க வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளைச் சோற்றுக்கு கையேந்தப்போய் இரண்டு. மூன்று சோத்துச்சீட்டை கைவசம் வைத்துக்கொண்டு எதைக் கொடுத்து சாப்பிடுவது? எதை விடுவது? என்று திணறும் வேடிக்கை மனிதர்களை இந்த ஊரில் காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது” என்று ஏனோ தானோவென்று வேண்டா வெறுப்பாக தன் ஊர்ப்பாசத்தை உலகறிய பிரகடனப்படுத்தும் என் சகஊர்த்தோழர் சாரு நிவேதிதாவை என்னவென்று விமர்சிப்பது? எதிர்மறையாக பேசிப்பேசியே விளம்பரம் தேடிக்கொள்வது அவர் பாணி என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ப்பாசம் மிகுதியால் தங்கள் சொந்தப் பெயரே மறைந்து குன்னக்குடி, வளையப்பட்டி, மகாராஜபுரம், பட்டுக்கோட்டை, சீர்காழி என்று அறியப்படும் கலைஞர்களை இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனைக்கு தும்பிக்கை எப்படி முக்கியமோ, மனிதனுக்கு நம்பிக்கை எப்படி முக்கியமோ, அதுபோன்று ‘வேடிக்கை’ இந்த ஊருக்கு முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல வேடிக்கை போங்க” என்று மூக்கின் மேல் விரலை வைத்து கொள்வார்கள் எங்களூர் தாய்க்குலங்கள். அந்த ‘வேடிக்கை’யில் எதிர்பார்ப்பு, பெருவியப்பு பொதிந்துள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த வேடிக்கையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க” என்று நண்பர் கோபப்பட்டால் ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்’ என்று அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;“மச்சான், இன்னிக்கு கடைதெருவிலே செம வேடிக்கை” என்று நண்பன் தகவலோடு வந்தால் அதில் கேலி, கிண்டல், கூத்து, கும்மாளம், கேளிக்கை, பொழுதுபோக்கு அடங்கியுள்ளது என்று அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;செட்டியார் பள்ளியில் படிக்கையில் “அங்கே என்ன வேடிக்கை?” என்று ஒரு அதட்டலை உதிர்ப்பார் சரவணா சார். சொம்பும் கையுமாய் ஒதுக்குப்புறத்துக்கு யாராவது போய்க் கொண்டிருப்பார். அதில் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு? அப்படியென்றால் வெளியில் நடக்கும் யாவும் வேடிக்கை என்றுதானே அர்த்தம்? &lt;br /&gt;&lt;br /&gt;நகர்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமெனில் ஜன்னல், பால்கனி அல்லது வாயிற்படியில் வந்து எட்டிப்பார்க்க வேண்டும். நாகூர்வாழ் மக்களுக்கு அதற்கு அவசியமே இல்லை. முற்றத்தில் படுத்துக் கொண்டே காற்றுப்பந்தல் வழியே அண்ணாந்து வெளியுலகை ஆசைதீர கண்டு இரசிக்கலாம். இந்த “Wind Tower Technology” விலாசத்தினால் இவர்களின் சுவாசப்பை போலவே இதயமும் விசாலமாகி விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டு முத்தாச்சி மாமி “இந்த வேடிக்கையை கேட்டிஹலா புள்ளே” என்று ஆரம்பித்தால் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். “கலியாணம் ஆயி இன்னும் ஒரு மாசம் கூட ஆவலே அதுக்குள்ளே புது மாப்பிள்ளைக்கி அஹ வூட்லே கடை சமுசா வாங்கி வச்சிருக்காஹா” என்று நாட்டு நடப்பை போட்டு உடைப்பார். இதில் என்ன வேடிக்கை? என வினவலாம். இந்த ஊரை பொறுத்தவரை இது ஒரு வேடிக்கையான கெளரவப் பிரச்சினை. &lt;br /&gt;&lt;br /&gt;வியாழக்கிழமை வந்தாலே வேடிக்கைமயம்தான். சுற்றுப்புற ஊர்களிலிருந்து கூட்டம் வரத் தொடங்கிவிடும். பக்தி முற்றி பரவசம் பொங்க வரும் பக்தகோடிகளை விட வேடிக்கை நாடி ஓடி வரும் ஆடியன்ஸ்தான் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெருவில் கமகமக்கும் கடலை வறுக்கும் வாசம் முதற்கொண்டு, அனாடமி படிக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் கை, கால், கண், காது, மூக்கு, தொடை என்று விற்கும் வெள்ளித்(?) தகடுகள் உட்பட எல்லாமே வேடிக்கைமயம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அலங்கார வாசலில் தர்கா யானையை சீவி சிங்காரித்து ஆடை அணிகலன்கள் அணிவித்து பரிவட்டம் கட்டி நிற்க வைப்பார்கள். எதற்கு? தர்காவிற்கு செக்யூரிட்டி அதிகரிக்கவா? எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தானே? &lt;br /&gt;&lt;br /&gt;வெளியூரிலிருந்து உள்ளூருக்கு வேடிக்கை பார்க்க வருகின்ற கூட்டம் ஒருபுறம் என்றால் வெளியூர்க்காரர்களை வேடிக்கை பார்க்கின்ற உள்ளூர்க்காரர்கள் மற்றொருபுறம். இவர்களுக்கு அவர்கள் வேடிக்கை. அவர்களுக்கு இவர்கள் வேடிக்கை. என்ன ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்திகடனுக்காகாக மொட்டை போட்டு தலைமுழுக்க சந்தனம் பூசி பளபளவென்று பவனிவரும் ஆந்திரா ஆசாமியைக் கண்டால் இவர்களுக்கு வேடிக்கை. கொஞ்சம் ‘தபுரூக்’ எடுத்துக் கொள்ளலாமா என்று அந்த ஆசாமியின் தலையில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை பிய்த்து அவர் ‘ஆ’வென்று கத்துவதை வேடிக்கையாகக் கருதும் விஷமத்தனமான இளவட்ட பசங்களின் குறும்பினை என்னவென்று சொல்வது? &lt;br /&gt;&lt;br /&gt;பொழுது சாயும் வேளையில் “குண்டு போட்டாச்சா?” என்று ஒருவர் வினவ “இல்லை இன்னும் போடலே” என்று மற்றவர் பதிலுரைக்க இந்த உரையாடலைக் கேட்கும் வெளியூர்க்காரர் “நாம் ஏதோ ஈராக் போன்ற ஒரு War Zone-க்குள் வந்துவிட்டோமோ என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்ற ரேஞ்சுக்கு ஓடக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொன்மாலைப் பொழுதில் தர்காவிலிருந்து குண்டுச் சத்தம் (வெடிச்சத்தம்) கேட்க, சிறகடித்து வானுயர்ந்த கோபுரங்களை வட்டமிடும் புறாக்களின் கூட்டம் கண்கொள்ளாத வேடிக்கையாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;காற்று வாங்க கடற்கரைக்கு காலாரச் செல்லும் வெளியூர்க்காரரின் காதில் விழுமாறு குறும்புக்கார என் நண்பன் “அதோ சிங்கம் வருது பாரு” என்று கமெண்ட் அடிக்க அசந்துப் போய் நடந்து வந்த அவரோ கம்பீரமாக ராஜநடை நடக்க, “என் நண்பன் சொன்ன சிங்கத்திற்கு அர்த்தம் வேறு சார்” என்று அவரிடத்தில் நான் சென்று போட்டுக் கொடுக்கவா முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கை காட்டுவதில் நாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சின்ன ஹந்திரி, பெரிய ஹந்திரி, வாஞ்சூர் ஹந்திரி, சில்லடி ஹந்திரி, மவுலூது, ஆஸுரா, ஒடுக்கத்து புதன், மீலாது நபி, என்று வேடிக்கையே வாடிக்கையாகி விட்ட ஊர் எங்களூர். மினாராவுக்கு சாந்து (சாயம்) பூசுவதும், பாம்பரம் ஏற்றுவதும் கூட எங்களுக்கு வேடிக்கைதான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னபிற ஊர்களில் தேரோட்டம் வேடிக்கையெனில் எங்களூரில் பீரோட்டம் வேடிக்கை. சமுத்திரத்தில் செல்லுகின்ற கப்பல்கள் சாலையில் சென்றால் அது வேடிக்கை அல்லவா? தண்டவாளத்தில் செல்லும் புகைவண்டி தார்ரோட்டில் சென்றால் அது வேடிக்கைதானே? &lt;br /&gt;&lt;br /&gt;“குவா குவா மொம்மது காக்கா கொத்துப் பரட்டா” என்று துருக்கி உடை அணிந்த கோரஸ் குழு, அவர்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையில் ரைம்ஸ் பாடுவது என்னவொரு வேடிக்கை தெரியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;ஊரு உலகத்தில் உள்ளங்கை சைஸில் விற்கும் ஜிலேபி இங்கே ஓரடி விட்டத்தில் தயாராவது வேடிக்கைதானே? &lt;br /&gt;&lt;br /&gt;புரோட்டாவின் சைசுக்கு ஏற்றார்போல் Single, Double, Triple என்று கூட்டிக் கொண்டுபோகும் நாகூர் மக்கள், விலைவாசி ஏற ஏற, Tetra, Penta, இன்று நாளடைவில் புதுப்பெயர் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வாணவேடிக்கை என்று ஒரு நாளையும் வைத்து அக்கம் பக்கத்தாரை திரட்டுவதும் இந்த வேடிக்கை மனிதர்களின் சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;“The Great Show man” என்று இந்தி தயாரிப்பாளர் ராஜ்கபூருக்கு பட்டத்தை அளித்ததைப்போன்று நாகூரார்களுக்கும் யாராவது பட்டம் கொடுத்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதி இருந்திருந்தால் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;blockquote&gt;வேடிக்கை மனிதரைப்போல் – நான் &lt;br /&gt;வாழ்வேனோ சர்வேசா” &lt;/blockquote&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்று பாடி மகிழ்ந்திருப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருஞ்சொற்பொருள் : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தபுரூக் = பிரசாதம் &lt;br /&gt;மிஸ்கீன் = வறியோர் &lt;br /&gt;ஹந்திரி = கந்தூரி உற்சவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-3516697623709376157?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/3516697623709376157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=3516697623709376157' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3516697623709376157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3516697623709376157'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post_2988.html' title='நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1629046127560465297</id><published>2009-04-21T12:41:00.000-07:00</published><updated>2009-04-21T12:45:10.714-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர் ஜபருல்லா'/><title type='text'>கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4h-EGPu3I/AAAAAAAAAg4/6GU6mG74_3I/s1600-h/Zafarullah.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 79px; height: 93px;" src="http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4h-EGPu3I/AAAAAAAAAg4/6GU6mG74_3I/s200/Zafarullah.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327232759361420146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் எழுதிய "நிலவு சொன்னது!" என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். "தூது விடு படலம்"  என்பது ஒரு தனி 'ட்ராக்' இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. 'அஃறிணை' பொருட்களை; அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'ஸ்பெஷல் லைசன்சு'.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த 'லைசன்சு ஹோல்டர்கள்'. "நாராய் நாராய்! செங்கால் நாராய்!" என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்) &lt;br /&gt;&lt;br /&gt;காளிதாசன் 'மேக சந்தேசம்' என்ற காவியம் படைத்தான். "ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ" என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு" என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். "போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்" என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையாவும் 'ஒன் வே டிராபிக்' தூது. இதோ கவிஞர் இஸட் ஜபருல்லா விடுத்திருக்கும் தூதை கவனியுங்கள். இது "டூ வே டிராபிக்". இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது. போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே" என்ற இசைமுரசின் இனிமையான பாடலில் ஒரு அற்புதமான வரி வரும். "தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!" என்று. அது எப்படி திரும்பி வரும்? காரணம் அது போன இடம் அப்படிப்பட்ட இடம். திரும்பி வர மனம் இசையாது. புஷ்பங்களின் மகரந்தாமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தூத் போன தென்றல் திரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் திரும்பாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் 'அட்ஜ்ஸ்ட்' செய்துக் கொண்டு போய் விடலாமே? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிலவு அப்படியா? இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமல் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்னச் செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? மாதத்தை எப்படி கணக்கெடுப்பது? இடுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்படி நிலாச்சோறு ஊட்டுவது? கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கு ஒரு முக்கியமான 'கரு' மிஸ்ஸிங் ஆகி விடுமே? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். விவரமான மனிதரிவர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலவு சொன்னது&lt;/strong&gt;---------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;விண்ணகத்தில் சதிராடும்&lt;br /&gt;வெண்ணிலவை நான் கேட்டேன்&lt;br /&gt;அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா....? அவர்&lt;br /&gt;சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?&lt;br /&gt;&lt;br /&gt;கன்னல்நபி நாயகத்தை&lt;br /&gt;கண்டுவந்த உணர்வதனை&lt;br /&gt;விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை&lt;br /&gt;விடவில்லைநான் அதனால் சொன்னது...!&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலாரின் ஒளிமுகத்தை &lt;br /&gt;என்முகத்துக் கீடாக்கி &lt;br /&gt;பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! - நெஞ்சைப்&lt;br /&gt;பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக் கிரங்கச் சொல்லி&lt;br /&gt;என்னிடத்தில் சொல்லச் சொன்னார்...!&lt;br /&gt;ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்&lt;br /&gt;எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்...?&lt;br /&gt;&lt;br /&gt;இம்மைதரும் சுகங்களிலே&lt;br /&gt;மறுமையினை மறந்திடாதீர்..!&lt;br /&gt;என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்&lt;br /&gt;என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுகின்ற பதவியெல்லாம்&lt;br /&gt;'அல்லாவின் அடிமை' யென்ற&lt;br /&gt;பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்&lt;br /&gt;பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;மூமீன்கள் பிளவுபட்டால்&lt;br /&gt;ஏமாளி ஆனார்கள்...!&lt;br /&gt;ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் - நபிகள் &lt;br /&gt;என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;சுவனசுகம் துறந்தவராய்&lt;br /&gt;நரகநெருப்பை நாடுகின்றார்..! &lt;br /&gt;சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்...! இதை&lt;br /&gt;சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்...!&lt;br /&gt;&lt;br /&gt;எம்பெருமான் சொன்னவைகள்&lt;br /&gt;எல்லாமும் சொல்வதென்றால்&lt;br /&gt;எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு&lt;br /&gt;என்னை விட்டு வானில்விரைந்து சென்றது...!&lt;/blockquote&gt;&lt;br /&gt;(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;- அப்துல் கையூம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-1629046127560465297?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/1629046127560465297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=1629046127560465297' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1629046127560465297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1629046127560465297'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post_21.html' title='கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GkbItdgQDg0/Se4h-EGPu3I/AAAAAAAAAg4/6GU6mG74_3I/s72-c/Zafarullah.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-8776530384383610085</id><published>2009-04-16T13:53:00.000-07:00</published><updated>2009-04-16T13:55:34.892-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிபதி மு.மு.இஸ்மாயீல்'/><title type='text'>நீதிபதி மு.மு.இஸ்மாயீல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeebCbePraI/AAAAAAAAAgw/6CV9yrDifZk/s1600-h/Copy+(2)+of+M.M.Ismail.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 81px; height: 116px;" src="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeebCbePraI/AAAAAAAAAgw/6CV9yrDifZk/s200/Copy+(2)+of+M.M.Ismail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325395550425558434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவருடனிருந்து பழகிய வழக்கறிஞர் த. இராமலிங்கம், தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;நாகூரில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வறுமை சூழ்ந்த இளமை என்றாலும் படிப்பிலும் இலக்கியத்திலும் இளமை யிலேயே சிறந்து விளங்கியவர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கதையை, ஓய்வாகப் பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சியினால் முன்னுக்கு வந்தவர், அவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பதவியேற்று அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும், நீதித் துறைக்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பட்ட இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார். இலக்கியத்தில் நயம் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. நகைச்சுவை சொன்னால் கோபமே வந்துவிடும். மேடையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் இலக்கியத்துக்கோ, சமுதாயத்துக்கோ நேரிடையாகப் பயன்படவேண்டும் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கம்பன் விழாவில் ஒருமுறை மாலை நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் ஒருவர், ஒரு நகைச்சுவை சொன்னார். துரதிருஷ்டவசமாக அதே நகைச் சுவையைக் காலை நிகழ்ச்சியிலும் வேறு பேச்சாளர் ஒருவர் சொல்லியிருந்தார். இவரும் அதையே சொல்ல, தலைமைப் பொறுப்பிலிருந்த நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இந்த கத்திரிக்கா ஜோக்கெல்லாம் காலையிலேயே சொல்லிவிட்டாங்க, நீங்க உங்க கருத்தைப் பேசுங்க’ என்று ஒலிபெருக்கியிலேயே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதித் துறையில் மட்டுமல்ல. இலக்கிய உலகிலும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் மேடையில் இருக்க வேண்டும் என்பதில்லை. பார்வையாளர்கள் வரிசையில் இருந்தால் கூட பேச்சாளர்கள் தயங்கித் தயங்கிப் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய உலகில் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய எண்ணத்தைச் செயலாக்கத் துணை நின்ற பெருமை, செயலாளராக இருந்த பழ.பழநியப்பன் அவர்களையே சாரும். நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும் வழி காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் இலக்கிய உலகத்திற்குள் காலடி வைத்து இருக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அளவில் மாணவ-மாணவியர்க்குப் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை அவருடைய வழியில் கம்பன் கழகம் இன்றும் நடத்தி வருகிறது. பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவியரைக் கம்பன் விழா மேடையில் ஏற்றிப் பேச வைக்கும் வழக்கத்தை நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும்தான் உருவாக்கினார்கள். இன்று பல கழகங்கள் அதைப் பின்பற்றி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை கம்பன் கழகம், அவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி பெரும் தொகை ஒன்றை விருதாகக் கொடுத்தது. அவர் வீட்டுக்கே சென்று நாங்கள் அனை வரும் வழங்கினோம். அப்போது பெற்றார். ஆனால் மறுநாள் ஒரு கடிதம் எழுதி, அந்தப் பணத்தையும் வைத்து, கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களுக்கு அனுப்பிவிட்டார். “இந்தப் பணத்தை நான் வைத்துக்கொள்வது முறையாக இருக்காது’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார். பின் அவருடைய அனுமதியின் பேரில், கம்பன் கழகத்தின் அறக்கட்டளையில் அப்பணம் சேர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எவருக்கும் எக்காலத்திலும் தலை வணங்காத தகைமையாளராக வாழ்ந்து, தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டிருக்கிறார், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வளர்ந்து வரும் தலை முறைக்கு அவரது நேர்மையும் மன உறுதியும் தலைவணங்காத் தன்மையும் என்றும் வழிகாட்டி நிற்கும். &lt;br /&gt;&lt;br /&gt;- நன்றி (SIFY - TAMIL)&lt;br /&gt;&lt;br /&gt;மறைவுச் செய்தி (The Hindu)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-8776530384383610085?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/8776530384383610085/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=8776530384383610085' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8776530384383610085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8776530384383610085'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post_16.html' title='நீதிபதி மு.மு.இஸ்மாயீல்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeebCbePraI/AAAAAAAAAgw/6CV9yrDifZk/s72-c/Copy+(2)+of+M.M.Ismail.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-3918036366505949689</id><published>2009-04-16T13:43:00.000-07:00</published><updated>2009-04-16T13:50:58.091-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர் நாகூர் சலீம்'/><title type='text'>இறைவனும் இருட்டும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeeZDJ04jJI/AAAAAAAAAgo/e3-plKC1Z7k/s1600-h/sALEEM.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 72px; height: 85px;" src="http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeeZDJ04jJI/AAAAAAAAAgo/e3-plKC1Z7k/s200/sALEEM.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325393363845287058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனும் இருட்டும்&lt;br /&gt;- அப்துல் கையூம்&lt;br /&gt;&lt;br /&gt;கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்&lt;br /&gt;நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம் &lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;பூவிருக்கும் மேனி&lt;br /&gt;புழுக்களின் தீனி&lt;br /&gt;புரிந்தவன் ஞானி&lt;br /&gt;புத்தி பெறுவாய் நீ&lt;/strong&gt;&lt;/blockquote&gt;என்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் "வீதி வரை உறவு" என்ற  கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;அந்த ஒரு தூக்கத்துக்கு&lt;br /&gt;ஆளாகும் முன்னே&lt;br /&gt;இந்த ஒரு தூக்கத்திலும்&lt;br /&gt;என்ன சுகம் கண்ணே?&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;"But I have Promises to keep&lt;br /&gt;Miles to go before I sleep&lt;br /&gt;Miles to go before I sleep"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு "தூக்கம்" நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!&lt;br /&gt;உண்மைதானே சொல்லுங்கள்?&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு  என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. "உலக முஸ்லீம்களே!" என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. "உண்மைதானே சொல்லுங்கள்?" என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலின் அடித்த அடி :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;இறைவனை யாருக்குத் தெரியும் - நபி&lt;br /&gt;இரசூல் இல்லை யென்றால்&lt;br /&gt;நபியை யாருக்குப் புரியும் - வல்ல &lt;br /&gt;நாயன் இல்லையென்றால்!&lt;/strong&gt;&lt;/blockquote&gt;இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை "Mohammadans" என்று கூறும் அவர்களிடம் நாங்கள் "முஸ்லீம்கள்" என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர். &lt;br /&gt;ஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்&lt;br /&gt;ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?&lt;br /&gt;ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ&lt;br /&gt;ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!&lt;br /&gt;வேதம் கொடுத்தான் இறைவன்! - செயல்&lt;br /&gt;விளக்கம் கொடுத்தார் நபிகள்!&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;நபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;இருட்டில் இருந்தான் இறைவன் - நபி &lt;br /&gt;இங்கே பிறந்திடும் முன்பு!&lt;br /&gt;அறிந்திட வைத்தார் அண்ணல் - அவன்&lt;br /&gt;அற்புதம் தெரிந்தது பின்பு!&lt;br /&gt;காவியம் வடித்தான் இறைவன் - அதன்&lt;br /&gt;கருவாய் அமைந்தார் நபிகள்!&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-3918036366505949689?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/3918036366505949689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=3918036366505949689' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3918036366505949689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/3918036366505949689'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2009/04/blog-post.html' title='இறைவனும் இருட்டும்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_GkbItdgQDg0/SeeZDJ04jJI/AAAAAAAAAgo/e3-plKC1Z7k/s72-c/sALEEM.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1173655880090419504</id><published>2008-12-12T12:27:00.000-08:00</published><updated>2008-12-12T12:36:02.653-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்குச் செய்திகள்'/><title type='text'>துணுக்குச் செய்திகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SULKwFLGLvI/AAAAAAAAAao/5nkH0DwnV8M/s1600-h/Tanjore.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5279004640602894066" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 177px" alt="" src="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SULKwFLGLvI/AAAAAAAAAao/5nkH0DwnV8M/s200/Tanjore.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நமது பண்டைய கட்டிடக்கலையின் பெருமையை உயர்த்திக் கூறுகையில் நம்மவர்கள் அவசியம் தஞ்சை பெரிய கோயிலின் மகத்துவத்தை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். கோபுரத்தின் நிழல் கீழே விழாத வகையில் கட்டப்பட்டிருப்பதாக கதை விடுவார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெரியகோயில் கட்டப்பட்டவுடன், அதன் வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்துப் பிரமித்த தஞ்சை மக்கள் கவலையுடன் 'கோபுரம் விழாமல் இருக்குமா?'  என்று கேட்டதற்குத் தலைமை ஸ்தபதி தமாஷாக 'பயப்படாதீர்கள்! அதன் நிழல்கூடக் கீழே விழாது!' என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை நிஜம் என்று இப்போதும் பலர் 'சீரியஸாக' நம்பிக் கொண்டிருப்பதுதான் இதில் வேடிக்கையான விஷயம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-1173655880090419504?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/1173655880090419504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=1173655880090419504' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1173655880090419504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1173655880090419504'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_4877.html' title='துணுக்குச் செய்திகள்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SULKwFLGLvI/AAAAAAAAAao/5nkH0DwnV8M/s72-c/Tanjore.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-2806596649966462580</id><published>2008-12-12T11:31:00.000-08:00</published><updated>2009-04-07T15:00:04.161-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேயா நாட்டு சரித்திரம்'/><title type='text'>பினாங்கில் நம்மவர்கள்</title><content type='html'>Indian Muslims in Penang: Role and contributions&lt;br /&gt;Seeni Naina Mohamed&lt;br /&gt;&lt;br /&gt;The exact year of the first arrival of Indian Muslims in Penang or elsewhere in the Malayan Peninsular is not known. But there is enough information for us to assume that they were here in Penang as early as 18th century, earlier than the British. Historians say that before 1786 Indian Muslims were doing business in Kuala Kedah, and by 1794 there were 1000 Indian Muslim merchants in George Town.&lt;br /&gt;&lt;br /&gt;In Malaysia, Tamils form a very big majority of the community referred to as Indians. Likewise, Tamil Muslims are the major group of the people referred to as Indian Muslims here. These Tamil Muslims are generally known in two groups: the Marikars and the Rawthers. These terms carry interesting explanations.&lt;br /&gt;&lt;br /&gt;It is said that the word Marikar took shape from the original Tamil word Marakalayer which means the people of wooden boats. This is supported by the fact that these Marikars, even today, are found mostly in the coastal areas of Tamilnadu and therefore their connec tion with the wooden boats is justified. The word Rawther is said to have come from the word Mauther which means people in charge of elephants' and horses' divisions of the king's army. With or without connection to these terms, another variation found.in these groups is that the Marikars follow the Shafi Order of Islamic Shariah, while the Rawthers adhere to the Hanafi Order of the Shariah.&lt;br /&gt;Another interesting fact to be mentioned here is that the family name Merican found in the Modern Malay Community actually refers to Marikar, and similarly the name Rautin refers to Rawther.&lt;br /&gt;&lt;br /&gt;It would be also useful to know of another form of identification that exists among Indian Muslims, particularly in Penang. This refers to their place of origin in Tamilnadu. Thenkasi is a heavily muslim populated area in the Trinelveli district of Tamilnadu and Kadaya Nallur is a big town there. Almost all the Muslims who came here from this area seem to have settled in the islands of Penang and Singapore but, not in the Peninsular.&lt;br /&gt;&lt;br /&gt;They mostly came with their families and did not scatter around but lived together closely as a community. They identified themselves generally as Thenkasi Muslims and occasionally as Kadaya Nallur Muslims.&lt;br /&gt;&lt;br /&gt;The other group of Muslims were from different districts of Tamilnadu, mostly from Ramnad and Tanjore. They formed the typical Indian Muslim business community in Penang and were referred to as Petai Muslims by the Thenkasi Muslims.&lt;br /&gt;Other than these Tamil Muslims, the term Indian Muslim also includes smaller groups sucn as the Kerala Muslims, Bengali Muslims, Gujerati Muslims, and others from the various states of India.&lt;br /&gt;&lt;br /&gt;The Kerala Muslims came from another South Indian State called Kerala. They are also known as Malabar Muslims sometimes referred by the people as 'Kaka' which means elder brother, in contrary to the malay word kaka meaning elder sister. These Malabar Mus lims seem to have lived in Penang in considerable number. The Kampong Malabar around Transfer Road, and the Masjid Malabar in Beach Street, built by them but destroyed in the bombing during the 2nd World War, are evidences of their presence in Penang.&lt;br /&gt;&lt;br /&gt;The Bengali Muslims came from the State of Bengal in India at a time when the coun¬tries Pakistan and Bangala Desh were not born, and therefore have to be included as Indian Muslims. The Masjid Bengali in Leith Street and the Kampong Bengali in Butterworth are evidences of their contributions in Penang.&lt;br /&gt;&lt;br /&gt;The Gujerati Muslims are from the North Indian state of Gujerat, and another group of Muslims colloquially referred to as Bombay Muslims are from another North Indian state called Maharashtra. These groups of Muslims are small in number and are mainly business¬men. There could be a small number Muslims from other North Indian states too.&lt;br /&gt;&lt;br /&gt;There is an important point to be stressed here. The terms, Marikars and Rawthers, Thenkasi and Petai Muslims or the other words and phrases used to refer to the various groups of Indian Muslims are merely terms of identification based on their place of origin. They do not indicate any superiority, inferiority or any order of importance in anyway.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;BUSINESS AND JOBS&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thenkasi Muslims form a big portion of the Indian Muslim community in Penang. From the beginning they were hard-working people with little interest in business. Few of them supplied hand manufactured tobacco-products like cigars, beedi and snuff-powder. Some had stalls selling beef, fish or groceries, and other small-scale businesses. Others turned to labour in the wharfs of Penang shipyard and in the Government departments like PWD, Water-Works, Town Council and so on; while the women supplied ground spices.&lt;br /&gt;&lt;br /&gt;But today most of them, both men and women, are found in better jobs in Government and private sectors. They are also engaged in a variety of businesses. Many of them are highly educated and are found in all types of reputable professions and top-level govern ment positions. One to mention here would be Tansri Ali Abu Hassan, the former Governor of our Bank Negara.&lt;br /&gt;&lt;br /&gt;The other group of Muslims were basically businessmen. There was a top sector of them some of whom indulged in shipping business: as shipping agents; ship chandlers; suppliers of boats, forklifts, and materials needed for loading and unloading. They also supplied labourers for cargo-handling. Many were importers, agents and suppliers of cere¬als, groceries, and other consumer products. Their imports and trading also included tex¬tiles, paper and stationery. There were jewellers not only selling gold and silver ornaments but also diamonds and gemstones. There were also money changers, dealers of old coins and used-stamps. They also had restaurants, bakeries and cold storage houses. They were practically involved in all types of business.&lt;br /&gt;&lt;br /&gt;These businessmen needed staffs of all levels: managers, accounts clerks, shop as¬sistants, cooks, labourers and so on. They recruited and brought their relatives, neighbors, and folks of their home-villages from Tamilnadu to fill these staff requirements. These people who came to work for them, together with the employers, formed a strong and successful business community. Business flourished especially until the Penang Island was a free-port.The Muslim Merchant Society formed in 1912 is an evidence of the past 'golden busi¬ness era' of this community. This Merchant Society still continues to be a registered body in control of a small group of Indian Muslims and owns a valuable piece of land in Transfar Road.&lt;br /&gt;&lt;br /&gt;Today, very few among the younger generation of this business group, are still in busi¬ness. Many of them who had obtained higher education have become professionals. A great number of them have turned to white-collar jobs of all levels in government and private sectors. Many old business organizations, once very successful, were left with nobody to take over. Therefore lot of them shrunk, many closed down, and some were sold to the emerging businessmen of other local communities.&lt;br /&gt;&lt;br /&gt;Nevertheless, few of the old business organizations have developed to be bigger con¬cerns. Some have even bloomed up to be international business organizations to present¬day corporate level. A very small number of the sons or grand sons of these 'once great businessmen' have grown-up to be big manufacturers. One such organization to mention here would be the Barkath Group of Companies which was first established in 1945&lt;br /&gt;&lt;br /&gt;There is one more important fact not to be missed at this point. There are quiet a number of, offshoots of this community, who are now flourishing 'big-level' businessmen, but unable to represent this community as they have assimilated into the larger, Malay Muslim Community.&lt;br /&gt;&lt;br /&gt;Having understood the origin and the social structure of this community and its inter¬ests and endeavors for earning, We may now look at the other activities it was involved.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;RELIGION&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;First of all, Indian Muslims in this country have rightfully earned the pride for their role in bringing Islam to the Nation, and the Penang Indian Muslims, certainly, are entitled for their share of this pride. In fact the Penang Indian Muslims have made many additional contributions, in the field of Religion i.e. Islam. The beautiful pre-independence Mosque in the nation, the Masjid Kapitan Keling was built by a Committee headed by Kapitan Kader Mohideen in 1802. Probably this is the mosque with biggest Wakaf property in the Nation and this Wakaf Property indeed was provided by Indian Muslims. Masjid Kapitan Keling was the State Mosque of Penang until the present State Mosque was built in 1980. This mosque, currently under reconstruction, is still managed by a committee of Indian Muslims under the supervision of the State Islamic Religious Department.&lt;br /&gt;&lt;br /&gt;Other than this, The Alimsa Walai Mosque in Chulia Street, with the Wakaf Property, was built by Indian Muslims in 1811. The burial ground of the founder of this mosque Imam Shaikh Abdul Kadir, is still maintained within the Mosque building.&lt;br /&gt;&lt;br /&gt;The Nagoor Derga built in ........ and the Anjuman Himayathul Islam built in 1930 both Chulia Street, Masjid Bengali in Leith Street built in 1803, the Rawanna Mosque in Perak Road, Masjid Maqbul in Jelutong, Masjid Jalan Perangin, Masjid Abdul Wahab in Macalister Road, Masjid Shaik Dawood in Kampong Melayu, Masjid Shaik Yusof in Doby Ghaut, the Dato Koya derga in Transfar Road and the Indian Muslim mosque in Butterworth were all built by Penang Indian Muslims. Perhaps there are many other such mosques not identified because they have been abandoned or destroyed like the Masjid Malabar in Beach Street.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;SOCIAL SERVICES&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;After religion, The Indian Muslims seem to have given the next importance to social services. Perhaps this is because, giving and helping those in need, is a basic religious obligation to Muslims.&lt;br /&gt;&lt;br /&gt;The Penang Muslim League, was one of the eary Indian Muslim Organizations in Penang with may of the other Indian Muslim Associations in Penang as its affiliates. Muslim League is well known for its social services which includes educational scholarships; aids to orphan¬ages and victims of natural disasters; helping the handicapped; Raya gifts for the needy, sports activities and many other community services in general. It has its own building where it offers a regular free medical service open to all. It represents the community in the State Islamic Religious Department and the Board of Zakat Allocations.&lt;br /&gt;&lt;br /&gt;Another old and big association having its own building with a very large hall at Jalan Transfar is the United Muslim Association formed in 1929. Anjuman Himayathul Islam formed in 1930, Persatuan Hidayathul Islam formed in 1941, Persatuan Nurul Islam formed in 1946, Kadayanallur Muslim Association formed in 1946, and the IMAN Society formed in 1991 are other Indian Muslim Associatons with own buildings. There are more than 15 Social Organi¬zations in Penang including Central Muslim Society, Iqbal Islamic Association, Muslim Youth Sports Club, and the Butterworth Indian Muslim Association. All these associations have been involved in similar social service activities.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;SPORTS&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Apart from social services, all the Indian Muslim Associations in Penang also had sports activities. Their youths played various games like Sepak Takaro, Badminton and Foot Ball. They had Teams representing the associations and had inter-association matches. But there was also a separate organization mainly for sports. This was the Muslim Recreation Club briefly referred to as MRC, formed in 1942. The other local communities too had Rec¬reation Clubs at this time: CRC for the Chinese and IRC for the Indians in general. The MRC teams played inter club matches with CRC and IRC. They also took part in State level matches and tournaments.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;POLITICS&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Penang Muslim League which is a Social Organization now, was actually one of the early political parties in Malaysia. It was formed around 1954 and played an active role in politics until 1974 when it was reformed to be a social body. It was an affiliate of UMNO and a Member of the Penang Alliance. It fielded Haji S.M. Idris and Thyub Khan for the City Council Elections and Honorable A.M. Abu Bakar for the Settlement Elections under the Alliance tickets and attained a 100% victory. It has always played an important role in decid¬ing the victory of candidates in its constituency. It is an interesting fact that the Penang Muslim league voted for the admission of MIC into the Alliance. The Muslim League Leaders have been regularly honored with awards by the government since its early years, even during the British rule. The highest of such awards during British rule was the OBE award which carried the 'Honorable' title, awarded to A.M. Abu Bakar, the first president of the Muslim League.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;LANGUAGE AND LITERATURE&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Indian Muslims, specifically in this context the Tamil Muslims, loved and respected their Language and Literature. The Thenkasi Muslims who had come with their families wanted their children to learn their mother tongue. Therefore they started their own Tamil Schools as early as nineteen thirties. The Anjuman Tamil School was started in 1932, the United Muslim Tamil School in 1934 and .the Thenkasi Muslim Tamil School in 1950. They maintained the schools and paid the teachers by themselves. These schools have now been either taken over by the Government or closed.&lt;br /&gt;&lt;br /&gt;Among Indian Muslims were many writers, poets, speakers and scholars of literature well known throughout the nation. Indian Muslims played a key role in forming the North Malaya Tamil Writers Association based in Penang in 1960. In fact the first president of this Association was K.K.D. Mohamed Ibrahim while Nakambadi Karim a famous poet was the first secretary. Both were Indian Muslims. J.M. Hussain the next President was a famous writer, author and literary man. Mr. Othuman Gani with the title Chitiramozhi Pulavar, was a famous speaker who trained a lot of youths in debating and public speaking. A. E. Mohamed Ibrahim, a well known tamil short story writer was also an Indian Muslim from Penang.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;PUBLICATION OF NEWS PAPERS AND BOOKS&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Another important field in which the Indian Muslims were the pioneers is the publica¬tion of news papers. Hammed Kalanjiam a well known tamil journalist then was editor for many news papers. Among others were Ahamed also known as Sarana Baskaran and Fakir Mohamed. In fact the editor and publisher of the first Tamil News paper circulated in Malaya and Singapore was an Indian Muslim. It may be very surprising to know that the first news paper in Jawi too was published by an Indian Muslim. Some of the newspapers and maga¬zines published from Penang by Indian Muslims are Malaya Mitiran in 1932, Desa Nesan in 1933, and Malaya in 1957. There were also authors of books among Indian Muslims. The first of the authors known was Mohamed Sultan Marikar who published two books, one in 1890 and the other in 1900, followed by S.P.S. Kader Sahib in 1898 and Abdul Aziz in 1936.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;INDIVIDUAL CONTRIBUTIONS&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Like the other local communities, the Indian Muslim community in Penang did have many outstanding individuals whose contributions benefited not only their community but all the people in the State as well as the nation on the whole. Honorable A.M. Bakar in public service, J.M. Hussain in Literature, A.S. Mydin in Sports are few of the many Indian Muslim individuals who were well known throughout the nation for their services. Even today, the remarkable contributions of Outstanding Indian Muslims like Tansri Ali Abu Hassan as a top level Economic Expert in the Government, and Haji S.M. ldris who is respected for his ser¬vice as the President of Penang Consumer Association, still continue.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;CONCLUSION&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;This is only a quick glance at the community's two-century story. Nevertheless, it could possibly be enough to provide a basic understanding of the origin, social structure, talents, endeavors and achievements of the community as well as its role and contributions in the past.&lt;br /&gt;&lt;br /&gt;Today, 45 years after independence, the Indian Muslims still maintain a notable place among other communities in Penang. But, have they kept up with the process of progress around them?&lt;br /&gt;&lt;br /&gt;Whatever the answer is, establishing it with supporting facts may need some research and study. But there is one major factor which is very obvious in today's Indian Muslim community.&lt;br /&gt;&lt;br /&gt;This community was at its best in most ways, when it unanimously and proudly identi¬fied itself as Indian Muslims. But, responding to the economic and political developments in the country after the independence, it has pushed itself into an identification crisis.&lt;br /&gt;&lt;br /&gt;An analyst, Hanapi Dollah, in his Malay article "Politik dan Budaya India Muslim di Pulau Pinang: Satu Persoalan Teoritis Ethnisiti" expresses this in blunt words. He says: "Perkelompokan dan identiti orang India Muslim berubah daripada India Muslim kepada India apabila mereka menyertai MIC clan menjadi India Muslim semula apabila mereka menubuhkan KIMMA clan akhirnya berubah lagi menjadi Melayu apabila mereka menyertai UMNO"&lt;br /&gt;&lt;br /&gt;"..... . identity of Indian Muslims changes from Indian Muslim to Indian when they join MIC and becomes Indian Muslim again when they form KIMMA and finally changes further to Malay when they join UMNO"&lt;br /&gt;&lt;br /&gt;This dilemma of identity has hindered their unity, diversified their talents and efforts, and weakened whatever political strength they would have. Perhaps a Saviour might emerge in time!&lt;br /&gt;&lt;br /&gt;Whatever it is, the Indian Muslim community by nature is a hard working and law abid¬ing community with a lot of talents, and there is no doubt that their constructive role and contributions to the state and nation will continue forever.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-2806596649966462580?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/2806596649966462580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=2806596649966462580' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/2806596649966462580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/2806596649966462580'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_5048.html' title='பினாங்கில் நம்மவர்கள்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-8261276376697341228</id><published>2008-12-12T03:17:00.000-08:00</published><updated>2008-12-12T03:23:11.480-08:00</updated><title type='text'>தமிழ் எழுத்தாளர்கள்</title><content type='html'>தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திரு. தோப்பில் முகம்மது மீரான். அவரது படைப்புகளைப் பற்றி திரு.வெங்கட் சுவாமிநாதன் திண்ணையில் எழுதிய கட்டுரையை படிப்பது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;இதோ அதன் சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=60705179&amp;amp;edition_id=20070517&amp;amp;format=html"&gt;http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=60705179&amp;amp;edition_id=20070517&amp;amp;format=html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-8261276376697341228?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/8261276376697341228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=8261276376697341228' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8261276376697341228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8261276376697341228'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_12.html' title='தமிழ் எழுத்தாளர்கள்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1045076844538501554</id><published>2008-12-09T14:35:00.000-08:00</published><updated>2008-12-09T14:45:49.893-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணையில் அப்துல் கையூம்'/><title type='text'>பாகிஸ்தான் பாரதி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST709p_ivEI/AAAAAAAAAag/9b2wqW9bP-o/s1600-h/Iqbal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5277925153406368834" style="WIDTH: 89px; CURSOR: hand; HEIGHT: 118px" alt="" src="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST709p_ivEI/AAAAAAAAAag/9b2wqW9bP-o/s400/Iqbal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Thursday April 3, 2008&lt;br /&gt;அப்துல் கையூம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில் அவர் முகத்தில் ஒரு அதிருப்தி ரேகை. அவர் வீசியதோ ஒருவிதமான ‘குறுகுறு’ பார்வை. தேசத்துரோகம் ஏதாவது புரிகின்றோமோ என்ற ஐயம் எனக்குள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பால் எனும் இலக்கியவாதியை நான் காதலிக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன. அப்போது எனக்கு 12 வயது. இக்பாலை எனக்கு அறிய வைத்தது எங்கள் பிறைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அவுரங்கசேப் கான். முன்பு பட்டாளத்தில் பணி புரிந்தவர். பள்ளி ஆண்டு விழாவின்போது நானும் என் இரண்டு நண்பர்களும் அந்தப் பாடலை பாடவேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“சாரே ஜஹான் சே அச்சாஹ், ஹிந்துஸிதான் ஹமாரா&lt;br /&gt;ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா” &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;உரக்கப் பாடினோம். உச்ச ஸ்தாயியில் பாடினோம். அனுபவித்துப் பாடினோம். அர்த்தமே புரியாமல் பாடினோம். பாடலைக் கேட்டவர்கள் பரவசமானார்கள். பலத்த கைத்தட்டல் வழங்கினார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அம்மொழியும், வார்த்தையும், இசையும், ராகமும், இதமான ஏற்ற இறக்கமும் என்னை என்னவோ செய்தது. உள்ளே யாரோ சம்மணங் கொட்டி அமர்ந்து சம்மட்டியால் அடித்ததைப் போல் ஓர் உணர்வு. தேனீக்களை விரட்டிய பின் தேன்கூட்டை கசக்கிப் பிழிவார்களே அதுபோல என் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்து, இந்தியன் என்ற உணர்வை ஏற்படுத்தியது அவனது “தரானே-ஹிந்த்” பாடல். 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று ‘இத்திஹாத்’ (பொருள் = ஒற்றுமை) என்ற வார இதழில் அப்பாடல் முதன் முதலில் வெளிவந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1947, ஆகஸ்ட் 15 – ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததை பிரகடனம் செய்ய திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் குரலெடுத்துப் பாடிய சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதமும் இதுதான்&lt;br /&gt;அந்த அமர கீதத்தின் சாராம்சம் : &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“பரந்து விரிந்த பாருக்குள்ளே&lt;br /&gt;பன்மடங்கு சிறந்தது இந்துஸ்தானம்!&lt;br /&gt;இந்திய நந்தவனத்து புல்புல்கள்&lt;br /&gt;நாங்கள் இசைக்கும் இனியகானம் ! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏனோ என்னை அறியாமலேயே இக்பாலின் மேல் ஒரு மோகம். ஏற்பட்டது ஓர் இலக்கியத் தாகம். அதற்கு காரணம் அவன் வார்த்தை பிரயோகம். அதை அவன் கையாளும் லாவகம். அதன் பக்குவம். தெள்ளிய ஓடையிலிருந்து நீரை அள்ளி பருகுவது போல் இன்பம் பயக்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பால் - அவன் பால் காதல் கொண்டது நான் மட்டுமா? ஒரு தேசமே அவனுக்காக காதலர் தினம் கொண்டாடுகிறது. அதற்கு ‘இக்பால் தினம்’ என்று பெயர். நவம்பர் 9 - அங்கே அது அரசாங்க விடுமுறையும் கூட. அவர்களுக்கு எல்லாமே ‘அல்லாமா’தான். அவன் நினைப்பால். அவன் கவிதையின் ஈர்ப்பால், அதன் பொருட்பால் தந்த திளைப்பால் மூழ்கியவர்கள் ஏராளம் ஏராளம். மூச்சுக்கு மூச்சு இக்பால். பேச்சுக்கு பேச்சு இக்பால். அங்கே - காந்தியும் அவனே; காளிதாசனும் அவனே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவன் அவனுக்காக பேசியதை விட மற்றவர்களுக்காக பேசியதே அதிகம். மனங்களுக்கு மருத்துவம் பார்த்தே மருத்துவனானவன். வழக்குரைஞன் அவன். வழக்கில் வாதித்ததை விட வளமிக்க கவிதைகளால் வாதம் புரிந்ததுதான் அதிகம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;வாதிட்டதெல்லாமே மனித இனத்தின் வளம்வேண்டிதான். வாதிக்கும், பிரதிவாதிக்கும் சேர்த்தே வழக்குகள் தொடுத்தான். தீர்ப்பும் அவனே வழங்கினான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“பாட்டும் நானே! பாவமும் நானே!” என்ற பாடல் வரிகளைப்போல “கேள்வியும் நானே! பதிலும் நானே!” என்ற ரீதியில் பாடல்ளைத் தந்தவன். . “ஷிக்வா” அவனது கேள்விக் கணை. “ஜவாபே ஷிக்வா” அவனது பதில் மழை.&lt;br /&gt;முறையீடுகள் பெரும்பாலும் இறைவனை நோக்கித்தான் இருந்தன. எப்படித்தான் அவனுக்கு அந்த தைரியம் பிறந்ததோ? இறைவனிடமே கேள்விகள் கேட்டான். கேள்விகள் கேட்பது கடினமல்லவே? யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எச்.ஜி. ரசூல் கேட்கவில்லையா? அதற்கு தீர்வு காண்பதென்பது எளிதான ஒன்றா? இக்பால் அங்கேதான் உயர்ந்து நிற்கின்றான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;‘புல்புல்’ பறவையை அவன்தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவனது உள்ளமும் அவன் வளர்ந்து திரிந்த இமாலயப் பிரதேச பனிபோன்று வெள்ளையாகவே இருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆச்சரியமாக இருந்தது எனக்கு. பரிவு, பச்சாதாபம், இரக்கம், கருணை, மனித நேயம் இவை அத்தனையும் ஒருபிடி இதயத்திற்குள் அடங்க முடியுமா என்ன? கூட்டுக் குடும்பமாய் இவனுக்குள் குடியிருந்ததே? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பால் ஒரு புரட்சியாளனா?, தத்துவவாதியா?, சூஃபியா?, என்னால் கணிக்க முடியவில்லை. எழுத்தாளனுக்கே உரிய போராட்டக் குணம் அவனுள் பொதிந்திருந்தது; ஞானிக்கே உரிய சூஃபித்துவம் அவனுள் உறைந்திருந்தது; அறிவாளிக்கே உரிய தத்துவார்த்த சிந்தனைகள் அவனிடம் நிறைந்திருந்தது.&lt;br /&gt;ஒருவன் தன் ஆளுமையின் மனோபலத்தினால் இவ்வுலகையே அடிபணிய வைக்க முடியும் என்பது இக்பாலின் சித்தாந்தம். சுய அறிவும் சுய சிந்தனையும்தான் ஒருவனை முழுமனிதானக மாற்றுகின்றது என்பது அவனது கோட்பாடு. அவனது முற்போக்கு சிந்தனை நம் சிந்தனைக்குணவு தரவல்லது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு விவாதம்” இது இக்பாலின் படைப்புகளில் ஒன்று. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவனே அவன் கவிதையில் குறிப்பிடுவதைப் போல் ‘எந்த முடிவுக்கு முடிவே இல்லையோ அந்த முடிவின் முந்தானையை பிடித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்கிறான். (ஒரு தேவதையும் ஒரு கவிஞனும்). அவன் சூசகமாக கூறும் ‘முடிவே இல்லாத முடிவு’ இறைவன்தான் என்பதை நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவனது “மனிதன்” “தனிமை” “பனித்துளியும் தாரகையும்” போன்ற கவிதைகள் வாழிவியலின் முரண்பாடுகளை காரசாரமாக வாதிக்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மற்ற இஸ்லாமியக் கவிஞர்களிடமிருந்து மாறுபட்டவன் இவன். இறைவனுடன் நேர்முக விவாதத்தில் ஈடுபடுவதாக தன்னைத் தானே கற்பனைச் செய்துக் கொள்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பால் கையாண்டிருக்கும் சில கருத்துக்கள் மார்க்க சர்ச்சைகளை கிளப்புவது போலிருக்கும். சில நேரங்களில் அவன் தான் சார்ந்திருக்கும் மதக் கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிச் செல்கின்றானோ என்ற சந்தேகத்தை உண்டாக்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சுவனத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டது யாருக்கு நஷ்டம் என வினா எழுப்புகிறான். நஷ்டம் இறைவனுக்கா அல்லது ஆதமுக்கேவா? என்ற விவாதத்தை முன் வைக்கிறான். ஆதத்தை வைத்து அவன் பரிட்சித்து பார்த்ததை எப்படி எடுத்துக் கொள்வதென்பது அவனுடைய கேள்வி.&lt;br /&gt;தூதர்கள் மூலம் பேசுவதைத் தவிர்த்து தன்னுடன் நேருக்கு நேர் பேச இறைவனுக்கே சவால் விடுக்கின்றான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மனிதனின் எல்லையிலா ஆசைகளையும், அவனுக்கு அருளப்பட்டிருக்கும் வெகு குறைவான வளங்களையும் ஐஸ்வர்யங்களையும் ஒப்பிட்டு, இது போதுமா? என்ற ரீதியில் கேள்விகள் தொடுக்கின்றான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;உரிமையுள்ளவர்களிடம்தான் பிடிவாதம் செய்ய முடியும்; முறண்டு பிடிக்க முடியும்; வேண்டியதை கேட்டு பெற முடியும். இக்பால் இறைவனிடம் கேள்வி கேட்பதை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பாலை இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்பவன் அல்ல என்பது திறானாய்வார்களின் கருத்து. இக்பாலின் கவிதைகளை புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் முதலில் இக்பாலை புரிந்துக் கொள்ளுதல் அவசியம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பாலின் ஒரு சில கவிதை படைப்புகளில் கவிதைக்கரு நாடக வடிவில் அமைந்திருக்கும். அதன் நடையும், போக்கும், இடையிடையே வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். ஒரு சுவையான பூவணிக் கோலத்தின் இழை ஓடிக் கொண்டிருக்கும். நடுநடுவே இறுதி முடிச்சை அவிழ்க்கக்கூடிய சில சமிக்ஞைகள் கோடிட்டுக் காட்டப்படும். அதில் விவாதங்கள் எழும். கற்பனைக் காட்சியில் அவனே ஒரு வியூகத்தை அமைப்பான். விடுவிக்க முடியாத புதிர் போன்று தென்படும். இறுதியில் அவனே அந்த முடிச்சை இலகுவாய் அவிழ்த்து வைப்பான். தீர்வும், நற்செய்தியும் பொதிந்திருக்கும். முடிவில் அவனது தனிப்பட்ட முத்திரை முத்தாய்ப்பாக பதிந்திருக்கும்.&lt;br /&gt;இதற்கு இரண்டு மிகச் சிறந்த உதாரணங்களாக “கவிஞனும் ராத்திரியும்” “கவிஞனும் சுவனக் கன்னிகையும்” இவையிரண்டையும் சொல்லலாம்.&lt;br /&gt;இக்பாலுக்கு பிடித்தமான சில பிரத்யேக படிமங்களும் கலைக் கருத்தும் நம்மை ஈர்க்கின்றன. அவனுக்கு பிடித்தமான மலர் “துலிப்”. பிடித்தமான பறவை எது தெரியுமா? பருந்து. ஆம்! பார்ப்பதற்கே பயமாக இருக்குமே அந்தப் பறவைதான். அவனுக்கு அன்னியோன்யமாக இருப்பது நமக்கு அந்நியமாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்னப்பறவையோடும், குயிலோடும், மயிலோடும், கவிதையில் உறவாடி பழக்கப்பட்ட நமக்கு பருந்தின் நட்பு விநோதமாகப் படுவது இயற்கைதானே?&lt;br /&gt;விளக்குகளை சுற்றிவரும் விட்டில் பூச்சிகளை விட சிறந்தது மின்மினிப்பூச்சிகளே என்கிறான் இவன். அதற்கு இவன் கூறும் காரணம் வித்தியாசமாக இருக்கிறது. மின்மினிப்பூச்சிகள் படபடத்துப் பறக்கையில் விளக்குகள் எரிவது போலிருக்கும். அந்த சிறு வெளிச்சம் இவனை கவர்ந்திழுக்கிறது. அந்த ஆளுமை (Possessiveness) கவிஞனை உற்சாகப் படுத்துகிறது. தனக்குத்தானே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் -– அந்த தன்னாற்றல்; தன்னிறைவு; தன்னம்பிக்கை, தன்முயற்சி – இவற்றை வியந்து போற்றுகிறான் இக்பால். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனிதன் ஒளிந்திருக்கிறான் என்பது இக்பால் கண்டறிந்த உண்மை. அதனை அவரவர் வசதிக்கேற்ப அழைப்பதுண்டு. “தான்” என்றோ “ஆளுமை” என்றோ “மனத்திடன்” என்றோ எப்படி வேண்டுமானாலும் அதனை அழைத்துக் கொள்ளாலாம். அந்த மகாபலம் பொருந்திய ஆளுமையின் சக்தியை ஒன்று கூட்டி, ஒருங்கே சமைத்து; இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது இக்பாலின் தத்துவம். அவன் சூஃபியாகத் தோற்றமளிப்பது இது போன்ற சிந்தனைகளால்தான்.&lt;br /&gt;உளத்திண்மைக்கு முன்பாக உலகத்திலே எந்த வித சக்தியும் தாக்கு பிடிக்க முடியாது என்று உறுதிபட கூறுகிறான் அவன். அந்த மனப் பக்குவத்தை எட்டுவதற்கு மனிதன் பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும்; பல தடைகளை சந்திக்க நேரிடும்; பல சோதனைகளை சமாளிக்க வேண்டும்.&lt;br /&gt;பாரதியை இந்தியாவின் இக்பால் என்றும், இக்பாலை பாகிஸ்தானின் பாரதி என்றும் கூட மாற்றி மொழியலாமோ? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஓ.. தாராளமாக.. .. அவனும் இவனும் வேறல்ல.&lt;br /&gt;பாரதி - “மஹாகவி” என்று பண்புடன் அழைக்கப்படுவதைப் போலவே. இக்பால் - “அல்லாமா” என்று அன்புடன் அழைக்கப்படுகிறான். “அல்லாமா” என்றால் அறிவு நிரம்பியவன் என்று பொருள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“பாட்டுக்கோர் புலவன்”, “கவிராஜன்” என்ற அடைமொழியைப் போன்றே இக்பாலுக்கும் (Shair-e-Mashriq) கிழக்கு தேசத்துக் கவிஞன் , (Hakeem-ul-Ummat) சமுதாயச் சாது என்ற சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவன் பராசக்தியை தேடி அலைந்தான். அவன் மகாசக்தியை தேடி அலைந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருவன் வெள்ளிப்பனிமலையின் மீதுலாவித் தேடினான். மற்றவன் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி அலைந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாரதி, சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சூளுரைத்தான். இக்பாலோ பாராசீக மொழியில் பாட்டெழுதி அண்டை தேசத்துக்கு மானசீக பாலம் அமைத்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“சாரே ஜஹான்ஸே அச்சாஹ்&lt;br /&gt;இந்துஸிதான் ஹமாரா” - இது இக்பாலின் கண்ணம்மா பாட்டு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்&lt;br /&gt;பாரத நாடு” - இது பாரதியின் ‘ஷிக்வா’. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இரண்டுக்குமே அர்த்தம் ஒன்றுதான்.&lt;br /&gt;இருவருமே விடுதலை வேட்கையில் கருத்தரித்த அக்னி குஞ்சுகள். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கெதிராக ‘எழுத்துத் துப்பாக்கியை’ ஏந்தியவர்கள். குண்டுகளை விட வீரியம் மிக்க இவர்களின் எழுத்துக்கள், வெள்ளையர்களை கதி கலங்கச் செய்தது. தெற்கில் இவனும் வடக்கில் அவனுமாய் வெள்ளையர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருவருமே முறுக்கு மீசைக் காரர்கள். கோபத்தை இறைவன் இவர்களின் மூக்கின் நுனியில் வைத்துவிட்டான் போலும். ‘நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டாலே நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பொறுமியவர்கள் இவர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவனது பார்வையில் இந்தியா ஒரு ஏடன் தோட்டம். இவனது பார்வையில் பாரதம் ஒரு பிருந்தாவனம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவன் புல்புல்களை வைத்து பாடல்கள் புனைந்தான். இவன் பாடியது குயில் பாட்டு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருவரும் பறவைகளை நேசித்தார்கள். அதனால் தான் அவர்களுக்கும் சிறகு முளைத்தது. வானம்பாடிகள் ஆனார்கள். வனாந்திரங்களிலும், பனிச்சாரல்களிலும், மனிதர்களின் மனதிலும் பாடிப்பாடி திரிந்தார்கள்.&lt;br /&gt;மனித இனத்தில் பிறந்தவனையே நம் ஜாதி என்று ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மனிதர்கள் மத்தியில் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றவர்கள் இவர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பாலின் மூதாதையர்கள் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள். சாஹஜ் ராம் சப்ரு என்ற அவரது மூதாதையர் ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர் ஆவார். இக்பாலின் தகப்பனார் ஷேக் நூர் முகம்மது புகழ்பெற்ற தையல் நிபுணர். இஸ்லாமிய மார்க்கப் பற்று நிரம்பியவர். தன் பிள்ளைகளுக்கும் மார்க்க அறிவை போதித்து வளர்த்தார்.&lt;br /&gt;பாரதியும் பிராமணனே. அவனது சமுதாயச் சிந்தனை, சமநிலை பண்பாடு, புரட்சிக் கருத்துக்கள் அவன் வகுப்பினரிடையே அவனுக்கு பலத்த எதிர்ப்பைத் தேடித் தந்ததென்னவோ உண்மை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;காதலின் சின்னமாக 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட தாஜ்மகாலை கண் குளிரக் கண்ட பின்னரே உயிர் நீத்தான் ஷாஜகான். ஒரு விதத்தில் அவன் பாக்கியசாலி. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்கவிஞர்கள் இருவருக்குமே அதுபோன்ற ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை. “கனவு மெய்ப்பட வேண்டும்” என்று பாடிய பாரதியும் இக்பாலும் அந்த பொன்னான தருணத்தை கண்ணாரக் காணும் முன்னரே உயிர் நீத்தவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் முன்னரே இவர்களின் மூச்சு நின்று விட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாரதியின் தன்னம்பிக்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு 25 ஆண்டுகட்கு முன்னரே ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை உருவகப்படுத்திக் கொள்கிறான்&lt;br /&gt;“ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று கூக்குரலிடுகிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிறிதோரிடத்தில்&lt;br /&gt;“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு ! - நாம்&lt;br /&gt;எல்லோரும் சமம் என்பது உறுதி யாச்சு” என்று உவகையுறுகிறான். பின்னர்&lt;br /&gt;“ஆடுவோமே ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !&lt;br /&gt;ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று !&lt;br /&gt;சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே ! - இதைத்&lt;br /&gt;தரணிக் கெல்லாம் எடுத்து ஓதுவோமே !”&lt;br /&gt;என்று சுதந்திரமே கிடைத்து விட்டதாய் நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தூங்கிக் கிடந்த இந்தியனை எழுப்பிவிடும் சக்தி இருவருடைய எழுத்துக்களுக்கும் இருந்தன. இருவரும் புதுக் கவிதைகளுக்கு வித்திட்டவர்கள். தங்களுடைய புரட்சிக் கருத்துக்கள் ஒருசில சாராரால் தவறாகப் புரிந்துக் கொள்ளக்கூடும் என்பதை அறிந்து வைத்திருந்தவர்கள்.&lt;br /&gt;மதங்களின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை கண்கூடாகக் காண்கிறோம். உலகிலுள்ள அத்தனை மதங்களும் சாந்தியையும் சமாதானத்தையும், அன்பையும் அறவழியையும்தான் போதிக்கின்றன. அதனை புரிந்துக் கொள்ளும் சக்திதான் மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;இக்பால் கூறுகிறான் : &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;'மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா' &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இக்பால் சொல்லாமல் சொல்கிறான்.&lt;br /&gt;இக்பாலை சூஃபி என்று வரையறுப்போர் உண்டு. சூஃப் என்றால் அரபு மொழியில் கம்பளி என்று அர்த்தம். ‘சூஃபி’ என்றால் கம்பளி போர்த்தியவன் என்று பொருள். நாளடைவில் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஞானியைக் குறிக்கும் சொல்லானது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;‘ஹக்’ (உண்மை) என்றும், ‘நூர்’ (ஒளி) என்றும் இறைவனை இக்பால் ஒரு சூஃபியின் தோரணையில் விளிப்பதை நாம் காண முடிகிறது. ‘பரம்பொருள்’, ‘சோதி’, ‘மகாசக்தி’ – இறைவனின் தன்மையைக் குறிக்கும் பதங்களை பாரதியும் கையாள்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கர்வம், கவிஞனுடன் கூடப்பிறந்த குணம் போலும். மகாகவிகள் அத்தனைப் பேருக்கும் தற்பெருமை தலைவிரித்தாடுவதை காண முடிகிறது. அகம்பாவம் என்று சொல்லுவதை விட கவி இறுமாப்பு என்று கூறலாமோ? இவர்களின் அகந்தை நாம் இரசிக்கும்படி இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“காவியத்தாயின் இளையமகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், பாமர ஜாதியில் தனிமனிதன், படைப்பதினால் என்பெயர் இறைவன்” என்று கண்ணாதாசன் தம்பட்டம் அடிக்கையில் நமக்கு அவன் மேல் கோபம் வருவதில்லை. மாறாக அவன் மீதிருந்த ஈடுபாடு அதிகரிக்கிறது.&lt;br /&gt;“எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” என்று பாரதி பெருமை கொள்ளுகையில், “அவன் சொல்லுவது உண்மைதானே?” என்று நாம் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டத் தோன்றுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“இரவைப் படைத்தவன் இறைவன்தான் என்றாலும்&lt;br /&gt;இருள்போக்கும் அகல்விளக்கு என்னுடைய கைவண்ணம்&lt;br /&gt;மண்ணைப் படைத்தவன் அவனே! அதிலென்ன ஐயம்?&lt;br /&gt;மண்பாண்டம் அத்தனையும் மனிதனின் உபயம்&lt;br /&gt;காடுமலை, பாலைவனம் அவன் படைப்பு என்றாலும்&lt;br /&gt;கனித்தோட்டம், நந்தவனம், - என்&lt;br /&gt;கடும் உழைப்பின் பயனாகும்&lt;br /&gt;கண்ணாடியை கல்லிருந்து பிரித்தெடுத்தவன் நான்.&lt;br /&gt;கொடும்நஞ்சை நச்சுமுறியாய் ஆக்கியவனும் நான்தானே?” &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்று ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் சேர்த்து வக்காலத்து வாங்கி இக்பால் பாடும் போது நாமும் அவனுடன் சேர்ந்து பூரித்துப் போகிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற செந்தமிழ்த்தேனீ பாரதியின் கொள்கைதான் இக்பாலுடைய கொள்கையாகவும் இருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெரெட்ரிச் நியெட்செ, ஹென்றி பெர்க்ஸன். கோயத். தாந்தே, மவ்லானா ரூமி போன்ற மேலைநாட்டு மெய்யறிவாளர்களுடைய தத்துவார்த்த சிந்தனைகள் இக்பாலை ஆட்கொண்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன், விட்மன் இவர்களின் சிந்தனைகளை பாரதியின் கவிதைகளில் நாம் காண முடிகிறது.&lt;br /&gt;பாரதி ஒரு பன்மொழியாளன். எனவேதான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று அர்த்தம் தொனிக்க பாடினான். “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்று தைரியமாகப் பாடினான். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. தெலுங்கில் பாட்டிசைத்தால் இனிமையாக இருக்கலாம் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். இதில் தமிழ் ஆர்வலர்கள் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?&lt;br /&gt;மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்வதில் இக்பாலுக்கும் இதேபோன்ற துணிச்சல் இருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;“என்னதான் உருது இனிமையான மொழி என்றாலும் பாராசீக மொழி அதைவிட இனிமையானது” என்றவன் கூறுகிறான். இருந்த போதிலும் உருது மொழியை தேசிய மொழியாக கொண்ட நாட்டில் அவன் தேசியக் கவிஞனாக போற்றப் படுகிறான். மகாகவிகளின் ஆளுமைக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு. அவன் எழுதிய 12,000 கவிதைகளில் 7,000 க்கும் மேற்பட்ட கவிதைகள் பாரசீக மொழியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;“கடந்த காலத்தை நினை, நிகழ்காலத்தை நடத்து, எதிர்காலத்துக்கு உன்னை தயார்படுத்திகொள்” இதுதான் இக்பால் நமக்கு “அடிமைத்தளம்” (Bandagi Nama) என்ற நூலில் இளைஞர்களுக்கு போதிக்கும் தாரக மந்திரம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பாலின் அறிவுரைகளை அமைதியாகச் சொல்வான். பாரதி கூறும் புத்திமதியில் ஆக்ரோஷத்தைக் காண முடியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;“பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ&lt;br /&gt;பயங்கொள்ள லாகாது பாப்பா!&lt;br /&gt;மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்&lt;br /&gt;முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” – இது பாரதி பாணி. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனைச் சொல்வாரையும்’, ‘மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர் குலத்தவரையும்’ பாரதி என்றுமே மன்னிக்கத் தயாராயில்லை.&lt;br /&gt;வங்காளச் சிங்கம் எனப் போற்றப்படும் நவாப் சிராஜுத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த இனத்துரோகிகளை இக்பால் இதுபோன்றே பயங்கரமாகச் சாடுகிறான் 1932-ல் வெளியான “ஜாவீது நாமா” என்ற நூலில். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்பாலின் இரண்டாவது ஆங்கில நூல் “Reconstruction of Religious Thought in Islam “ என்பது. இந்நூல் 1930-ஆம் ஆண்டு லாகூரில் வெளியாகியது. சென்னை, ஹைதராபாத், அலிகார் ஆகிய நகரங்களில் இல்பால் ஆற்றிய சொற்பொழிவுகள் உள்ளடங்கியது. சென்னைக்கு வந்த போது சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் சாலையில் இருந்த நமாஸி குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்களாவில் தங்கியிருந்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;பாரதி, ஆங்கிலத்தில் அளப்பரிய புலமை பெற்றிருந்தது பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. “நம்மாழ்வாரின் திருவாய் மொழி” “நாச்சியார்ப் பதிகம்” “திருப்புகழ்” ஆகிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த்தோடு அல்லாமல் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து அதனை நடத்தியும் வந்துள்ளான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாரதியின் பாடல்களும் முறையே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் அவனுக்கும் தாகூருக்குக் கிடைத்ததுபோன்று நோபல் பரிசு கிடைத்திருக்கக்கூடும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருவர் வாழ்விலும் நடந்த இளம்பிராயத்து நிகழ்வுகள் சுவராஸ்யமானது. இக்பால் மாணவனாக இருக்கையில் வகுப்பிற்கு ஒருநாள் தாமதமாகச் செல்ல "ஏன் தாமதம்?" என ஆசிரியர் அவனை வினவியதற்கு "இக்பால் சீக்கிரம் வராது" என்றானாம். (இக்பால் என்றால் மேனிலை என்று பொருள்). உண்மைதானே? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாரதி சிறுவனாக இருக்கையில் காந்திமதி நாதன் என்பவர் ‘பாரதி சின்னப்பயல்’ என்ற ஈற்றடியை கொடுத்து பாடல் எழுதச் சொல்ல சிறுவன் பாரதி ‘காந்திமதி நாதனைப் பாரதி (பார் + அதி) சின்னப்பயல்’ என்று ‘கலாய்த்தது’ நாமெல்லோரும் அறிந்ததே. விளையும் பயிர் முளையில் என்பது இதுதானோ? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருவரும் இயற்கையை ரசித்தவர்கள். இக்பாலின் கவிதையை சுவைக்கையில் இமாலயச் சாரலுக்கே சென்று வந்த அனுபவம் கிட்டும். ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றும் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி கூறும்போதும் இவனும் இயற்கைப் பித்தனே என்று முடிவுகட்டி விடுவோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த தென்னகத்து இக்பாலும் சரி, ‘சாகாத வரம் பெற்ற பாடல்’ (Song of Eternity – 1932) எழுதி புகழ்பெற்ற அந்த பாகிஸ்தான் பாரதியும் சரி, இலக்கியம் உள்ளவரை இவர்களும் எந்நாளும் உயிர் வாழ்வார்கள் என்பது திண்ணம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திண்ணையில் அப்துல் கையூம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி : திண்ணை &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-1045076844538501554?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/1045076844538501554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=1045076844538501554' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1045076844538501554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/1045076844538501554'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_273.html' title='பாகிஸ்தான் பாரதி'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST709p_ivEI/AAAAAAAAAag/9b2wqW9bP-o/s72-c/Iqbal.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-8002104540359605626</id><published>2008-12-09T13:42:00.000-08:00</published><updated>2008-12-09T14:32:58.503-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணையில் அப்துல் கையூம்'/><title type='text'>கண்ணதாசன் காப்பியடித்தானா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST7s30KTEdI/AAAAAAAAAaY/IiPTND-Sw3M/s1600-h/images%5B4%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5277916256963596754" style="WIDTH: 118px; CURSOR: hand; HEIGHT: 112px" alt="" src="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST7s30KTEdI/AAAAAAAAAaY/IiPTND-Sw3M/s400/images%5B4%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;Thursday April 17, 2008&lt;br /&gt;அப்துல் கையூம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்தில் மெளனமாக இருப்பதே நலமென்று அமைதி காத்து விட்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;ஒரு மொழியின் வளர்ச்சிக்கு பிறமொழித் தழுவல், கருத்து இறக்குமதி, சிந்தனை அரவணைப்பு, கவிநடை தரவிறக்கம் இவை யாவும் இன்றிமையாத ஒன்று, அதற்குப் பெயர் ‘காப்பி-பூனையோ’ அல்லது ‘ஈயடிச்சான் காப்பியோ’ அன்று. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33ffff;"&gt;“மேற்கே&lt;br /&gt;ரொமாண்டிசிசம்&lt;br /&gt;நாச்சுரலிசம்&lt;br /&gt;ரியலிசம்&lt;br /&gt;அப்பால்&lt;br /&gt;இம்ப்ரெஷனிசம்&lt;br /&gt;என் மனைவிக்கு&lt;br /&gt;தக்காளி ரசம்” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;உலகம் எப்படியெல்லாமோ வளர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம்மைச் சுற்றி ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அறிய வேண்டியதை அறியாமல் காலத்தை வீணடிக்கின்ற போக்கினை சுந்தர ராமசாமி நகைச்சுவை ததும்ப இக்கவிதையில் வடித்திருந்ததை மிகவும் ரசித்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;“மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;“பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“பாடுவது கவியா? - இல்லை&lt;br /&gt;பாரிவள்ளல் மகனா?&lt;br /&gt;சேரனுக்கு உறவா?&lt;br /&gt;செந்தமிழர் நிலவா?” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும். கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;“நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.&lt;br /&gt;குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது: &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“இரவுக்கு ஆயிரம் கண்கள்,&lt;br /&gt;பகலுக்கு ஒன்றே ஒன்று&lt;br /&gt;அறிவுக்கு ஆயிரம் கண்கள்,&lt;br /&gt;உறவுக்கு ஒன்றே ஒன்று” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் : &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#99ffff;"&gt;The night has a thousand eyes,&lt;br /&gt;And the day but one;&lt;br /&gt;Yet the light of the bright world dies&lt;br /&gt;With the dying sun.&lt;br /&gt;The mind has a thousand eyes,&lt;br /&gt;And the heart but one:&lt;br /&gt;Yet the light of a whole life dies&lt;br /&gt;When love is done. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;காப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;“உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது&lt;br /&gt;சிலையென்றால் வெறும் சிலைதான்&lt;br /&gt;உண்டு என்றால் அது உண்டு –&lt;br /&gt;இல்லை என்றால் அது இல்லை” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பான் கண்ணதாசன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு&lt;br /&gt;உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை&lt;br /&gt;உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு&lt;br /&gt;உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வீடுவரை உறவு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வீதிவரை மனைவி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;காடுவரை பிள்ளை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;கடைசிவரை யாரோ?&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;தொட்டிலுக்கு அன்னை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;கட்டிலுக்குக் கன்னி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;பட்டினிக்குத் தீனி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;கெட்டபின்பு ஞானி - &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“நடைபாதை வணிகனென&lt;br /&gt;நான் கூறி விற்றபொருள்&lt;br /&gt;நல்ல பொருள் இல்லை அதிகம்” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று அவனே பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான். (எலந்தப்பழம் பாட்டைத்தான் சொன்னானோ என்னவோ எனக்குத் தெரியாது.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;"ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது" என்று உரைத்தவன் அவன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;'தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;தெரியாமல் போனாலே வேதாந்தம்' &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று சொல்லும் போதும், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;'கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி' &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனாகத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;மனிதஜாதியின் வாழ்வியல் தத்துவத்தை ‘பிட்ஸ்மேன் சுருக்கெழுத்’தில் இதைவிட யாரால் தெளிவாகச் சொல்ல முடியும், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்&lt;br /&gt;கொத்தலர் பூங்கழல் நப்பின்னை கொங்கைமேல்&lt;br /&gt;வைத்துக் கிடந்த மலர்மார்பா .. ..” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று ஆண்டாளைப் பின்பற்றி கண்ணதாசனும் பாடியிருந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“குத்துவிளக்கெரிய&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;கூடமெங்கும் பூமணக்க&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;மெத்தை விரித்திருக்க&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;மெல்லியலாள் காத்திருக்க”&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;– பச்சைவிளக்கு படத்தில் எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி நடிக்க, இந்துஸ்தானி வாத்தியமான ஷெனாய் இசைக்கையில் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத்தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வரவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;அதே சமயம், இது அவனுக்கு பின்விளைவையும் ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களுக்கு அவன் ஆளானான். “போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்” என்று அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டிருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;துணிச்சல் திராவிட பாசறையில் இருந்து தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“நான் கவிஞனும் இல்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;நல்ல ரசிகனும் இல்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;காதலெனும் ஆசையில்லா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;பொம்மையும் இல்லை”&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;இந்த வாக்குமூலத்தில் அவனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்&lt;br /&gt;சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்&lt;br /&gt;நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்&lt;br /&gt;ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”&lt;/span&gt;&lt;br /&gt;- (தொகுதி-பாடல் 1 ‘பெண்மணீயம்) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“தர்மா தர்மமெலாம் சாவுக்குப் பின்னரே&lt;br /&gt;தங்கமே கிண்ணமெங்கே?&lt;br /&gt;சரிபாதி நீயுண்டு தருவாய் என் கையிலே&lt;br /&gt;தழுவாது மரண பயமே!” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;– (தொகுதி IV, பாடல்-2, ‘மதுக்கோப்பை’) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள். ரத்தத்திலகம் என்ற படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;ஒரு கோலமகள் என் துணையிருப்பு”&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று பாடுவான். பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இவை. [உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் விளக்கம். அது இங்கே நமக்கு தேவையில்லாதது] &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“பாரசீகப் பாவலனும் சேராத பைங்கிளிகாள்” (தொகுதி IV-பாடல் 1) என்று உமர்கய்யாம் குறித்தே கவிஞன் பாடியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;கண்ணதாசனின் பாடல்களில் சங்ககால புலவர்கள் முதல் சமகால அறிஞர்கள் கருத்துக்கள்வரை தழுவல்களாக படித்து இன்புற முடியும். (கண்ணதாசனுக்கு ‘தழுவல்’ என்றால் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?)&lt;br /&gt;இத்’தழுவல்’ காரியங்களைப்பற்றி கவிஞர் கண்ணாதாசன் கூறிய விளக்கமிது.&lt;br /&gt;“சமஸ்கிருத மொழியில் ஓதப்படும் கல்யாண மந்திரத்தில் 'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆனால் அதையே நான் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா?" என்று கேட்டிருந்தான். அவன் சொன்னது முற்றிலும் உண்மை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“காயமே இது பொய்யடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வெறும் காற்றடித்த பையடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;மாயனாராம் மண்ணு குயவன் செய்த&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;மண்ணு பாண்டம் ஓடடா”&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” -&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்&lt;br /&gt;சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே&lt;br /&gt;தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?” -&lt;/span&gt; என்று பாடியிருப்பான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;பிற அறிஞர்களின் சாத்திரங்களை நம் மொழியில் பெயர்க்கும் போது நம் மொழிக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களாகிறார்கள் என்பது மட்டுமின்றி, உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;கணியன் பூங்குன்றனார் என்ற ஒரு பழம்பெருங்கவிஞன். ஒரே ஒரு பாடல்தான் எழுதினான். அதுவும் வெறும் பதினான்கே வரிகள். “யாதும் ஊரே யாவருங் கேளிர்’ ஒரு வரி வாசகம் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. எழுதியவனுக்கு மாத்திரமல்ல தமிழன்னைக்கே சூட்டப்பட்ட மலர்க்கிரீடம் அது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாட்டில் கவியரசர் எழுதிய&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் - சிறு&lt;br /&gt;மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்&lt;br /&gt;ஆனாலும் அவை யாவும் நீயாகுமா?&lt;br /&gt;அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற இந்த வரிகளைச் சாகித்திய அகாதெமி அமைப்பு கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“பால்மணக்கும் பருவத்திலே &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;உன்னைப்போல் நானிருந்தேன்&lt;br /&gt;பட்டாடைத் தொட்டிலிலே &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;சிட்டுபோல் படுத்திருந்தேன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;அந்நாளை நினைக்கையிலே &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;என்வயது மாறுதடா&lt;br /&gt;உன்னுடன் ஆடிவர &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;உள்ளமே தாவுதடா”&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற வரிகள் வோர்ட்ஸ்வொர்த் சொல்வானே “Reflections in Tranquility” என்று; அதைத்தான் நினவு படுத்துகிறது. ‘ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!’ என்று நடந்து முடிந்த கதைகளை அசைப் போடும் மனநிலை அது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;"தனி ஒரு மனிதனின் வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்" என்று கண்ணதாசன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவன் தொடாத பாடமே கிடையாது. சுட்டிக் காட்டாத நிகழ்வுகளே கிடையாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;சர்ரியலிஸக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டு அப்போலினைர். அவரை பிரான்ஸ் தேசத்தின் ‘கடைசிக் கவிஞன்’ என்று அழைப்பார்கள். (அதாவது அவருக்குப்பின் பிரான்ஸில் வேறு கவிஞர்களே இல்லை என்ற அர்த்தத்தில்) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“And my heart is as heavy as&lt;br /&gt;A Damascan lady’s backside” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று எழுதுவான். இறுதி வரியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வரவு எட்டணா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;செலவு பத்தணா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;அதிகம் ரெண்டனா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற பாடலில் இந்த மூன்று வரிகளில் தென்பாடத ஒரு அதிர்ச்சி யுக்தி “கடைசியில் துந்தனா” என்ற இறுதி வரியில் காணப்படும். இந்த ‘Shock Treatment’ பக்குவப்பட்ட கவிஞனால் மட்டுமே கொடுக்க முடியும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“தோள் கண்டார் தோளே கண்டார்;&lt;br /&gt;தொடுகழல் கமலமென்ன&lt;br /&gt;தாள் கண்டார் தாளே கண்டார்&lt;br /&gt;தடக்கை கண்டாரும் அஃதே”&lt;/span&gt;&lt;br /&gt;(கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்ற கம்பனின் வரிகளை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“தோள் கண்டேன் தோளே கண்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;தோளில் இரு கிளிகள் கண்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வாள் கண்டேன் வாளே கண்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;வட்டமிடும் விழிகள் கண்டேன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;- என சுவைபட எளிய நடையில் வடித்திருப்பான் கண்ணதாசன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாரதியின் வரியை “வியாட்நாம் வீடு” படத்தில் கவிஞன் கையாண்டபோதும் கூட அதை காப்பியென்று யாரும் சொல்லவில்லை. மாறாக அவ்வரிகள் பாரதிக்கு மேலும் புகழை ஈட்டித் தந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“கல்லைத்தான் மண்ணைத்தான் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;காய்ச்சித்தான் குடிக்கத்தான் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;கற்பித்தானா?” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;என்று ராமச்சந்திரக் கவிராயரின் பாடல் கண்ணதாசனுக்கு ஒரு தாக்கதை ஏற்படுத்தியிருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#99ffff;"&gt;“அத்தான் என் அத்தான் - அவர்&lt;br /&gt;என்னைத்தான்... எப்படி சொல்வேனடி - அவர்&lt;br /&gt;கையைத்தான் கொண்டு மெல்லத்தான் - வந்து&lt;br /&gt;கண்ணைத்தான்.... எப்படி சொல்வேனடி?” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;காதலன் பூனைப்பாதம் வைத்து பதுசாய் காதலியின் கண்ணைப் பொத்தும் நிகழ்வை ராமச்சந்திர கவிராயனின் தத்துவார்த்த சிந்தனையோடு முடிச்சு போடுவதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது கண்ணதாசனிடம் மிதமிஞ்சி இருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“மீன் செத்தா கருவாடு; நீ செத்தா கருவாடு; இது கண்ணதாசன் சொன்னதுங்க” என்றும் “கண்ணதாசன், காளிதாசன், கவிதை நீ நெருங்கி வா” என்றும் மறைந்த அந்த மகாகவியின் மேல் பாராட்டு மழை பொழிந்து விட்டு வேறொரு புறம் “கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி” என்று இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் எழுதுவது உண்மையிலேயே அவரை பாராட்டுகிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று புரிந்துக் கொள்ள இயலவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;“He came. He saw, He conquer and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று சொல்வதை விட வந்தான், வென்றான், நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;நன்றி : திண்ணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;ஏப்ரல் 17, 2008&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-8002104540359605626?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/8002104540359605626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=8002104540359605626' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8002104540359605626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/8002104540359605626'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_7729.html' title='கண்ணதாசன் காப்பியடித்தானா?'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/ST7s30KTEdI/AAAAAAAAAaY/IiPTND-Sw3M/s72-c/images%5B4%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-2730519751395582311</id><published>2008-12-09T13:20:00.000-08:00</published><updated>2008-12-09T13:39:21.834-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணையில் அப்துல் கையூம்'/><title type='text'>நாசமத்துப் போ !</title><content type='html'>அப்துல் கையூம்&lt;br /&gt;நன்றி : திண்ணை Thursday May 1, 2008&lt;br /&gt;&lt;br /&gt;“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாய எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சஸ ஏவுகணைகளா என்று நாம் விடையைக் குடைவதற்கு முன்பே “நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது!” என்று நாம் சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பதிலைத் தருவான் அந்த பாட்டாளிக் கவிஞன்.&lt;br /&gt;நயவஞ்சகர்களின் நாக்கு மட்டும்தான் கொடியதா? சிற்சமயம் நல்லவர்களின் நாக்கும் கொடிய ஆயுதமாக உருமாறி விடுகிறதே? கோபத்தில் கொந்தளிக்கும் சாபம் பலித்திருப்பதாகவும் பகர்கிறார்களே? உண்மைதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே&lt;br /&gt;நாவினாற் சுட்ட வடு”&lt;br /&gt;&lt;br /&gt;என்று வார்த்தைகளின் கொடூரத்தன்மையை விளக்குவான் ஐயன் திருவள்ளுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமாரச் சொன்ன வாழ்த்தும், மனமெரிந்து சொன்ன சொல்லும் கட்டாயம் பலிக்கும் என்பார்கள். இரு மனங்களுக்குள் ஏற்படும் திருமண பந்தத்தை, ஊரறிய, உலகறிய ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்’ என்று அழைப்பிதழ் அச்சடித்து, அனைவரையும் வரவேற்று, ஆனந்தம் அடைகிறோம். ஏன்? நான்கு பேர்கள் கூடி நின்று நாவால் முழங்கும் நல்லாசிகள் இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். “நூறாண்டு காலம் வாழ்க” என்றும் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்றும் ஆன்றோர்களின் ஆழ்மனதிலிருந்து வரும் ஆசிகளுக்கு ஈடு இணையேது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறந்த மண்ணான நாகூரில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் காணக் கிடைக்கும். வாசலில் நின்று யாசகம் கேட்கும் ஆசாமிகளுக்கு ஈவதற்கு ஏதும் இல்லாதபோதும் கூட இல்லத்திலிருப்பவர்கள் இசைக்கின்ற பதில் நம் இதயத்தைக் கவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு சாதாரண பிச்சைக்காரனிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? உயர்ந்த பண்பாட்டுக்கு இது ஒரு உன்னத அளவுகோள்.&lt;br /&gt;“&lt;br /&gt;ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்” - என் தாயார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரை இது. நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவது இதனால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயங்களை நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் எங்களூரில் கண்கூடு.&lt;br /&gt;“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, இதுபோன்ற வசைமொழிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் காணலாம். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் “டயேரியா” என்ற ஒரு கொடுமையான வியாதி பரவி தொடர்பேதி வந்து உயிரைக் குடித்தது. அவ்வியாதி வந்து மாய்ந்துப்போ என்ற அர்த்தத்தில் அமையப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த “களிச்சல்லே போவா” என்ற வசைமொழி. இன்னும் ஒரு படி மேல் சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்தில் உடனடியாக ஒரு வயிற்றுப்போக்கிலே நீ செத்து மடி என்ற பொருள் பதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் இதைத்தான் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.&lt;br /&gt;&lt;br /&gt;மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் சென்று மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.&lt;br /&gt;மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்லுவதும் இக்கொடிய நோய் தாக்கி அவலட்சணமடைந்து சாவாயாக என்ற பொருள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு இந்த உள்ளர்த்தங்களை உணரத் தொடங்கியதும் இத்தகைய வசைமொழிகள் குறையத் தொடங்கின. திட்டுவதிலும் ஒரு சுகம் இருக்கின்றது போலும். அந்த சுகத்தை இழக்க இவர்கள் தயாராக இல்லை. திட்டுகின்ற அதே கடுமையான பாணியில் சில நல்ல வார்த்தைகளையும் கூறத் தொடங்கினர். “அட நீ நல்லா இருப்பே” போன்ற வாசகங்கள் திட்டுகின்ற அதே தொனியில் இருக்கும். ஆனால் வாழ்த்துக்களாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பற்பல ஊர்களில் “நீ நாசமாப் போவா” என்ற ஏசுதலை “நீ நாசமத்துப் போ” என்று சொல்லக் கேட்கலாம் “நாசம் அற்றுப் போ” என்றால் “நாசமெலாம் கலைந்து நீ நன்றாக இருப்பாயாக” என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான வீடுகளில் தம் பிள்ளைகள் வெளியே போகும்போது “நான் போகிறேன்” என்று விடைபகர்ந்தால் “அப்படிச் சொல்லக் கூடாது. போய் வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வீடுகளில் பிள்ளைகளைப் பார்த்து “எங்காவது போய்த் தொலை” என்று திட்டுவார்கள். இதுவும் திருத்தப்பட வேண்டிய வழக்கங்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;“எண்ணத்தின் அளவே செயல்” என்பார்கள். எண்ணங்களும் பேச்சுக்களும் நல்லவைகளாக இருந்தால்தான் நம்முடைய செயல்களும் நல்லதாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”&lt;br /&gt;&lt;br /&gt;என்பது புறநானூற்றுப் பாடல். யானையை வேட்டையாடி வருவேன் என்று காட்டுக்குப் போகின்றவனின் நோக்கம் நிறைவேறுவது திண்ணம். அவனுள் ஏற்படும் அந்த உயர்ந்த எண்ணத்தின் மனபலமானது அவனுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணுகிறது. முயலை வேட்டையாடி வருவேன் என்று போகின்றவன் வெறுங்கையோடுதான் வருவான். எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமென்பது இப்பாடலின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பராமாயணம், பெரியபுராணம், நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘வையம்,’ அல்லது ‘உலகம்’ என்ற மங்கல வார்த்தைகளோடு தொடங்குவதைக் காணலாம் இவைகளை “அமுதச் சொற்கள்” என்று பகுத்தறிந்து சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே ‘சென்டிமென்ட்’ தமிழ்த் திரையுலகிலும் பரவலாகவே காணப்படுகிறது. படப்பதிவின் ஆரம்பத்தில் “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று சொல்வதைப் போன்றோ அல்லது “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என்றோ வசனங்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தூறல்நின்னு போச்சு’ என்றெல்லாம் படப் பெயர் வைப்பது முறையல்ல. பலபேர்களின் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வரப்போக மழையே இல்லாமல் போய்விட்டது என்று ‘டணால்’ தங்கவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வார்த்தைகள் மாத்திரமே நம் வாயிலிருந்து வெளி வரவேண்டுமென்பது அவரது ஆதங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாடமாட்டேன்.. நான் பாடமாட்டேன்” என்ற ஒரு பாடலை நடிப்பிசைப் புலவர் K.R. ராமசாமி ஒரு படத்திற்காகப் பாடினார். அவரது வாக்கு பலித்ததாலோ என்னவோ மேற்கொண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இத்தகவலை கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலச்சந்தர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படத்திற்காக வி.குமார் இசையமைக்க பாடல் பதிவு தொடங்குகிறது. சீர்காழி கோவிந்தராஜன் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று பாடத் தொடங்கியதும் மின்சாரம் நின்று போனதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.எஸ். மேடையில் எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடுவார். ஒரே ஒரு பாட்டைத் தவிர. டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற படத்தில் அவர் பாடிய நேரம் பொல்லாத நேரம் போலும். “நான் ஒரு ராசியில்லா ராஜா” என்று அவர் பாடியதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தலைவர் காமராஜர் இறந்து போவதற்கு முன்பு கடைசியாக சொன்ன வார்த்தை “விளக்கை அணைத்து விடுங்கள்” என்பது. இதனை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று சில பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஒத்தமைவு (Coincidence) என்பதைத் தவிர வேறென்ன இதில் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;“அழிந்துடுவாய் வேண்டாம்; கெட்டுடுவாய் கெட்டுடுவாய் என்றால் கெட்டேபோவார்கள்” என்று கண்ணதாசன் ஒரு முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அறிவுரை வழங்குகின்ற கவிஞர் பிறிதோரிடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“மன்னவன் பசியால் சாக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மடையர்கள் கொழுத்து வாழ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தென்னவர் நாடு செய்தால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீயில்தான் சாம்ப லாகும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்னையே தமிழே இந்த&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறம் வெல்ல வேண்டு கின்றேன்” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தென்னவர் நாடு தீயில் சாம்பலாகுமென அறம் பாடுகிறார். அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமென்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி மாத்திரம் என்னவாம்? தமிழ் வாழ வேண்டும் என்ற உள்ளூர எண்ணம் கொண்டிருந்த அந்த மகாகவிஞன் ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். இன்று ஊடகங்களில் உச்சரிக்கப்படும் தமிழை காது கொடுத்து கேட்கையில் பாரதியின் வாக்குதான் பலித்து விட்டதோ என்ற ஐயம்தான் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் “எழவு” என்ற வார்த்தையை பயன் படுத்துவார். “என்ன இது ஒரே எழவா போச்சு” – இது அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்து விழும் வாசகம். ஒருநாள் அவருடைய வீட்டில் உண்மையிலேயே ஒரு “எழவு” விழுந்து விட்டது, அதற்குப் பிறகு அவரது வாயிலிருந்து அந்த வார்த்தை அறவே போய் விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறம் பாடிய புலவர்கள் என்று தமிழ் இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். அறம் என்றால் தர்மம். அரம் என்றால் சாபம். அரம் பாடிய புலவர்கள் என்று சொல்வதே சரியான வழக்கு என்று சிலர் வாதாடுவதுண்டு. எது சரியான சொற்பதம் என்று ஆராய்ந்து நான் குழம்பிப் போனதுதான் மிச்சம். பிரபலமான படைப்பாளிகள் அனைவரும் “அறம்” என்றே கையாண்டிருப்பதால் நானும் “அறம்” என்றே இங்கே கையாண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவன் பொடி வைத்து பேசுகிறான்” என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். உள்ளர்த்தம் வைத்து பேசுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இதே போன்று அறம் வைத்து பாடுவதென்றால் பிறருக்கு கேடு ஏற்படும் வண்ணம் வசை பாடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;அறம் பாடுவதில் பலவகை உண்டு. கடுமையான வார்த்தைகள் அறியாத வண்ணம் வாயிலிருந்து வந்து விழுந்து விடுவது முதல் வகை. போற்றுவது போலும் தூற்றுவது போலும் இருபொருள் பட பாடுவது இரண்டாவது வகை. வேண்டுமென்றே பிறர் நாசமடையும் வண்ணம் நேரடியாகவே சாபம் விடுவது மூன்றாவது வகை. தனக்குத்தானே தீமை உண்டாவதற்கு தானே அறம் பாடிக் கொள்வது நான்காவது வகை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழ்ப் பண்டிதர் தன் மாணவனைப் பார்த்து கீழே அமர்ந்து படி என்ற அர்த்தத்தில் “இரும் படியும் பிள்ளாய்” என்று சொல்வதற்கு பதிலாக சேர்த்தாற்போல் “இரும்படியும் பிள்ளாய்” என்று சொல்லப்போக அவர் வார்த்தை பலித்து பிற்காலத்தில் அவன் இரும்படிக்கும் தொழிலாளியாக ஆகிவிட்டானாம். அறியாமல் வரும் வார்த்தைகள் சிற்சமயம் “சொற்பலிதம் “ ஆகி விடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழ்ப்புலவர் தன் வறுமையை போக்க வேண்டி ஒரு தனவானிடம் சென்று ஒரு தொகை கேட்டிருக்கிறார். புலவரைப் பார்த்து “காசு என்றால் உனக்கு அவ்வளவு லேசாக போய் விட்டதா?” என்ற பொருளில் “காசா லேசா?” என்று இளக்காரமாக தனவான் கூறியிருக்கின்றார். பணம் படைத்தும் மனம் படைக்காத கருமியின் வார்த்தைகள் புலவரின் உள்ளத்தை முள்ளாய் தைத்துவிட “காசாலே சா” என்று அவர் சொன்ன வார்த்தைளை வைத்தே சாபம் விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வந்து வீழாத வண்ணம் நம்மை நாமே காத்துக் கொள்வது நம் தலையாய கடமை. ஏனெனில் வஞ்சிக்கப்பட்டவனின் உள்ளத்திலிருந்து வேதனை கலந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு இறைவனின் சபையில் உடனடி அங்கீகாரம் கிடைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் சபையில் தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வாதாடுகிறாள் கண்ணகி. தீர ஆராயாமல் தவறான ஒரு தீர்ப்பினை கோவலனுக்கு தந்து விட்ட மன்னன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“யானோ அரசன், யானே கள்வன்கெடுக என் ஆயுள்”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தனக்குத்தானே அறம் பாடிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.&lt;br /&gt;அதே போன்று நல்லோரை விலக்கி தீயோரை தீக்கிரையாக்குவதற்கு கண்ணகி விடும் சாபம் இவ்வாறாக இருக்கிறது :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டுத்தீத்திறத்தார் பக்கமே சேர்க ..”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று கண்ணகி விட்ட சாபத்தில் மதுரை மாநகரமே தீப்பிடித்த கதையை தன் காவியத்தில் வடிக்கிறார் இளங்கோவடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அல்லா விடுவானோ அம்புவீர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே சின்னா பின்னமாகி விட்டதாம்.&lt;br /&gt;சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் தம்புச் செட்டி என்பவரிடம் ரமலான் மாதத்தில் பள்ளிவாயிலில் வினியோகிக்க வேண்டி மாம்பழம் தருவித்திருக்கிறார். அவை யாவுமே அழுகிப்போன பழங்களாக இருக்க பாவலருக்கு வந்ததோ கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“கும்மியடிப் பெண்ணே கும்மியடி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தம்புச்செட்டி தலைதெறிக்க கும்மியடி”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாட அச்சமயம் மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த செட்டியார் கீழே உருண்டு விழுந்தார் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு முஸ்லிம் புலவர் சாத்தான் குளம் என்ற ஊருக்கு வந்த போது அவருக்கு அங்கு கொடுமை நிகழ்ந்துப் போக மனம் புழுங்கி&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;strong&gt;சாத்தான் குளத்தாரே சங்கைகெட்ட தீனோரேசோத்தாரே நீங்கள் சுகம்பெறவே மாட்டீர்கள்” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அறம் பாடிச் சென்றதாக ஏடுகள் பகர்கின்றன.&lt;br /&gt;தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். குயக் கொண்டான் என்னும் வடமொழிப் புலவனொருவன் தமிழகத்திற்கு வருகை புரிகிறான். தமிழ் மொழியை நீசர் பாஷை என்றும் வடமொழிக்கு நிகர் அது சற்றும் இல்லையென்றும் இழித்தும் பழித்தும் கூறுகிறான். தமிழைத் தரக்குறைவாக கூறுவதைக் கேட்ட நக்கீரருக்கு வந்த கோபத்தை கேட்கவா வேண்டும்? சினங் கொண்ட நக்கீரர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழிபரண கபிலரும் வாழி - அரணியஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்ஆனந்தஞ் சேர்க்க சுவாஹா” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அறம் பாடி விடுகிறார். வடமொழிப் புலவனின் உடல் தீயிற் பட்டால் போல எரியத் தொடங்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடுவார் முத்தப்பச் செட்டியார் என்ற புலவரொருவர் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள செவ்வூர் என்ற ஊருக்குச் சென்றிருக்கிறார். நண்பகல் நேரம். புலவருக்கு கடும்பசி. அவரவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனிதருக்கு வந்ததே கோபம்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“எவ்வூர்க்குப் போனாலும் எத்தேசம் சென்றாலும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லாதே - அவ்வூரார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாத்திருக்க உண்பார்; பசித்தமுகம் பாரார்;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோத்திரத் துக்கேற்ற குணம்.” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- என்று பாடி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டூழியம் புரிந்துக் கொண்டிருந்த லிங்காநாயக்கன் மீது பாடுவார் முத்தப்பச் செட்டியார் அறம் வைத்து பாடிய வசைப்பாடல் இதோ :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“பத்தலார்க்கு உதவுபதி எரசு மேவும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாக்கியனே இம்முடிலிங்கேந்த்ரா நின்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தத்துவாம் பரிகளெங்கே கிரீடமெங்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தண்டிகை பல்லக்குமெங்கே தனந்தான் எங்கே,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெத்தை கொண்ட வீடுமெங்கே யதனுள்மேவும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலான பவுசோடு பண்டாரமெங்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுத்தவீரங்களெங்கே சும்மா போச்சோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொப்பைவீரனை வதைத்த தோடந்தானே!”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சபிக்க அவருடைய செல்வமும் பதவியும் பறிபோய் துன்ப நிலையை அடைந்தார் என்ற செய்தியை ஏடுகள் மூலம் அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்றும் ‘வசைக்கொரு காளமேகம்’ என்றும் அழைக்கப் பட்டவர் கவிக்காளமேகப் புலவர். அபார கவித்திறன் பெற்றிருந்த இப்புலவரை கண்டால் எல்லோருக்கும் குலை நடுங்கும். கோபம் வந்தால் புலவர் அறம் பாடிவிடுவார், எங்கே ஏதாவது கடுமையானதொரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து விடுமோ என்று அஞ்சி அவர் கேட்கும் முன்பே அவருக்கு உணவளிப்பார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் நாகை வீதியில் சிறுவர்கள் சிலர் பாக்கு கொட்டைகளை வைத்து ‘கோலி விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்க, பசிபொறுக்க மாட்டாத காளமேகம் “சோறு எங்கே விக்கும்?” என்று கொச்சைத் தமிழில் சிறுவர்களுக்கு விளங்கும் வண்ணம் கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகை வாழ் சிறுவர்களுக்கு கிண்டல் பேச்சுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? “சோறு தொண்டைக் குழியிலே விக்கும்” (விக்கல் எடுக்கும்) என்று நக்கல் செய்து விட்டார்கள். சினமடைந்த புலவர் ஒரு கரித்துண்டை எடுத்து தெருச் சுவற்றில் எழுத ஆரம்பித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்குநாக்கு….”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த கோவிலில் ‘ஆலயமணி’ ஒலிக்க புலவர் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட விரைகிறார். அதைக் கண்ட சிறுவர்கள் முற்றுப் பெறாமால் இருந்த வாக்கியத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதி வைத்து விட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகம் திகைத்துப் போய் நின்று விட்டார். ஏனெனில்&lt;br /&gt;&lt;br /&gt;“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்குநாக்கு தெறிக்க …..”&lt;br /&gt;என்று வசைபாடும் எண்ணத்தில் எழுதத் தொடங்கிய வரிகளை தலக்கீழாக மாற்றிவிட்ட சிறுவர்களின் சமயோசித புத்தியை எண்ணி வியந்துப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசனின் அண்ணன் மகனுக்கு மகன் பிறந்திருந்தான். கவிஞர் தன் பேரக் குழந்தையைக் காணச் செல்கிறார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“அவனை எழுப்பாதீர்அப்படியே தூங்கட்டும்”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தொடங்கி குமுதம் இதழில் ஒரு பாட்டாகவே வடித்து விட்டார். அவர் எழுதிய ஏழே நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“அவனை எழுப்பாதீர்;அப்படியே தூங்கட்டும்&lt;br /&gt;என்றே நான் எழுதியதன்&lt;br /&gt;ஈரம் உலரவில்லை;&lt;br /&gt;ஏழுநாள் ஆகுமுன்னே&lt;br /&gt;இளங்கன்று தூங்கி விட்டான்!&lt;br /&gt;அறம் பாடி விட்டேனோ!&lt;br /&gt;அறியேன்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று துடிதுடித்துப் போய் விடுகிறார். அறம் பாடும் திறம் தனக்குமுண்டு என்ற கவிஞரின் கற்பனையாகவும் இது இருக்கக் கூடும்&lt;br /&gt;தண்டிவர்மனின் மகன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு தன்மேல் அறம்பாடி கேட்கவேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. நந்திவர்மனின் தம்பி, நாட்டை அபகரிக்க வேண்டி தன் தமையனின் தமிழார்வத்தை பயன்படுத்தி அறம் பாடுதலை கேட்க ஏற்பாடு செய்தான். அரண்மனையில் இருந்து மயானம் வரை நூறு பந்தல்கள் போடப்பட்டன. நூறாவது பந்தலின் மேல் நந்திவர்மனை இருத்தி புலவரைக் கொண்டு அறம் பாடசெய்தான். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு பந்தல் எரிந்து போனது. இறுதியாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வையகம் அடைந்ததுன் கீர்த்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கானுறுபுலியை அடைந்ததுன் வீரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கற்பகம் அடைந் ததுன் கரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேனுறுமலராள் அரியிடம் சேர்ந்தாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செந்தழல் புகுந்ததுன் மேனி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யானுமென்கவியும் எவ்விடம் புகுவேம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எந்தையே! நந்தி நாயகனே…” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பாடலை அப்புலவன் பாடியதும், பந்தல் தீப்பற்றி எரிந்தது. மன்னனும் தீயில் சிக்கி உயிர்நீத்தான். இதனை நந்திக்கலம்பகத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அய்யா அரனே அரைநொடியில் - வெய்யதழல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்மாரி யால்மதனைக் கட்டழித்தாற் போல்தீயோர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மண்மாரி யால்அழிய வாட்டு.” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று காளமேகம் அறம் பாட திருமலைராயன் ஆண்ட ஊரை நாசமுறச் செய்தான் என்ற தகவல் வேறு நமக்குக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் அறம் பாடிய புலவர்கள் என்று பலபேர்கள் இருந்திருக்கிறார்கள். ஜவ்வாதுப் புலவர், ‘வெண்பாப்புலி’ வீர கவிராயர், வசைக்கவி ஆண்டான், சிங்கம்புணரி சித்தர் முத்தவடு நாதர், பாடுவார் முத்தப்பச் செட்டியார், கவிக் காளமேகம், இரட்டைப் புலவர்கள், என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தமிழ் மொழியின் சிறப்பென்றும், தமிழ் மொழியைக் கையாண்ட புலவர் பெருமான்களின் கவியாற்றல் என்றும் கற்றவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ கவிபாடும் வல்லுனர்களிடம் கவித்திறனோடு சேர்த்து கர்வத்தையும் காண முடிகிறது. &lt;strong&gt;“படைப்பதினால் என் பெயர்&lt;/strong&gt; &lt;strong&gt;இறைவன்”&lt;/strong&gt; என்பார் கண்ணதாசன். பிறிதோரிடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“கவிஞன் யானோர் காலக் கணிதம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவனும் யானுமே அறிந்தவை! அறிக!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நானே தொடக்கம்; நானே முடிவு!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்!” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கவிச்செருக்கு என்பதா? அல்லது தன் கவியாற்றலின் மேல் அவர் கொண்டிருந்த அதிகப் படியான மமதை கலந்த நம்பிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர் நிதானத்தில்தான் இதை எழுதினாரா என்ற சந்தேகம்கூட பிறக்கிறது,&lt;br /&gt;&lt;br /&gt;‘அறம் பாடுவது’ என்ற ஒரு துருப்புச்சீட்டினை வைத்துக் கொண்டே மக்களை அச்சுறுத்தி காரியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கீழ்த்தரமான புலவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இம்முறைகேடுகளை தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்குத்தான் அறம் பாடுவதென்ற ஒரு வரைமுறை இன்றியும் போயிருக்கிறது. காளமேகப்புலவர் இதற்கு நல்லதோர் உதாரணம். இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூருக்கு அவர் சென்றிருந்த சமயத்தில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார். இவரை அவள் உதாசீனப் படுத்த உடனே அவள் மீது அறம் பாடி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடலை முடித்திருப்பார். பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு இணங்க காளமேகம் ‘பல்டியடித்து’ அவளைப் புகழ்ந்து தொலைத்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;தகாத செயல்களுக்குக் கூட தமிழ் மொழியின் தெய்வீகத் தன்மையை புலவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது தமிழுக்கே இழுக்குதானே?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லலுற்றவன் அழுத கண்ணீர் கொடுஞ்செயல் புரிந்தவனை அழித்துவிடும் என்பது இயற்கையின் விதி. அந்த சாபம்/ அறம் தமிழில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழுக்கு மட்டுமே அந்த ஆற்றலுண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு செய்தவனை தண்டிக்க இறைவனுக்கு தமிழ்ப் புலவனது பரிந்துரைதான் தேவை என்பதில்லை. தமிழின் சிறப்பாக கூறப்படும் அறம் பாடும் கலையில் மிகைப் படுத்தப்பட்ட சில விஷயங்கள் காப்பிய நடைக்காக மெருகேற்றப்பட்டு இருப்பதென்னவோ முற்றிலும் உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : திண்ணை&lt;br /&gt;மே 1, 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-2730519751395582311?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/2730519751395582311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=2730519751395582311' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/2730519751395582311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/2730519751395582311'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_09.html' title='நாசமத்துப் போ !'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-4519688467573488167</id><published>2008-12-05T14:11:00.000-08:00</published><updated>2008-12-05T14:19:39.182-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமும் தமிழிலக்கியமும்'/><title type='text'>இஸ்லாமும் தமிழிலக்கியமும்</title><content type='html'>முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும்.  இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.&lt;br /&gt;தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு மக்கள் கிழக்கு, மேற்கு வணிகத் துறையில் பெரும் முனைப்பாக இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினங்களே தூர கிழக்கு நாடுகளுக்கும் மேலை ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகத் தொடர்பிற்குக் களனாக விளங்கின. அவற்றுள் முக்கியமானது பவுத்திர மாணிக்கப் பட்டினம். மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள புவுத்திர மாணிக்கம்பட்டினம் ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடியுடன் முடியும், இதற்கு நேர் வடக்கில் அமைந்துள்ள வியாபாரத்தலமாக விளங்கியது தேவிபட்டினம். தென்காயல் என்று அழைக்கப்பட்ட புத்திர மாணிக்கப்பட்டினம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வியாபாரத் தொடர்புகளுக்கும் வடகாயல் என்று அழைக்கப்படும் தேவிபட்டினம் தூர கிழக்கு நாடுகளின் வியாபாரத் தொடர்புகளுக்கும் மையமாக விளங்கின. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய இரு துறைமுகங்களும் வெளிநாட்டவரின் வியாபாரத் தொடர்பிற்கு இடமாக விளங்கியதை வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாரசீக வளைகுடாவில் உள்ள கைஸ் என்னும் தீவு இந்நாளைய ஹாங்காங் துறைமுகம் போலப் பெரும் வணிகத் தலமாக விளங்கியது. அன்றைய வணிகத் தலமான கைஸ் துறைமுகம், புவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் முதலானவைகள் ஐரோப்பியர்களுக்கும் அரபு தேசத்தவர்களுக்கும் பண்டமாறறு வியாபாரத்திற்குரிய மையமாகத் திகழ்ந்தன. அன்றைய பாண்டிய நாட்டில் அரபு தேத்து வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அதன் பயனாய் அவர்கள் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களிலே குடியேறத் தொடங்கினர். அரபு நாட்டு மக்கள் தமிழகத்துடன் சங்க கால இலக்கியங்களிலே நிரம்பக் காணலாம். சங்க இலக்கியங்களில் அரபு தேசத்து வணிகர்கள் ‘யவனர்’ என்னும் சொல்லாட்சியில் குறிக்கப்பட்டுள்ளனர். யவனரின் தமிழக வருகை வியாபார நோக்கமாகவே அமைந்தது. இதனை அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்கயவனர் தந்த வினை மாண்கலம்பொன்னெடு வந்து கறியொடு பெயரும்வளங்கெழு முசிறி… (149)&lt;br /&gt;இங்குக் கறி என்னும் சொல் மிளகினையும் முசிறி என்பது முசிறிப்படடினத்தையும் குறிப்பதாகும். எனவே மிளகு போன்ற வாசனைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டே யவனர்கள் கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் வருகை தந்தனர். அவர்களின் வியாபாரத் தொடர்பே நாளடைவில் தமிழகத்தில் அரபு நாட்டவரின் குடியேற்றமாகத் தொடங்கியது. இந்தக் குடியேற்றம், இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும். ‘கிறித்தவ ஆண்டு தொடங்கியதற்கு முன்னரேயே அரபிகள் இலங்கையிலும் தென் இந்தியாவிலும் குடியேறினர்’ என்று பிளனி என்னும் வரலற்றாசிரியர் கூற்றும் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்வதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்பியவர்களும் இன்றைய முஸ்லீம்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்களும் மேற்குறித்த வியாபார நிமித்தமாக இங்கு வந்த குடியேறிய அரபியர்களே. அத்தகையவர்களின் குடியேற்றம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களது காலத்திலும் தொடர்ந்து வலுப்பெற்றது. வியாபார நிமித்தமான குடியேற்றம் நபிகள் காலத்தில் சமயச்சார்பாகவும் அமைந்து தொடரலாயிற்று. நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தோழர்களான தமீமுல் அன்சாரி அவர்களினதும் அபீலக்காங் அவர்களினதும் கல்லறைகள் தமிழகத்தில் இருப்பது இஸ்லாத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள அப்போதைய நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுறவு நிலையை எடுத்துக்காட்ட எத்தனையோ அகச் சான்றுகளைத் தமிழகத்தில் காணலாம். ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழக முஸ்லிம்கள் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே அவர்களது கவனத்தைச் செலுத்தினர். பின்னர் நாளடைவில் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க அது மார்க்கத்திலும் அமையலாயிற்று. இறைநேயச் செல்வர்களும், மார்க்கப் பெரியோர்களும் இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புவதை முதற்பணியாகக் கொண்டு செயலாற்றினார்கள். இதற்கு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தில் இஸ்லாம் இஇருந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும் ஏனைய பிற இந்தியச் சமயங்களுக்கும் உள்ள தொடர்பினை இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதன் பயனாகவே தமிழை அடிப்படையாகக் கொண்டு தங்களது சமயக் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளும் உத்தியையும் இங்குள்ள முஸ்லிம் சமயப் பெரியோர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். அதுவே இஸ்லாமும் தமிழும் இணையும் காலக்கட்டமாக உருவானது. இதன் பயனாய் இஸ்லாம் தமிழகமெங்கும் பரவலாயிற்று. இஸ்லாமிய கருத்துக்களைப் பரப்புவதற்கு மொழியின் தேவையை உணரத் தலைப்பட்ட பின்னரே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்றம் தமிழிலக்கிய வரலாற்றில் உதயமாயிற்று.&lt;br /&gt;இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்தமாலை என்பது இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய முடிகிறதே தவிர நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இவ்விலக்கியத்துள் இடம்பெற்றுள்ள எட்டுப் பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட உரையிலேயே மேற்குறித்த எட்டுப் பாடல்களும் சான்றுச் செய்யுட்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வகப் பொருள் நூல்கூட இன்னும் தமிழிலக்கிய ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வகப் பொருள் நூலினை வையாபுரிபிள்ளை ‘களவிற் காரிகை’ என்று பெயரிட்டு 1931இல் பதிப்பித்துள்ளார். இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் படி சென்னையில் உள்ள அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ஆங்கிலக் குறிப்பினால் இ·து ஆழ்வர் திருநகரி மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் படிகளுள் ஒன்றாக இஇருந்தது என்பதும் அவ்வேட்டுப் படியின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதியில் படி எடுத்தார் என்பதையும் அறியலாம். அதுவே வையாபுரிப்பிள்ளை களவியல் காரிகை என்ற தலைப்பில் அவ்வகப்பொருள் துறைகளைப் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் குறித்துப் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறும்போது ‘கையெழுத்துப் பிரதியில் இறையனாரகப் பொருட்துறையைச் சங்கச் செய்யுளாக உதாரணம் எழுதியது’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ‘இக்குறிப்பு’ இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பாகவே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்’ என்பதையும் குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இவ்வகப்பொருள் நூலுக்கு இஇப்போது இடப்பட்டுள்ள பெயரான களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்ட பெயர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தற்போது அவ்வகப்பொருள் நூலுக்குரிய பெயராக, வையாபுரிப்பிள்ளை சூட்டிய களவியற் காரிகை என்னும் பெயரே கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச் செய்யுட்கள் மட்டும் பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப் பல்சந்தமாலை என்னும் தனித்ததொரு இஇலக்கியம் கிடைக்காவிடினும் இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.&lt;br /&gt;இனி, பல்சந்தமாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் காண்போம். வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பற்றியக் குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார். அதில் பல்சந்தமாலை குறித்து அவர் கூறும்போது பல்சந்தமாலை என்னும் பெயருடைய நூல் ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலில் பல்சந்தமாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல் அப்பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முகமதிய முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரிக்கு இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்தமாலையின் ஒரு செய்யுளால் புலப்படுகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்சந்தமாலைச் செய்யுட்களாகக் கிடைத்துள்ளனவற்றின் உள்ளடக்கக் கருத்துக்களை மையமாகக் கொண்டு இச்செய்யுட்கள் அடங்கிய நூல் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த நூல் என்பதைத் தெளிவாக உணரலாம். இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்குதெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் ‘அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்’ என்பது பல்சந்தமாலை இலக்கியம் இஸ்லாமியச் சார்புள்ளது என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின் உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்தமாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக் கூறின் விரியும் என்ற காரணம் தகுதி விடுக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, பல்சந்தமாலையின் காலக் கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக் காண்போம். கால ஆராய்ச்சியைப் பல்சந்த மாலையின் மொழி இயல்பினைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம். பல்சந்தமாலையின் காலம் தொடர்பாக மு. அருணாசலம் கூறும் போது 14-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். ஆனால் இது பொருந்துவதன்று. பல்சந்தமாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர் தொல்காப்பியரின் மொழி மரபினைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர் சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இஇரு இஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ‘இயவனராசன்’ என ஒரு செய்யுளை ஆரம்பிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்’…&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என அமைகிறது இச்செய்யுள். இனி பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்’&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என உள்ளது. இவ்விரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம் செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர மற்ற செய்யுளில் யகரத்தின் முன் வந்த குற்றயலிகரம் முற்றியலிகரமாக மாறி ‘இயவனர்’ என வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அம்மரபு தொல்காப்பிய மொழி வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக் கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய் மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான் பல்சந்தமாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே பல்சந்தமாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட காலமான 12-ஆம் நூற்றாண்டினையே பல்சந்தமாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.  இக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்சந்தமாலை என்னும் தமிழிலக்கியத்தின் மூலமாக தமிழிலக்கிய உலகில் கால்கோள் கொள்ளத் தொடங்கிய இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு இன்றளவு ஒன்பது நுற்றாண்டு கால இலக்கியப் பாரம்பரித்தைத் தமக்கெனவுடையதாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வொன்பது நூற்றாண்டு கால எல்லையில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறான வகைப்பட்ட தமிழிலக்கியங்களைப் பெற்றுத் தமக்கெனச் சுட்டிக்காட்டத்தக்க இலக்கிய வரலாற்றுப் பின்னணியை இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்சந்தமாலைக்கு அடுத்த நிலையில் யாகோபுச் சித்தர் பாடல்கள் (15 ஆம் நூற்றாண்டு) ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ் மாலை (கி.பி.1590), திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன் படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (17 ஆம் நூற்றாண்டின் இறுதி) சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (17ஆம் நூற்றாண்டு) முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம் பெறுவதாக அவற்றின் கால எல்லை அடிப்படையில் வரையறை செய்யலாம் - பல்சந்த மாலையுடன் சேர்த்து இப்பத்து இலக்கியங்களையும் தொடக்க கால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க காலத்தில் இஸ்லாமும் தமிழும் இணைந்த நிலையிலேயே படைப்போர் இலக்கியம் ஒன்றும் தோன்றி இருப்பது இங்கு குறிப்பிடற்பாலது. தொடக்க காலத்தில் ஒருசில இலக்கியங்களே வரப்பெற்ற போதிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் வருகை நிலை காலப்போக்கில் பெருகலாயிற்று. கி.பி. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஇஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் அனைத்தும் அடங்கும். இந்நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின் பொற்காலமாகக் கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக் கையில் காப்பியங்களைப் படைத்தளிருப்பதாகும். கனகவிராஜரின் கனகாபிரேஷக மாலை, உமறுப்புலவரின் சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகுமது மரைக்காயரின் சின்ன சீறா, வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், சேகனாப் புலவரின் குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம், பதுறுத்தீன் புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப் புலவரின் திருமணி மாலை, புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் தீன்விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு நாவலரின் நாகூர் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை இயற்றித் தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களைச்சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்ப தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளில் தங்களது பங்களிப்பினை நிலைநாட்டியுள்ளார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச் சாரும்.இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக இடம் பெற்றுள்ளன. இங்ஙனம் இஸ்லாமும் தமிழும் இஇணைந்ததின் பயனாக எண்ணிலடங்காத் தமிழிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இன்றும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவுத் தமக்கெனத் தனித்ததொரு இலக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பெற்றுச் சிறக்கிறது. இத்தகு இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தமிழிலக்கிய உலகிற்கு ஓர் உன்னதமான கொடையாகவே விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;நன்றி : ஆறாம்திணை, முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்&lt;br /&gt;தகவல் : நாகூர் ஆபிதீன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-4519688467573488167?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/4519688467573488167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=4519688467573488167' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/4519688467573488167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/4519688467573488167'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/12/blog-post_05.html' title='இஸ்லாமும் தமிழிலக்கியமும்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-921999191877109466</id><published>2008-06-10T07:14:00.000-07:00</published><updated>2008-11-13T02:21:00.710-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேயா நாட்டு சரித்திரம்'/><title type='text'>தமிழக முஸ்லீம்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SE6NsfbBNuI/AAAAAAAAASk/eJISO1ZTUnA/s1600-h/malaya.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5210257614402828002" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SE6NsfbBNuI/AAAAAAAAASk/eJISO1ZTUnA/s400/malaya.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மலாய் நாட்டினுடைய வரலாற்றை முறையாக தொகுக்கப்பட்ட வரலாறு எது என்று பார்ககும் போது ‘செஜாரு மலாயு’ என்ற பெரிய நூல் நமக்கு கிடைக்கிறது. அதை எழுதியவர் அப்துல் காதர் என்ற ஆசிரியர் ஆவார். அவர் மலேசியா நாட்டின் பல்கலைக் கழக பேராசிரியர் , நாகப்பட்டினத்தைச் சார்ந்தவர். நாகப்பட்டினத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து குடியேறி மலாய் நாட்டு மக்களுடைய கலாச்சார முறையை தொகுத்து மலாய் நாட்டிற்கே முறையான ஒரு வரலாற்றை உண்டாக்கிக் கொடுத்த பெருமை ‘செஜாரா மலாயு’ எழுதிய அப்துல் காதர் அவர்களுக்கு உண்டு என்பது தமிழ் முஸ்லீம்களுக்கு பெருமை தரும் விஷயம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;- சிராஜுல் மில்லத் ஜனாப் அப்துல் சமது சாஹிப் அவர்கள் பேங்காக் நகரில் தமிழ் முஸ்லீம் சங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6223067529971947074-921999191877109466?l=nagoori.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagoori.blogspot.com/feeds/921999191877109466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6223067529971947074&amp;postID=921999191877109466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/921999191877109466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6223067529971947074/posts/default/921999191877109466'/><link rel='alternate' type='text/html' href='http://nagoori.blogspot.com/2008/06/blog-post.html' title='தமிழக முஸ்லீம்கள்'/><author><name>அப்துல் கையூம்</name><uri>http://www.blogger.com/profile/05705220035284957135</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SE6NsfbBNuI/AAAAAAAAASk/eJISO1ZTUnA/s72-c/malaya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6223067529971947074.post-1920060945378379586</id><published>2008-05-30T05:04:00.000-07:00</published><updated>2008-11-13T02:21:00.884-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகூர் வரலாறு'/><title type='text'>நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை</title><content type='html'>&lt;div id="ms__id107"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SD_23r_luXI/AAAAAAAAASc/ApDkBp96m2k/s1600-h/Penang.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5206151130826258802" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SD_23r_luXI/AAAAAAAAASc/ApDkBp96m2k/s400/Penang.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_GkbItdgQDg0/SD_ulL_luWI/AAAAAAAAASU/ZnG9bjTyoss/s1600-h/193200321.jpg"&gt;&lt;/a&gt;பினாங், மலேசியாவில் இருக்கும் நாகூர் தர்கா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id44"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id47"&gt;ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை - 622 002 )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id51"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id45"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id46"&gt;நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் &lt;a href="http://www.milligazette.com/Archives/15062001/04.htm" target="_blank"&gt;ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு &lt;/a&gt;அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id53"&gt;நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id54"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id55"&gt;நாகூர் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id56"&gt;ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹுல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id74"&gt;இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை (5).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id57"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id56"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id129"&gt;நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id58"&gt;இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id76"&gt;நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது (9).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id77"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id57"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id130"&gt;தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id78"&gt;மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id61"&gt;கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id79"&gt;இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id81"&gt;1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id62"&gt;நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id82"&gt;&lt;/div&gt;&lt;div id="ms__id58"&gt;நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id63"&gt;நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id64"&gt;நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id84"&gt;நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id85"&gt;1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id86"&gt;அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id88"&gt;நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது (30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர் (31). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id89"&gt;முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="ms__id90"&gt;1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்க
